பென்னாகரம் தேர்தல் தொகுதியில் தி.மு.க.வின் பெரிய அய்யாவாகிய எனது காரையும், சின்ன அய்யாவாகிய ஸ்டாலினது வண்டியையும் கூட சோதனையிட்டார்கள் என்று தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு முதல்வர் கலைஞர் கருணாநிதி பதில் அளிதுள்ளார்..
(இதைக்கேட்ட அனைவரும் சிரித்தனராம்)
மதிப்புக்குரிய பெரிய அய்யா..
உலக தமிழரின தலைவர் எனக்கூறிக் கொள்ளும் நீங்கள் அரை நாள் உண்ணாவிரதத்தில் யுத்தத்தை நிறுத்தி இலங்கை தமிழர்களுக்கு சுபீட்சத்தை பெற்று தந்ததையும் பழ நெடுமாறன் என்பவர் இலங்கைக்கு கொண்டு வர இருந்த மருந்து பொருட்களை தடுப்பதில் நீங்கள் காட்டிய பேரார்வமும் ஏற்கனவே உங்கள்மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையை அதிகரித்துவிட்டது.. தமிழினம் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் காட்டிவரும் உங்கள் செயற்பாடுகள் புல்லரிக்க வைக்கிறது..
அதிலும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளால் நமீதா அக்கா போன்றவர்களின் ஆடையலங்காரங்கள் தங்கள் கலாசார பற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு...
மதிப்புக்குரிய சின்ன அய்யா..
பூவோடு சேர்ந்து வேரும் நாறும் என்பது போல் ஆட்சிகதிரைக்கு சூடேற்றிக்கொண்டிருக்கும் தங்களின் தந்தை வாழும் வள்ளுவர் இருக்கும் இளங்கோ டாக்டர் கலைஞரின் மனைவிக்கு (ஸாரி எத்தனையாவதுங்கறது மறந்திடிச்சு) பிறந்ததால் தாங்கள் சின்ன அய்யாவாம்.
அப்டீன்னா அடுத்த தமிழின தலைவர் மு.க.ஸ்ராலின்!!
கலைஞராவது பறவாயில்ல கவிதை எழுதறத வேலையா வச்சே ஆட்சிக்கு வந்தார்..
நீங்க சும்மாவே இளைஞர் அணி பொறுப்பை ஏற்றிருக்கீங்க!
அப்டீன்னா அடுத்த தமிழ் குடிதாங்கி நீங்களா?
இனி டாக்டர் விஜய் கூட அரசியலுக்கு வராராம்..
தமிழர்களுக்கு நல்ல எதிர்காலம் கண்ணில் தெரியுதுங்கோ...
இது வரைக்கும் பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்கோ..!
உங்க கருத்தையும் சொல்லீட்டு போங்கோ..
தகுதியானதாயிருந்தா Vote போடுங்கோ..
5 comments:
உறைக்கின்ற உண்மைகளை வெளியிட்டமைக்கு நன்றி
நன்றி malgudi
நாமும் தமிழினத்தில் பிறந்ததால் இதை பதிவிட்டோம்..
ஆனால் இவர் திருந்தப்போவதுமில்லை..
பிரச்சனைகள் தீரபோவதும் சந்தேகமே..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
1000 kaikal marathaalum aathavan maraivathillai..
talaivar kalagnar is our godfather..
periyaar is our god.
bad post cool boy.
@Anonymous
அண்ணே நாங்கள் ஈழ தமிழர்கள்... அண்ணே உங்கள் தலைவர் கருணாநிதி எங்களுக்கு தலைவர் இல்லை.. இருந்தாலும் ஒரு கருத்தை சொல்லுறன் நீங்கள் சொன்னது ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று வன்னி போரில் இந்திய இரானுவத்தின் உதவியுடன் எமது உறவுகளை ஆயிரம் ஆயிரம் ஆக கொன்று குவித்த போது இத்தாலிகாரிக்கு பயந்து இருந்த ஒரு வேடிக்கை மனிதர். ஈழ தமிழர்கள் பிரச்னையை பாராளுமன்றத்துக்கு போய் கூட சொல்லாதவர் தனக்கு பாராட்டு விழா எடுக்கும் போது மட்டும் வந்து அனைவரையும் தன்னை பாரட்ட விட்டு கேட்டு கொண்டு தூங்கி விடுவார். இவர் போன்ற சந்தர்ப்ப அரசியல்வாதிகளை எனியும் ஆதரிக்க நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை அண்ணன் வழி தமிழர்கள்.
Post a Comment