Thursday, April 1, 2010

இடைத் தங்கல் முகாமில் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு உங்கள் வாழ்க்கை பயணத்தில் ...


வெற்றிகள் மட்டுமல்ல
தோல்விகளும் ஏற்படலாம் -இது
உலக நியதி ....
வெற்றிகளை எமதாக்கும் வேளையில்
தோல்விகளையும் துணிவுடன் எதிர்கொள்ளுவோம்
தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது....


வீழ்ந்து விட்டோம் என எண்ணாதே
இலட்சியம் நிறைவேறும் கலங்காதே
மரணத்தையும் வெற்றி கொள்வோம்
அதுவரை தீராது எங்கள் வேட்கை .....


எதிர் காலம் பற்றிய எதிர்பார்ப்புக்களும்
ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்-ஆனால் அது
எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என
எண்ணக் கூடாது- இது
எல்லோர் வாழ்விலும் ஏற்படலாம்-ஆனால்
மனவுறுதியை தளரவிடக் கூடாது - உரிய வேளையில்
படிப்பை தொடர முடியாத நிலையில்
மனம் சோர்வடைவது இயற்கை தான் -ஆனால்
எங்கள் எதிர்காலமே பட்டு விட்டது என எண்ணக்கூடாது -இந்த
ஏமாற்றங்களும் இடைதங்கல் வாழ்வும்
சிறை வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நிலைக்காது
விரைவில் இதுக்கு ஒரு முடிவு வேண்டும் -அது
வரும் என உறுதியாக நம்புவோம் ....


அது வரை
கடுங் காற்றுக்கும்
கொட்டும் மழைக்கும்
நிமிர்ந்து நிற்கும்
நெடிய பனை போன்ற
மனவுறுதி உடனும்
இலட்சிய வேட்கை உடனும்
மகிழ்வுடன் வாழ பழகிகொள் ....

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails