Monday, April 19, 2010

தமிழ் நாட்டு தலைவர்களே ஒரு நிமிடம்...!

காந்தி பிறந்த தேசம் அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்ற இந்தியா பல இனங்கள் வாழும் தேசத்தின் மனிதாபிமானத்துக்கு ஒரு உதாரணம் இங்கு காணலாம்.
இலங்கை இரசாங்கத்துக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கான வரலாற்று நிகழ்வொன்று கீழே

(ஐயையோ சுப்புற மணிய சுவாமிஜிக்கு புடிக்காத காட்சி ஒன்னும் கடைசீல வந்திட்டுதே! அதுதாங்க இலங்கை ராணுவத்திடம் இந்திய பிரதமர் அடி வாங்குறது..)
இந்திய படைகள் இலங்கையில் செய்த வேலைகளை யாராவது சராசரி ஈழ அகதியை கேட்டுப்பாருங்கள்..

முன்பு பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து விட்டு சென்ற போது 2002 ஆட்சியிலிருந்த அம்மா மீண்டும் தமிழ் நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கூறியதை சிரமேற்கொண்டு இப்போது அனுமதி மறுத்து விட்டீர்களாமே!
அற்புதம்! தாங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றும் தன்மை கண்டு பூரிக்கிறோம்..
அப்படியே கலைஞர் ஆட்சி மீது அம்மா கொடுத்த புகார்கள் எங்கே போயிற்று என்று கேட்க மாட்டோம்.. ஏன்னா அவங்க காங்கிரஸின் கூட்டணியாச்சே!

 இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை இல்லை - என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்
 அய்யா ஆளும் இத்தாலி நாட்டுகாரருக்கும் இந்திரா காந்தியை சுட்ட சீக்கியரை பற்றியும் நாங்க வாய் திறக்க மாட்டோம்...
ஏன்னா கண்ட படி யாரும் வந்து தங்கி செல்ல இது தர்ம சாலை இல்லை வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு...

பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது-கலைஞர் 
அய்யா தெரிஞ்சிருந்தா வெத்திலை வச்சு வரவேற்றிருப்பீர்கள் என்று தெரியும்.
உலக தமிழரின தலைவர் எனக்கூறிக் கொள்ளும் நீங்கள் ஒபாமாவாலேயே பேசி நிறுத்த முடியாத யுத்தத்தை அரை நாள் உண்ணாவிரதத்தில் நிறுத்தி இலங்கை தமிழர்களுக்கு சுபீட்சத்தை பெற்று தந்ததையும் பழ நெடுமாறன் என்பவர் இலங்கைக்கு கொண்டு வர இருந்த மருந்து பொருட்களை தடுப்பதில் நீங்கள் காட்டிய பேரார்வமும் ஏற்கனவே உங்கள்மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையை அதிகரித்துவிட்டது.. தமிழினம் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் காட்டிவரும் உங்கள் செயற்பாடுகள் புல்லரிக்க வைக்கிறது.


அந்த வரலாற்று நிகழ்வை காண இங்கு க்ளிக்குக.

போலீஸ் கமிஷனர்க்கே தெரிந்திருந்த விடையம் முதல்லருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
இதைபார்க்கும் போது புரியுகிறது தங்களின் வாய்மையின் தூய்மை



அன்னையின் சிலையை எந்நேரமும் அலுவலகத்தில் வைத்திருக்கும் உங்க தாய்ப்பாசம் மெய்சிலிர்க்க வைக்குது.. 
இதைப்பற்றி மக்கள் என்ன பேசிக்கிறாங்கன்னா.. மக்கள் கிடக்கறானுங்க இலவசமா எதயாவது குடுத்தா எல்லாத்தயும் மறந்துடுவானுங்க..


மருத்துவ தேவைக்காக வந்த அந்த மூதாட்டி செய்த குற்றம் தான் என்ன?

இங்க Comment பண்ணுங்கப்பா...!

2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மருத்துவ தேவைக்காக வந்த அந்த மூதாட்டி செய்த குற்றம் தான் என்ன?


//

தமிழராகப் பிறந்ததுதான் சார்...

சே.. கொடுமையான மனிதர்கள்

Kiruthigan said...

@பட்டாபட்டி..
தமிழராய் மட்டும் பிறந்ததுமில்லாமல்
“மான தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான் படை கண்ட முதல் தமிழனையும்“ தன் கருவில் சுமந்தமைக்கான தண்டனை இது..

பட்டாபட்டி சார் உங்க அளவுக்கு என்னால காரசாரமா குத்திகாட்ட தெரியாது..
வருகைக்கம் கருத்துக்கும் நன்றி சார்

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails