தமிழ் நாட்ல ப்ளாக் வச்சிருக்கிறவங்க வாழும் வள்ளுவர் ஐயாவ எப்படி எல்லாம் புகழ முடியுமோ அப்படியெல்லாம் புகழ வேண்டும்...
எங்காவது அநீதி கண்ணுக்கு தென்பட்டா அத அங்கயே மறந்திடணும்
இல்லைனா சவுக்கு சங்கர் மாதிரி தேசதுரோகி ஆய்டுவீங்க
இலங்கைல ப்ளாக் வச்சிருக்கிறவங்க மக்கள் பிரச்சனைகள் பத்தி தாராளமா எழுதலாம் ஏன்னா ஆழும் தரப்பு தமிழ் ப்ளாக் படிக்கறதில்லை..
யாராவது எட்டப்ஸ் படிச்சாங்கன்னா அவுங்க எப்பவோ திருந்தியிருப்பாங்க...
பதிவுலகில இருக்கற பலருக்கு தலையாய கடமை ஒண்ணு இருக்கு அதாவது விஜய் படம் ஓடணுமா இல்லைனா அஜித் படம் ஓடணுமாங்கிறது. இந்த முக்கிய விசயத்த கவனிக்கற விட்டுட்டு நாட்ல நடக்கறதல்லாம் யாராச்சும் எழுதுவாங்களா என்ன...!!!
ஹிட்ஸ் வேணும்னா தான் இருக்காங்களே குஷ்பு அக்கா நித்தி அண்ணா போன்ற மாமனிதர்கள்.
மன்னர்கள் பரம்பரையாக குடும்பமாக நாட்டை ஆள்வார்கள்
புலவர்கள் அவர்களை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவார்கள்
மன்னருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துபவர்கள் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்..