Monday, August 30, 2010

வானுயர்ந்த சோலையிலே...


எனது ஊரில் நான் கிருத்திகன். இந்த நாட்டில் யாழ்ப்பாணத்தான் இந்த கண்டத்தில் இலங்கையன் அமெரிக்காவின் பார்வையில் ஆசியாக்காரன்..
நான் பேசும் மொழியைப் பேசுவேர் உலகில் எட்டு கோடி போ்.
உலக நாடுகளுக்கு சீனா காகிதம் கொடுத்தது..
ஸ்ஹொட்லாந்து சைக்கிள் கொடுத்தது..
ஹொலான்ட் கடிகாரம் கொடுத்தது..
அமெரிக்கா தொலைபேசி கொடுத்தது..
இங்கிலாந்து தொலைக்காட்சி கொடுத்தது..
பிரான்ஸ் தையல் இயந்திரம் பொடுத்தது.
இதல்லதத்தயும் பாவிச்சிட்டிருக்கிற நாம என்ன கொடுத்தேபாம்?

அரிய பல இலக்கியங்களையும் சமய பண்பாடுகளையும் கொடுத்துள்ளோமே!
நாக்கு வழிக்கும் கருவியை கூட நாம் கொடுக்கவில்லை...
இந்த உலகில் கொடுப்பவனுக்கே இனி வாழும் அதிகாரம் உண்டு என்றால் நமக்கு?

ஒவ்வொரு இனமும் தமக்கென சில அடையாளங்கள் எச்சங்களை வைத்திருப்பது போல தமிழர்கள் தம்மை நினைவு வைத்திருக்க உலகுக்கு விட்டு வைத்திருக்கும் அடையாளங்கள் என்ன?

இப்ப நாங்க இருக்கிற உலகம் தகவல் தொழிநுட்ப உலகமாம்.
மனித மூளை கண்டுபிடித்த தொலைபேசியையே முழுமையாக பயன்படுத்த தடுமாறும் நம் அயலில் வீடியோ பேச்சு இணைய அரட்டை போன்றவை பரவ எத்தனை காலம் தேவை?
இவை பற்றி தெரிந்தவர்களும் ஆக்கபூர்வமான தகவல்களை தேடுவதை விட அரட்டைகளிலேயே மூள்கிகிடப்பது ஆரோக்கியமானதா?
தேடுபொறிகளில் ஆங்கிலத்தில் கிடைக்கும் தகவல்களின் அளவோடு தமிழ் தகவல்களை ஒப்பிடவே முடியாமல் இருந்தாலும் தமிழ் வலை பதிவர்களின் கைவண்ணங்கள் ஓரளவு ஆறுதலளிக்கின்றன..
யாழ்தேவி போன்ற திரட்டிகளில் இணைவதால் அவை பலரை சென்றடைகின்றன..
யாழ்தேவியின் அங்கீகாரத்தால் தினக்குரலில் வெளியாகும் பதிவுகள் இணைய பாவனை அற்றோரிடையேயும் சென்றுசேர்கின்றன..
என்னையும் நட்சத்திரமாக அங்கீகரித்த யாழ்தேவிக்கு மீண்டும் நன்றிகள்.


இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, August 23, 2010

வீழ்வது யாராயினும்...02


சொன்னால் நம்பமாட்டீர்கள்.. 
ஏனெனில் அவளை வர்ணிக்க அந்த வார்த்தை மட்டும் போதுமானதாயில்லை..
கு கூச்சசுபாவம் மிக்கவன் என்பதால் அழகைபற்றி இங்கு வர்ணிக்கவில்லை பார்க்கும் யாரையுமே மண்டியிடவைக்கும் குடும்ப பாங்கான ஏஞ்சல்....

நெஞ்சுக்குள் யாரோ பாறாங்கற்களை போட்டது போன்ற உணர்வு ரகுக்கு..
இது வரை யார் முன்னிலையிலும் அழுதிராத ரகுவின் கண்களில் இப்போது நீர்த்துளிகள்.. இது எந்த வகையான உணர்ச்சியின் வெளிப்பாடு என சரியாக சொல்லமுடியவில்லை..
மேடையில் நின்றுகொண்டிருந்தவன் அருகில் ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறைக்குள் நுளைந்து கண்களை துடைத்துக்கொண்டான்.. வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஆனந்தம்..


அவளருகில் சென்று என்ன பேசவேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டு அவளருகில் தனக்கான ஆசனத்தில் சென்றமர்ந்தான்...


அடிவயிற்றில் ஏதோ அமிலம் சுரப்பது போல இருந்தது..
கால்கள் ஏன் தானாக உதறுகின்றன என எண்ணியவாறு அவளை கடைக்கண்ணால் பார்த்தபோது அவளும் ஏதோ பேசுவதறகு தன் மூஞ்சியையே பார்ப்பது போல இருந்தது... பிரமையோ தெரியவில்லை..
மற்ற மாணவர்கள் இப்போது ஓரளவுக்கு மாணவிகளுடன் நட்பாகி பேச ஆரம்பித்திருந்தனர்.

நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது..


கூல்டிரிங்ஸ் கொண்டு வந்த மாணவன் ரகுவுக்கு பரிமாறினான்.. 


அடுத்து மித்ரா தன் கையால் எடுக்கும் போது தவறி ரகுவின் காலில் கொட்டிவிட்டது.. அவள் கையும் நடுங்கியிருப்பது புரிந்தது..
கீழே விழுந்த டம்ளரை எடுத்து வைத்தபோது அவள் ஏதோ சொன்னாள்..
ஆனால் காத்து தான் வந்தது..
மறுபடியும் குரலை சரிசெய்தவாறு

“SORRY..." சொன்னவாறே தனது கைக்குட்டையால் ரகுவின் தொடைமீது கொட்டிய குளிர்பானத்தை சுத்தம் செய்தாள்...

“ It's ok. Whatever it is, it's ok. There isn't a problem until you think there's a problem...'

தமிழ் மறந்து போயிற்றா எனக்கு என தன்னையே வியந்தான் ரகு..

முதன் முறையான இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்..

நீங்க ரகு தானே..
நான் தான் உங்ககிட்ட கட்டுரை கேட்டிருந்தேன் ரொம்ப நல்லாருந்தது Thank You.

நீங்க தானே மித்ரா?


பரஸ்பர உரையாடல்களுக்கு பின்.. ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று..


“உங்க பெஸ்ட் ஃபரண்ட யாரு..?“


வினோத்தை காட்டினான்.
உங்க பெஸ்ட் ஃப்ரண்ட்?


நீங்க தான்..


மீண்டும் உடல் சிலிர்த்தது ரகுவுக்கு..


விழா இனிதே முடிந்தது அன்று தன் நண்பர்களுக்கும் மித்ராவை அறிமுகம் செய்து வைத்தான் .


அன்று ஆரம்பித்த உறவு பின் வந்த நாட்களில் கிரிக்கட் போட்டி பாடசாலை விழாக்கள் கோயில்கள் கல்வி நிலையங்கள் என சந்திப்புகள் தொடர்ந்தது..
இருவருக்கும் நல்ல புரிந்துணர்வும் நெருக்கமும் ஏற்பட்டிருந்தது..


அவளின் அன்பிலும் போடா வாடா என அவள் காட்டும் அக்கறையிலும் கிறங்கிப்போயிருந்தான் ரகு.. இது வரை எந்த பெண்ணும் இப்படி பேசியதில்லை... உலகமே இப்போது வேறு மாதழரி தெரிந்தது..


நல்லதொரு நாளில் தன் வீடடுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான் ரகு..
வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்தான்...


மித்ரா உன்ன பத்தி ரகு நிறைய சொல்லியிருக்கான்..
உன்னோட பழக தொடங்கின பிறகு தான் நல்ல உடுப்பு போடுறான்.. ரொம்ப நேரம் தலையிழுக்கிறான்... 
ரெம்ப மாறீட்டான்.. உன்னால அவன் நல்ல மனுசனாயீட்டான்..


“அப்டியா ஆன்டி...“ அழகான பல்வரிசையால் சிரித்தாள்..


கட்டிக்க போறவ முன்னாடி நக்கலடிக்காதீங்கம்மா...  அம்மாவை கட்டி பிடித்தபடி ரகு சிணுங்கினான்..
அவர்களின் குடும்பமும் கள்ளங்கபடமில்லாமல் பழகுமியல்பும் மித்ராக்கு பிடித்திருந்தாலும்..
என்ன நினைத்தாளோ 
“எனக்கு டைம் ஆயிட்டுது.. நான் போய்ட்டு வாறேன்...”
குடித்து கொண்டிருந்த டீயையும் வைத்துவிட்டு வேகமாக சென்று விட்டாள்.


பின்னர் மித்ராவை ரகு சந்தித்தபோது குரலில் கடுமை காட்டினாள் மித்ரா..


நகைச்சுவைக்காகவே அவ்வாறு கூறியதாக சமாளித்தான் ரகு..ஆனால் உள்ளே பட்சி நீதான் என் பத்தினி என்றது..


பாட புத்தகத்தை விரித்தால் அங்கும் மித்ராவே தெரிவாள்...


உயர் தர பரீட்சையும் கடந்தது.. 
பள்ளி வாழ்க்கை முடிந்திருந்தது ரகு இளைஞன் ஆகிக்கொண்டிருக்கிறான்... அடுத்து வந்த நாட்களில் வகுப்புகள் இல்லாத படியாலும் உள்நாட்டு யுத்தத்தின் மாற்றத்தாலும் சந்திப்புகள் அரிதாகின...
ஆனாலும் சளைத்தவனா ரகு..
காண்போர் கொக்குவில் சந்தியை வாடகைக்கு எடுத்து விட்டானோ! என வியக்குமளவுக்கு அவள் வீட்டு தெருவையே சுற்றி சுற்றி வந்தான்.. 


ஏறக்குறைய நண்பர்கள் வட்டம் மாறிவிட்டிருந்தது... வினோத்துடனான நட்பு மட்டும் தொடர்கிறது...
“மித்ராக்கு நான் லவ் ப்ரப்போஸ் பண்ண ஒரு ஐடியா சொல்லுடா..“
அம்பாணி பிஸ்னஸ்க்கு ஐடியா சொல்பவன் போல யோசித்தவன் முகம் பிரகாசமடைந்தது..
ஆஹா ஏதோ புதுமையான ஐடியா கிடைச்சாச்சு போலிருக்கு...
வினோத் ஐடியா சொன்னான் 


“லவ் லெட்டர் குடுடா மச்சான்..“  (ங்கொய்யால இத சொல்ல தான் இந்த ஃபில்டப்பா..)


பெறுபேறுகள் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில்.. ரகுவுக்கு காதல் பெறுபேற்றை அறிவதற்காக தன் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி போதாக்குறைக்கு கவிஞர்களிடமும் திருடி (கட்டுரை எழுதவே என்னெல்லாம் செய்த ஆள் அவன்..) கடிதத்தை முடித்தாயிற்து...


இன்று பெறுபேறுகள் வெளியாயிவிட்டது...


மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் மக்கள்...சுர்ர்ர் என்ற வெயில்... ஷெல் சத்தங்கள் என ரம்பியமான சூழலில் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தாள் மித்ரா.. கோவிலிலிருந்து வருகிறாள்..

 முகம் பிரகாசமாயிருந்தது  கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வருகிறாள்..


வினோத்தை கண்டதும் கோயிலருகிலேயே சைக்கிளை நிறுத்தினாள்.


“ஹாய்... வினோத் றிசல்ட் என்ன மாதிரி..?“
சொன்னான்... (இவனுக்கு பெண்களிட்ம பேசும் போது மட்டும் திக்குவாய் திக்கு திசை தெரியாமல் ஓடி ஒளித்துவிடும் ...) 
“ரகுவுக்கு..?“
சொன்னான்..“
 தனதையும் சொன்ன மித்ரா 
“கையில் என்ன லெட்டர் மாதிரி..“
“லவ் லெட்டர்..“
“ஓ.. சொல்லவே இல்ல யாரவள் வினோத்?..“
“அது.. வந்து.. உங்களுக்கு தான் ரகு உங்களுக்கு லவ் ப்ரபோஸ் செய்யறான்..“


                                                                              (எதிர்பார்ப்புகள் தொடரும்...)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, August 19, 2010

வீழ்வது யாராயினும்..



(வீழ்வது யாராயினும்.. தொடர்கதை பாகம்-1. இது எம் சக பிரபல பதிவர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.. முழுவதும் படித்தபின் அவர் யாரென கண்டுபிடிக்க கூடியதாக இருக்குமென நினைக்கிறேன்.. அவரது ஆசியுடன் கதை வடிவில் எழுதுகிறேன்...நன்றி.)










 24 மணிநேரம் பிடித்தது ரகுக்கு...

எதற்கென்றா கேட்கிறீர்கள்?

ஒரு கட்டுரை எழுதுவதற்கு... அது சாதாரண கட்டுரையாயிருந்தால் உடனே முடித்துவிடலாம் ஒரு முகந்தெரியாத பெண்ணுக்காக எழுதிக்கொண்டிருக்கிறானே..

பாடசாலை.. வீடு.. டியூசன்.. நண்பர்கள்.. குறும்பு என பள்ளிப்பருவத்து வாழ்க்கையினை அனுபவித்துக்கொண்டிருந்தவன் ரகு...
அப்பேதே இலக்கிய ஆர்வ கோளாறு என பட்டம் வாங்கியிருந்தான்..
பாடசாலையின் தமிழார்வலர்களில் அவனும் ஒருவனென்பதால் எந்த விழாக்களிலும் ரகுவின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்...
ஒருமுறை எமது பாடசாலைக்கும் ஏனய பாடசாலை ஒன்றுக்கும் பட்டிமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..
பட்டிமன்றம் நடைபெறும் இடம் வேம்படி பெண்கள் பாடசாலை...
எதிரணியின் பேச்சு பீரங்கிகள் புயலை கக்கிக்கொண்டிருக்கின்றன..
நமது சாலமன் பாப்பையாவோ புயல்வீசிய பக்கமே சாய்ந்துவிடுவார் போலிருக்கிறது.. அப்புறம் நாட்டாம தீர்ப்ப மாத்துன்னு அப்பீல் கேக்க முடியாது..
ஏதாச்சும் அதிசயம் நடைபெற்றால் தான் எமது அணி வெல்லமுடியும் ஆனால்
வேம்படி பெண்களோ பங்காளி பள்ளி என்பதால் கரகோசங்களை எமக்கே வாரி வழங்கியது மாபெரும் ஆறுதலாக இருந்தது..
எல்லாம் நல்லவிதமாக சொதப்ப இருந்த நேரத்தில் எதிரணி புண்ணியவான் ஒருத்தன் ஸேம் சைடு கோல் போட்டதால் ரகுவு்ம் அதையே பிடித்துகொண்டு ஆவேசமாக பேசியதில் அந்த கோடையிலும் உச்சி குளிர்ந்த (அல்லது பயந்துபோன..) சாலமன் எம் அணி வெற்றியை அறிவித்தார்.

சிலநாட்களில் ரகுவின் தமிழ் ஆசிரியை மகளிர் தினத்துக்கு கட்டுரைஒன்று தேவைப்படுவதாகவும் அவனதுனது பட்டிமன்றத்தை பார்த்த யாரோ அவனை எழுதி தருமாறு கேட்டதாகவும் கூறியதை அலட்சியபடுத்தியபடி தனது கடமைகளில் மூள்கிவிட்டான்..
சிலநாட்களில் மறுபடியும் அழைத்தாள் ஆசிரியை

ஹே.. ரகு..“

ரகு தனக்குள் “டார்ச்சர் விடாது போலிருக்கே!..“

வேம்படி பெட்டை ஒருத்தி தான்டா கேட்டவள்...”

ஙே..!!!”

ஏலாட்டி விடு வேறயாரயும் கேட்டு பாக்கிறன்...

என்ன டீச்சர் நீங்கள் கேட்டு செய்யாம இருப்பனா... நாளைக்கே தாறன்...“

யாரோ ஒருத்தி தன் பேச்சாற்றலையும் திறமையையும் மதித்து என்னட்ட கேட்டிருக்கிறாள்.. எல்லா பெட்டையளும் இங்கிலீஷ்ல ஃபில்ம் காட்டுற பெடியள தேட இது என்னை கேட்டிருக்குதெண்டா அவ்வளவு வடிவா எதிர்பார்க்கேலாது போலிருக்கே..!! சரி நமக்கென்ன கலியாணமா கட்டபோறம் என்றான் ரகு. அவள் அந்த டீச்சரின் வீட்டில் பர்சனல் வகுப்புக்கு வருபவளாம்..

ஒரு பக்கத்து வீட்டு பெண் போல அவள் முகம் இருக்குமென நினைத்த படி தன் இலக்கிய நாயகர்களான சுஜாதா.. வைரமுத்து.. போன்றவர்களின் புத்தகங்களெல்லாம் தேடி பிடித்து மகளிர் சம்பந்தமான குறிப்புகள் எடுத்து கண்விளித்து கட்டுரையாக எடுதிவிட்டு பாத்தா திருப்தி இல்லை..
யாரென தெரியாத பெண்ணுக்காக நித்திரை விழித்து மறுபடி மறுபடி எழுதியதில் குப்பை கூடை நிரம்பிவழிந்தது..

இதற்கு தான் 24மணி நேரம் பிடித்தது ரகுக்கு...

ஒரு வழியாக தூக்கம் தொலைத்து எழுதி முடித்து படுத்தபோது ஒரு புறம் சாதித்த திருப்தியும் மறுபுறம் ஒரு நாள் தூக்கம் போய்விட்டதே என்ற கடுப்பும் ஏற்பட்டது... பின்நாட்களில் அவளாலே மொத்த தூக்கமும் பறிமுதலாகபோவது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..

மறுநாள் தன் படைப்பை டீச்சரிடம் கொடுத்து விட்டு தன் ரசிகையை பற்றி கேட்க நினைத்த போதும் பதின்ம வயதுக்கேயான கூச்சம் அவனைனை தடுத்து விட்டது..

2 நாட்களுக்கு பின்பு...
கோடையின் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.. 
பாடசாலை தனக்கேயான கூச்சலுடனும் வழமையான அம்சங்களுடனும் இயங்கிக்கொண்டிருந்தது..
ரகுவின் பெயரிட்டு முதல்வர்கள் அறையில் ஓர் கடிதம் காத்திருந்தது...
முகத்தில் கேள்விக்குறியுடன் அதை பிரித்தபோது..
நீல நிற காகிதத்தில் சிவப்புநிற மையால் எழுதப்பட்டிருந்ததை படித்தான்
ரகு...
பகீரப்பிரயர்த்தனத்துக்கு விடை கிடைத்தது.
நன்றியுடன் மித்ரா

வகுப்பும் பாடசாலையின் பெயரும் இடப்பட்டு அழகான கையெழுத்துகளில் பெண்மை மின்னியது...
எவ்வளவு நேரமாக அதையே பார்த்து கொண்டிருந்தானோ தெரியாது மணியடிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். பாடசாலை முடிவதற்கு அடித்த மணி அது.. வீட்டிற்கு திரும்பிய பிறகும் மனதில் அந்த கடிதமே வந்து போனது..

யாரிந்த மித்ரா???

நண்பர்களிடத்தில் விசாரித்தபோது.. பல வித பதில்கள் கிடைத்தது
பெண்கள் பற்றிய பொது அறிவு கூடியவன் வினோத் தான்.. சமயங்களில் பொய்சொல்வதுண்டு.. ஆனால் நல்ல நண்பன். வினோத்திடம் கேட்டபோது..

க்எ..எந்த ம்..மித்ரா?

மித்ரா மகேந்ரன்

பாடசாலை வகுப்பு என்பவற்றையும் கேட்டவன் முகம் திடீரென மாறியது..

அடேய்.. அவ ஒரு தே..  தேவ... (என்ன சொல்ல போறானோ என அவன் வாயை பார்த்தபோது...)


அவ தேவதைடா...

ரகு குதூகலப்படுவதை வினோத்தால் உணரமுடிந்தது...


ஆண்கள் பள்ளியில் படித்த ரகுவுக்கு ஒரு பெண்ணிடமிருந்து வந்த கடிதம் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தது..அவளுக்கு பதில் அனுப்பினால் அவர்களது பள்ளியில் பிரித்துப்பார்த்து விட்டு தான் கொடுப்பார்கள். 









ஒரு சாராயப்போத்தலின் உதவியால் மித்ராவின் பள்ளி செக்கியூரிட்டியை மடக்கியாயிற்து அவனிடம் கடிதமும் கொடுத்தாயிற்து.. அவனும் கடிதத்தை அவளது வகுப்பிலேயே கொடுப்பதாக உத்தரவாதமளித்தான்..

சில வாரங்களுக்கு பிறகு...
முதல்வர்கள் பிரிவுபசார விழாவுக்கான ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தன... ரகு பிரதம விருந்தினர் விருந்தாளிகள் சம்மந்தமான பொறுப்புகளை ஏற்றிருந்தான்..
மண்டபத்தை மாணவர்கள் சிலர் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள்

நாளை விழா..
கன்டீனில் சிலர் மெதுவான குரலில் அரட்டையடித்து கொண்டிருந்தார்கள்..
ரகு கன்டீனில் நுளைந்தான் பாடப்புத்தகங்களை தொப்பென்று போட்டான் களைப்பாக இருக்கிறான் என்பதை உணர முடிந்தது..
டீயை உறிஞ்சியபடி விழா ஏற்பாட்டு ஃபைலை புரட்டினான்..

கடவுள் வாழ்த்து வரவேற்றது.. பிடிக்காதென்பதால் அடுத்த பக்கத்தை புரட்டினான்..
ஆசிசெய்தி.... அதிபர் புத்தி மதி சொன்னார்.. 
ப்ச்..“
பக்கங்களை தட்டிக்கொண்டு போனவனின் கண்கள் வருகைதருவேர் பட்டியலில் குத்திட்டு நின்றது..
குடித்துக்கொண்டிருந்த டீ வெளியே வந்துவிடும் போல புரையேறியது..

காரணம் பெயர் பட்டியலில் மித்ரா மகேந்திரன்..

அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு..

டீயை அப்படியே வைத்து விட்டு புத்தகங்களை அள்ளிகொண்டு மீண்டும் மண்டபத்துக்கே ஓடினான்..
மண்டபத்தை சிறிய வகுப்பு மாணவர்களின் உதவியுடன் மேலும் அழகாக்கினான்..
கதிரைகளின் வரிசைகளை நெருக்கமாக்கினான்..
அங்கிருந்த படியே நாளை மாணவர்கள் அமரும் ஒழுங்கு நிரலை தயாரித்தான் 
வேம்படி மகளிர் பாடசாலை மித்ரா மகேந்ரன்-35 வது ஆசனம்
ரகு-36 வது.. வினோத்.. ஏனயவற்றையும் கனகச்சிதமாக எழுதினான் பள்ளி முடிந்த பின்னரும் நின்று ஏற்பாடுகளை கவனித்தான்..
மாலை நல்லூரான் சன்நிதியில் வெட்கத்தை விட்டு பெரிய்ய்ய கும்பிடு போட்டான்..

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன் மணிக்கணக்கில் குளித்தான் நிலைக்கண்ணாடி கடுப்பாகுமளவுக்கு தலைவாரினான்..

வாசலையே பார்த்து கொண்டிக்கிறான் ரகு..
.
விழா ஆரம்பித்தாயிற்று..
கடவுள் வாழ்த்து 
அதிபர் ஆசிச்செய்தி
ப்ச்...
இன்னும் விழாவின் பிரதம விருந்தினர் வரவில்லை.. அவரா முக்கியம் நமக்கு.

யாழ்ப்பாணத்து வீஐபி களின் மேன்மையான குணம் நமது பிரதம விருந்தினரிடத்தும் இருந்தததால் சிங்கம் அரை மணிநேரம் தாமதமாகவே வந்தார்..
வரவேற்கும் பொறுப்பு ரகுவினுடையதாச்சே..
வாசலுக்கு சென்று மாலை போட்டு கைகுலுக்... ஓ... வேம்படி மாணவிகள் கூட்டம்... 
நம்மையுங்கடந்து மண்டபத்துக்குள் சென்றது..
நமது சிங்கம் அதிபருடன் சிரித்துப்பேசியபடி பாரியார் சகிதம் மண்டபம் நோக்கி 
சென்றுகொண்டிருக்கிறது..

ஆஹா...அன்ன நடை

மண்டபத்தை அடைந்ததும் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள் 35வது ஆசனத்தை பார்க்கிறான் ரகு.. முன்னால் நிற்பவர்கள் மறைப்பதால் தலைகளே அலை மோதின..
“..இப்ப கூடாது.. இந்த வேலைகளை முடித்தபின் ஆறுதலாக அருகில் சென்று அமர்ந்ததும் பார்க்கலாம்..“
என்ற மனஉறுதியோடிருந்தவன் எதேட்சையாக திரும்பியபோது...அங்கே..!!!!
ரகுவின் ரகசிய ரசிகைமித்ரா...
வினோத் சொன்னது சுத்த பொய்..
அவள் தேவதை இல்லை.
(தவிப்புகள் தொடரும்...)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails