Wednesday, April 28, 2010

சாமியார்களே அடுத்த ஹீரோ நீங்களாகக்கூட இருக்கலாம்.



சாமியார்களை போட்டு கிழித்துக்கொண்டு இருக்கிறது சன் டிவி, இவய்ன்க எல்லாம் காலங்காத்தால எழும்பி பல்லு விளக்கிறாஙகலோ இல்லயோ கமராவும் கையுமா துப்பு துலக்க கிளம்பிடுவாங்க போலிருக்கு, என்று சாமியார்கள் சஙகடப்படும் அளவுக்கு சாமியார் பட்டியல் நீண்டு செல்கிறது. பிரேமானந்தா, ஜெஜெந்திரர், நித்தியானந்தா, கல்கி (இடயில் உஙகளுக்கு தெரிந்த சாமியார் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நாளை அவர்களும் சன் டீவியை அலங்கரிக்கலாம்) இந்த வரிசையில் இறுதியாக ஒரு கொமவை(,) கூட்டியிருப்பவர் வசந்த்குருஜீ. கைகளில் குங்குமம் வரவைத்தல்,பெண்டுகளை சாமியாட வைத்தல்(பஜனைகளில் குத்து பாட்டு பாடினால் மட்டும்..),வாயிலிருந்து லிஙகம் எடுத்தல்(எண்ட வாயிலையும் அசிங்க அசிங்கமா வருகுது, என்ன பண்ணுறது மாறி வாறது லிங்கம் எண்டா என்னையும் சாமி எண்டுவானுகல்) போன்ற வழக்கமான மோடி மஸ்தான் வேலைகளால் தன்னையும் ஒரு சாமியாராக்கிகொண்டார். தவறு சாமியாராக காட்டிக்கொண்டார்.

ஒருகாலத்தில் கோமணத்துக்கே சிங்கி அடித்த சாமியார்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். கஷ்டம் எண்டு வரும் கஷ்டமர்களுக்கு நெற்றியில் கொஞ்ச திருநீறை இழுத்து விட்டு முடிந்தால் ஓரிரு பூக்களும் சேர்த்து கொடுத்து பணக்கத்தைகளை டவுன்லோட் செய்கிரார்கள். இன்றய கால கட்டதில் பெண்களை கவர சாருக்கான்,சல்மான்கானாக எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை,சாமியாராக இருந்தாலே போதும்.இப்படி சக்சஸ் ஃபுல்லாக போய்க்கொண்டிருந்த சாமியார் பிஸ்னசில் பெரிய கல்லை தூக்கி கடாசியிருக்கிறது சண்டீவி. நல்லா போய்க்கிட்டிருந்த சாமியார் பிசினஸ் இன்று சீடீக்களிலும் சில்லறை கடைகளிலும் செய்திகளாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.

சாமியார்களே கவனம் அடுத்த ஹீரோ நீங்களாகக்கூட இருக்கலாம், தொழிலுக்கு போகும் போது நன்றாக ஒரு தடவை உன்களை சோதித்துகொள்ளுங்கள். உங்கள் கமக்கட்டுகளில் கூட கமராவை பதுக்கி வைதிருக்கலாம்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//உங்கள் கமக்கட்டுகளில் கூட கமராவை பதுக்கி வைதிருக்கலாம்.//

உண்மை!
அத்தனை தொலைக்காட்சியும் இந்த சாமிமார்களைத் தொடர்வது நல்லது.

Anonymous said...

நீங்க ரெண்டாவதா போட்டிருக்கிற போட்டோவ பாத்ததும் “கல்லை மட்டும் கண்டால் லிஙகம் தெரியாது“ பாட்டு ஞாபகம் வருதுங்கோ..!
தலைப்ப பாத்துட்டு பறந்தடிச்சு ஓடி வந்தம்..

Kiruthigan said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
எப்பிடி சார் சொல்லி வச்ச மாதிரி அனேகம் சாமிமாரும் களவாணிப்பயலுகளாவே இருக்கானுகள்..
நம்புறவங்கள் பாவம் சார்..

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails