Wednesday, December 29, 2010

ஸிக்ஸ்! ஸிக்ஸ்!! ஸிக்ஸ்!!! - 02


பதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..

இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.

ஆறுமுகன்
ஆறுபடையான்
ஆறுனி

பெருசா காசு கேக்கலாம்டா என்றான் றுனி
ஒரு கோடி கேக்லாண்டா த மூணா பிரிச்சிக்குவோம் என்றான் றுபடையான்
கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த றுமுகன் சிறிது நேரத்திலேயே றாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை றம்புறமாக திட்டிக்கொண்டு முயற்சியை கைவிட்டான்...

இவர்கள் ரொம்ப நேரம் யோசித்துகொண்டேயிருந்ததால் கால் வலித்திருக்கும் போல பூதம் மணலில் மர உக்கார்ந்து விட்டது.

இவனுங்க மூணுபேரும் சேர்ந்து யோசிச்சாங்க பெருசா என்ன கேக்கலாம்....!!!

நாங்க பாட்ர்ஷிப்பா பிஸ்னஸ் ஆரம்பிப்பம் மச்சான்...

மாடா... சினிமா படம் தயாரிக்கலாம் நானே ஹீரோவா நடிக்கிறேன்... உங்களுக்கு எதுக்கு சிரமம்..
ஆறுனியின் இந்த பேச்சினால் பாட்ர்ஷிப் முறிந்துவிடும் பாயமிருப்பதை உணர்ந்த ஆறுபடையான்
த சைட் பிஸ்னஸா பண்ணலாம் முதல்ல நாங்கள் வீட்ல ழகுக்கு வளக்கிற மீன் பிஸ்னஸ் ஆரம்பிப்போம் என முடிவெடுத்து...

மதிப்பிறக்குரிய பூதமே நிறைய மீன்களை தா என கோரஸாக கேட்க... 

சுறா முதல் நெத்தலி வரை அத்தனையும் ங்கு ஆஜராகின... (கடலில் தூண்டில் போட்டு பிடிக்க பட்டவை..)

நாம கேட்டது இந்த சுறாக்கள் இல்லை என ஆறுமுகன் கத்த தலையை சொறிந்த பூதம் ஒரு கூடை டிவிடிகளை வழங்கியது... 

ண்ணா இது வேணாங்ண்ணா... என்ற ஆறுமுகன் மீண்டும் 666 குழுவை கூட்டி சிறுவர்களுக்கு வியாபாரம் செய்யவென சிறிய மண்சட்டி பானை பிஸ்னஸ் ஆரம்பிப்பது என முடிவெடுத்தான். 

பூதமே ஒரு றை நிறைய சட்டி கொடு.... சட்டி கொடு...

 டுத்த கணமே  வர்களை சுற்றி மலைபோல் உள்ளாடைகள் குவிந்தன..

 டேய் பூதம்... நாங்க கேட்டது  டுப்புக்கு மேல வைக்கிற ஐட்டம் இடுப்புக்கு கீழ வைக்கிறத இல்லை...
என உள்ளேயிருந்து ஒரு  ஆறு தொண்டை கிழிய கத்தினான்...

ஒரு வழியாக  ந்த மலைக்குள்ளிருந்து வெளியேறிய ஆறுபடையான் வெளியே ஆறுனி மட்டும் மூச்சு வாங்க நிற்பதை கண்டு ' ஆறு...  ஆறு...' என கூப்பிட்டு பார்த்தான் உள்ளேயிருந்து ஆறுமுகன் குரல் கொடுக்க பூதத்தை பார்த்து மீண்டும் மூவரும்

 றை வெளியே கொண்டுவா என கத்தியதும்... 

தொண்டமனாறு அங்கே பாய்ந்து வந்தது...

 ற்றில் மூவரும் மூள்க தொடங்கினர். நீந்தி தப்பிப்பதற்காக தங்களை '   ன்னமாக மாத்து....' என கத்தினர்

 டுத்த கணமே வர்கள் சோறாக மாறி சேறோடு ஊரூராக ஊறி கரையொதுங்கினர்...

பக்கத்து வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்று சோற்றை கொத்தி தின்றுவிட்டது...

வயிற்றுக்குள் இருந்து  வர்களின் குரல் வந்தது...
மூதேவி... மீண்டும் எங்களை பழைய மாதிரி மாத்து... 

என்றதும் 666நண்பர்கள் கோழியின் வயிறற்றை கிழித்து மீண்டும் மனித வடிவுக்கு வந்தனர். 

இன்று மாலை புறப்பட்டவர்கள் இப்போது நேரம் இரவாகிக்கொண்டிருந்தது சிறுவர்களை வீட்டில் தேடி புறப்பட்டிருப்பார்கள் னால் இவர்களோ வேறோர் ஊரிலல்லவா நிற்கிறார்கள்... 

'மீண்டும் மாலை வரவேண்டும்...' என கட்டளையிட மூவரின் கழுத்திலும் ழகான பூமாலைகள் வந்து விழுந்தன.

'கரப்பொத்தான கவிட்டு போட்ட மாதிரி மூஞ்சில கிடாரம் மாதிரி காது வச்சு கொண்டு எருமை மாடு.. உனக்கு காது கேக்காதா...?“

என ஆறுதலாக திட்டினான் ஆறுபடையான்...

ஐயனே தங்களின் விண்ணப்பங்களையே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் அடியேனிலேதும் வழு கண்டீரோ...!!!“

'பண்டி... வா எங்கட ஸ்கூலு தமிழ் படிக்க...' என்றான் இன்னொரு ஆறு“

பூதம் தமிழ் படிக்குமா... 666சிறுவர்களின் ஆசைகள் நிறைவேறுமா என்பது அடுத்த பாகத்தில்...
தொடர்ந்து கதையை அழகாக கொண்டு செல்ல தொடர் கதையான கொலைக்காற்றை மிக சிறப்பாக வீச வைத்த லோஷன் அண்ணாவை அழைக்கிறேன்... யை
நன்றி

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, December 21, 2010

தில்லு முல்லு - சிறுகதை



ணினியில் நண்பன் ஒருவரின் ப்ளாக் வலைத்தளத்தை படித்துக்கொண்டிருந்தான் வேணு.
படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..

செல்போன் நச்சரித்தது அட! நன்பன் சிவா. எடுத்து பேசினான்
டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா? நாளைக்குள்ள சொல்லணும்.

போன வருசம் வாங்கினதே இங்க போடாம கிடக்கு அதுக்குள்ள எதுக்குடா இன்னொண்டு வேண்டிக்கிடக்கு..

அது வேற ப்ரின்டுடா இது க்ரிக்கட் ப்ரின்டுடா.. 800 ரூபா தானே நாங்களல்லாம் வேண்டுறம் நீயும் எடுத்தியெண்டா ஒண்டா போடலாம்...

அது சரிடா ஆனா ஒருநாள் போட்டுட்டு அப்பிடியே பெட்டீக்க தான் வைக்கணும்...

மச்சான் நாங்க உனக்கும் சேர்த்து வேண்ணுறம் சந்திக்கேக்க காச தந்தா போதும்டா..

800ரூபா ரொம்ப அதிகம்டா..

கேக்காமலே எங்களுக்கு எல்லாம் வாங்கி தாற நீயாடா இப்பிடி கதைக்கிறாய்..? ஓகே அப்புறம் ஒஃபிஸில மீட் பண்ணுறன் வைக்கிறன்
என்று கூறியவாறே பேன் கட் ஆனது..

வேணுவின் கண்கள் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வெறித்துபார்த்தன.. சுழன்றுகொண்டிருப்பது விசிறி மட்டுமல்ல அவனது எண்ணங்களும்தான்...

இது பிரைவேட் ஐ.ரி கொம்பனி இங்கே அவனுக்கு மட்டுமல்ல கூடவேலைபார்க்கும் 16 பேருக்கும் இதே நிலமைதான் கடுமையாக உழைப்பவருக்கே வேலை நிரந்தரமாக இருப்பதில்லை காரணம் அவர்களை வேறொரு போட்டிக்கம்பனி அதிக சம்பளத்துக்கு சுவீகரித்துக்கொள்ளும் அதே நேரம் கற்பனைத்திறன் ஒரேபாணியில் பயணிக்க தொடங்கினால் 'வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்க சேர்' என்று விடுவார்கள்.

யாராவது வாயைத்திறந்தா 'ஆமா சேர் உங்களுக்கு இந்த வேலை கஷ்டமாதான் இருக்கு எங்களுக்கு புரியுது இதைவிட குறைஞ்ச சம்பளத்தில வேலை செய்ய நிறைய அப்பிளிக்கேஷன் வெய்ட்டிங்ல இருக்குபா' நீங்கள் இங்கயிருந்து கஷ்ட படாம எங்கயாவது குழங்தைகளுக்கு MS Office படிப்பீக்கலாமே.. என்று பதில் வரும்.

றுநாள் ஒஃபிஸில் சிவாவும் விசாரித்தான்

“ஆனா எப்பிடிடா வேணு உன்னோடயே ஒண்டாப்படிச்ச திரு மட்டும் எப்படி வீடுகட்டி குடிபுகுறான். கார்ல கைகாட்டிகிட்டே போறான்.. ?“

“அவன் தனியா தொழில் பண்ணுறான்டா தனி ஒஃபிஸ் எடுத்து கொன்ராக்ட் எடுத்து ப்புரஜக்ட் செய்யிறான்..“

“ஏன்டா உன்னை அந்தமாதிரி பண்ணகூடாதெண்டு ஆரும் சத்தியம் கட்டினவயோ?..“

“ங்கொய்யாலே.. அதுக்கு ரொம்ப முதல் போடணும்டா. ஒஃபிஸ்க்கு அட்வான்ஸ், வாடகை, அட்வடிஸ்மன்ட், கம்யூட்டர்ஸ் நெட்வேர்க், வேர்க்கர்ஸ் எல்லாத்துக்கும் மேல கஸ்டமர்ஸ பிடிக்கணும்டா.. யாவாரமெண்டு வந்திட்டா நிறைய தில்லுமுல்லு பண்ணோணும்...

அவங்கள் எல்லாம் கஸ்டமஸ்ஸ பயப்புடுத்தி ஆறு நாள் வேலைய அறுவதுநாள் ஆகுமெண்டு சொல்லி ஆறுமடங்கு காச வேண்டிப்போட்டு ஐம்பது நாளுக்குள்ள முடிச்சு குடுத்து நல்லபிள்ள மாதிரி நடிப்பாங்கள். அதுவும் ஏற்கனவே சேய்த Software Source Codeக்கு வெளில மட்டும் மாத்திபோட்டு தன்ர கொம்பனி பேரோட தாங்கள் செய்தது மாதிரி குடுப்பாங்கள்டா...

ஆரோ மெனக்கெட்டு செய்ததுக்கு தான் காசுபாக்கிறான் இது பாவம் பெரிய தப்புடா... என்னால அதெல்லாம் பண்ணமுடியாது.. வம்சமே அழிஞ்சிடும்டா..“

“ஓஹோ நீ நேர்மையின் சின்னம் அரிச்சந்திரன் மறுபிறவி.. கொம்பனிக்கு 7 நாடுகள்ள பிறாஞ்ச்ஸ் இருக்கு இங்க இருந்தும் USAக்கு தானே வேலசெய்யிறியள் ஏன் உன்னேட வேல செஞ்ச சஞ்சீக்கு மட்டும் UKல வேலை மாற்றம் கிடைச்சிது?..“

“அவன் ஒண்ணும் என்ன மாதிரி திறமைசாலி இல்லை USAலருந்து செயாமன்(chairman) வந்தா இவன் அரரோடயே திரிவான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிறதிலயிருந்து கார் கதவு திறந்து விட்டு தண்ணில சேடா ஊத்தி கொடுக்குற வரைக்கும் செஞ்சான்..
USAகாறனுக்கு அவங்கட நாட்டில Software செய்விக்கிறத விட எங்கட ஊர்ல செய்விக்கிறது தான் மலிவா முடிக்கலாம்..“

“கதைய மாத்தாத திறமை திறமை எண்டுறியே அதுக்கான அங்கீகாரம் ப்ரமோஷனா தானே இருக்கேலும்? ஆனா காணமே..!!...“

“வரத்தான்டா போகுது பாத்துகொண்டே இரு இப்ப தான் ரீம் லீடர் Head officeக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்.. பாக்கலாம்டா..“
ன்று இரவு வீட்டில் செய்துகொண்டிருந்த Codeல் எங்கோ பிழைச்செய்தி வந்ததால் வெறுப்பாக டிலீற்ஐ தட்டி விட்டு கண்ணுக்கு Efemoline மருந்து துளிகள் இட்டுக்கொண்டு வேணு விரல்களில் நெட்டி முறித்தான்.
தன் மனம் இன்று தெளிவில்லாமல் இருப்பதை உணரக்கூடியதாயிருந்தது.. இனம்புரியாத வெறுமை வாட்டுவது போலிருந்தது..

செல்போனில் அன்று வந்திருந்த SMSகளுக்கு Reply போட்டான்.
நடுவே ஒஃபிஸ் ரீம் லீடரின் how is going new project? என்ற குறுஞ்செய்திக்கு பதிலனுப்பாமல் அவர் நம்பருக்கு டயல் செய்தான்.

“சேர் இண்டைக்கு ஒண்டு முடிச்சிட்டன் ஆனா இன்றும் பெட்டரா ஒண்டு ரை பண்ணலாமெண்டு பாக்கிறன்... ஓகே சார் நாளைக்கு ஒஃபிஸில பாப்பம்..“

மறுநாள்
ரீம் லீடர் அஷோக்கின் அறைக்குள் பென்ரைவுடன் நுளைந்தபோது அவர் செல்போனில் கதைச்சுக்கொண்டிருந்தார்.
“இன்றும் முடியேல்ல சேர் வேணுட்ட குடுத்திருக்கிறன்... டிலே ஆகிட்டுது சொறி சேர் மூண்டு நாள் ரைம் தாங்கோ.. புரியுது சேர்.. யெஸ் சேர்..“
என்று வைத்துவிட்டு

“கேட்டனீங்களெல்லே உங்களால தான் சொறி சொல்லிக்கொண்டிருக்கிறன்.. இந்த சிஸ்ரம் செய்யுற புரஜெக்ட எடுக்குறதுக்கு நாலு கொம்பனி அடிபட்டுகொண்டிருக்குது.. அவங்கள் ஒரு அபிமானத்தில எங்கட கொம்பனி டிசைனுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கிறாங்கள்... கனக்க பொறுமய சோதிச்சா புரஜக்ட் கைய விட்டே போயிடும்...“
என்று கரித்துக்கொட்டினார்...

“சொறி சேர் இந்த டிசைன பாருங்கோ“ என்று பென்ரைவை நீட்டிய வேணு “ஆனா ரெண்டு நாள் ரைம் தந்தா இதவிட பெட்டரா ஒண்டு செய்து தாறன் சேர்..“ என்றான்.

கையால் அவனை அமர சொல்லி தன் லப்டப்பில் பெனடரைவை செருகியவர் முகம் சிவந்தார்...
“திஸ் இஸ் வட் மான்? என்னாச்சு உங்களுக்கு? இப்பிடி சொதப்புறதுக்கு தான் ஏழு நாள் ரைம் எடுத்தனீங்களா? வேலைல கவனம் போயிடிச்சா?..“

“நான்தான் இன்னும் பெட்டரா பண்ணி தர்றேன்னு சொன்னனே...“

“எப்ப.. எல்லாம் கையை விட்டு போனாப்பிறகோ.. ஏழு நாள்ள புடுங்கேலாதத ரெண்டு நாள்ள புடுங்க போறிங்களோ? என்ர பிளை தான்.. அசைமென்ர தர்ஷிகாட்ட குடுக்கலாமெண்டு இருந்தன் நீங்க சீனியர் எண்டு தான் உங்களிட்ட தந்தன் இந்த லட்சனத்தில உங்கட புரமோஷனுக்கு செயாமனிட்ட எடுத்து சொல்லிகொண்டிருக்கிறன் பாருங்கோ நான் ஒரு இடியட்.. இங்க நிக்காதேங்கோ.. ஒரு நாலு நாள் லீவு எடுங்கோ.. கவனம் எங்கயும் சிதறினா இப்பிடி தான் உருப்படாத டிசைன் வரும்... “

“இல்ல சேர் ரெண்டு நாள்ள வேணுமெண்டா..“

“வேண்டாமெண்டா விடுங்கோ சரியோ இத நான் ஹானர்லி பண்ணுறன் நாலு நாள் லீவு டென்ஷன் படுத்தாம போங்கோ பிளீஸ்..“

தலை குனிந்து வெளியே வந்தான் அனைவரது கண்களும் அவனையே கவனித்தன உள்ளே ரீம் லீடர் சத்தம் போட்டது இவர்களுக்கு கேட்டிருக்கிறது

மாடி ஜன்னலில் தள்ளுவண்டியில் மீன் விற்று கொண்டிருந்தவன் “மாளு... மாளு....“ என கத்தி கொண்டு செல்வதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

செல்போன் சிணுங்க எடுத்தான் திரையில் IT Priya என்று இருக்க ஆர்வமில்லாமலே ’ஹலோ' சொன்னான்..

“haai Venu Goodmorng என்ன ஒஃபிஸ் பக்கம் காணல அதான் போன் பண்ணினேன்..“

“நாலு நாள் கட்டாய லீவு குடுத்திட்டாங்க ப்ரியா நான் செய்த டிசைன் ஆகலும் மட்டமாயில்லை ஆனா இன்னும் பெட்டரா செய்ய தயாரா தான் இருந்தேன்... ஆனா..“

“வேலைல எப்பவும் சின்ஸியரா இருப்பீங்களே.. “

“சின்னியரா இருந்து என்ன ப்ரியா பிரயோசனம்.. சரி விடு நீ என்ன பண்ணுவாய் எல்லாம் என்ர நேரம்..“

“வேணு ஒஃபிஸில எல்லாரும் பம்பலடிச்சு ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கேக்க நீங்க மட்டுந்தான் சின்சியரா இருப்பீங்க அது எனக்கு பிடிக்கும் அது தான் உங்கள இண்டக்கு காணேல்ல எண்டவுடன போன் பண்ணின்னான்..“

' ஓகே. நான் ஒஃபிஸில வந்ததும் உன்ன சந்திக்கிறன் Bye Priya..'

நான்கு நாட்கள் கழித்து அலுவலகம் வந்து கதிரையில் இருந்ததும் ப்ரியா வந்து

“விஷயம் தெரியுமா வேணு நம்ம ரீம் லீடருக்கு புரமோஷன். UK Officeக்கு போறார் மூண்டு மடங்கு சம்பளம் கார் வீடு எல்லாம் குடுத்திருக்கிறாங்கள்..“

“வாவ்.. அப்படியே!!?“ என்றன்

“ஓமோம்.. உங்கட டிசைன் சரியில்லை எண்டுட்டு ராப்பகலா இருந்து அவரே ரண்டு நாள்ள டிசைன் பண்ணி அனுப்பி வச்சார்.. அது UKல Ok ஆயி புரமோஷனும் கிடைச்சிட்டுது.. செயாமன் ஹப்பியாகி உடனே FAXல லெற்ரர் அனுப்பீட்டார்... நேற்று இங்கயிருந்து றிலீவாயிட்டார். நாளைக்கு UK வெளிக்கிடுறார். இத தான் மச்சம் எண்டுறது..“

“ம்..“

“அவர்ர டிசைன பாக்கிறியளோ..?“

ப்ரியா லப்டப்பில் அஷோக்'s புரஜக்ட் என்று சேவ் செய்யப்பட்டிருந்த C# பைலை ஓப்பிண் பண்ணியதும் அதிர்ந்து போனான் வேணு.

“ப்ரியா இ..இ..இது நான் ஏழு நாளா மினக்கட்டு செஞ்ச டிசைன்... இத தான் அவர் ரிஜக்ட் செய்தவர்.. உண்மயாதான்...“

ப்ரியா அவனை ஒரு மாதிரிப்பாத்து “ஜோக்கடிக்காதேஙக்கோ வேணு பொறாமைக்கம் ஒரு அளவு வேணும்..“
என்று தன் கதிரைக்கு சென்றுவிட என்ன கொடுமை இது!!! அக்கிரமம்.. பரபரவென்று முகம் சிவக்க எழுந்தான் சுழல் கதிரை பின்புறமாக சரிந்ந்து விழுந்ததைக்கூட பொருடபடுத்தாமல் manager அறை நோக்கி நடந்தான்.


ரீம் லீடர் அஷோக் தன் வீட்டு வரவேற்பறையில் இருந்து இரு பிள்ளைகளுடனும் ஹோம் தியேட்டர் திரையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தவர் வாசலில் பைக் நிறுத்தி வேணு இறங்குவதை கண்டதும் சோஃபாவில் வந்து சிரித்தபடி அமர்ந்தார்.

சப்பாத்தை கழட்டாமல் மேசைமீது சைஷவக்கப்பட்டிருந்த மலர்க்கொத்துகளை பார்த்தபடி வேணு உள்ளே நுளைந்தான்...

“வாங்க வேணு நானே போன் எடுத்து வரச்சொல்லோணுமெண்டு நினச்சன். இருங்கோ வைஃப் கடைக்கு போய்ட்டா ரீ போட ஆளில்லை என சிரித்தார்..“

“நான் வாழ்த்து சொல்ல வரேல்ல எண்டு உங்களுக்கு தெரியும்..“

“கோபமா இருக்கிறீர் போலகிடக்கு.. என் ஐடியாவ கேட்டா கோபப்பட் மாட்டியள் என்னண்டா.. உங்களுக்கு புரமோஷன் UKல தான் எண்டு எழுதி இருக்கு.. நான் அங்க இருந்தா ரொம்ப சுலபம் கண்டியளே.. இப்ப இருக்கிற ஒஃபிஸில உங்கள தான் ரீம் லீடரா இருத்தி அழகு பாக்க போறன்.. ஒரு மாசத்தில ஓடர் வரும் பாருங்கோ சந்தோசம் தானே..“

“அதுக்கு...“

“ஒரு சின்ன அஜஸமன்ட் தானே வேணு இது... அந்த டிசைன நானே செய்ததா ஒரு பொய் சொல்லிட்டன் இப்ப பாருங்கோ எனக்கும் புரமோஷன் என்னால உங்களுக்கும் புரமோஷன் வரப்போகுது.. ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...“

ஆத்திரத்தை அடக்கிகொண்ட வேணு

“அதோ அந்த மஞ்சள் ரீசேட்டோட வீடியோ கேம் விளையாடுற பெடியன் யாரு..?“

“என் ரெண்டாவது பையன் ரகு. ஏன்?..“

“மன்னிக்கோணும் சேர் ரகு உங்களுக்கு பிறக்கேல்ல அவன் எனக்கு பிறந்தவன்...“

டேய்....“
பதறி எழுந்து வேணுவின் சட்டையைப்பிடித்தார் அஷோக்.

“வலிக்குதெல்லே... அசிங்கமா இருக்கெல்லே... அவமானமா இருக்கெல்லே.. இது தான்டா இ.. இப்பிடி தான்டா நீ செய்ததும்...தூ.. நீ எல்லாம் ஒரு மனுஷன்..“

“ஏய்.. ஏய்.. ஆரோட கதைக்கிறாய் தெரியுமே... உன்ன UKபோனதும் வேலைல இருந்து தூக்கீடுவம்..“

“உன்னால ஏலாதுடா... நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு தான் இஞ்ச வந்திருக்கிறன்..எப்பிடி எப்பிடி அஜஸ்மன்டடா..?...“

வேணு பளார் என்று அறைய அஷோக்கின் கண்ணாடி பறந்து விழ இரண்டு பிள்ளைகளும் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“இப்ப தான்டா நீ ஆம்பிளை“ என்றான் சிவா.

“ஒரு கஸ்டமரை பாத்திட்டு தான்டா வந்திருக்கிறன். அவர் ஒரு லைபரரிக்கு சிஸ்டம் செய்ய ஓடர் குடுத்திருக்கிறார். நேர்மையா உழைப்பம் வர்றது வரட்டும்..“ என்ற வேணுவை கை குலுக்கி

“ ஆனானப்பட்ட ரொக்கட்டே நெருப்பு பட்டதும் தான்டா விண்வெளிக்கு போகுது.. வாழ்த்துக்கள் மச்சி.. இப்ப தான்டா கதையே தொடங்குது...“ என்றன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, December 16, 2010

SUPER STAR ரஜினி -என்னை பாதித்த 10 படங்கள்



மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...
ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.
வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.
Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.

தில்லுமுல்லு
யாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரியரால் எனக்கு தரப்பட்ட திருநாம் இது.. 
ரஜினி என்ற ஹீரே தனியே ஸரைல் மூலமாகவோ ஆக்ஷன் படங்களாலோ வெற்றிக்கொடி நாட்டியவர் அல்ல என்பதை நிரூபித்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்ரர்வியூ காட்சியில் வரும் I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow. நகைச்சுவை வசனம் என்னை மிகவும் கவர்ந்தது ஏன்னா இதே சீனை சமகாலத்துல அமிதாப்ஜியும் பண்ணியிருகாகாரு.. ஆனா எப்டியிருக்குன்னு ஒப்பிட்டு பாத்துக்குங்க.


பாட்ஷா
நினைவு தெரிந்த நாட்களில் நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்) நெறய்யபேரு “நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி“ன்னு சொல்லிட்டு திரிவாங்க ஏன்டா இவங்க நூறு தடவை இந்த ஒண்டயே திருப்பி திருப்பி சொல்றாங்கன்னு நெனச்சதுண்டு ஆனா படம் பாத்ததில இருந்து இப்ப வரைக்கும் நான் யாருக்காச்சும் வாக்கு குடுக்கும் போது இந்த வாக்கியமும் கண்டிப்பாக இடம் பெறுகிறது....  
மாணிக்கமாக முதலில் ரஜினி நிறையவே ஒதுங்கிப்போவார் பின்னர் தன் ஃப்ளாஷ்பேக்கில் தன் கடந்த கால அடிதடி வாழ்கையை பற்றியும் அது காலத்தின் தேவையாலேற்பட்டது எனவும் கூறி தூள்கிளப்பிய படம்.
ஸ்ரைலுக்காகவும் வசனங்களுக்காகவும் நான் பல தடவை பார்த்த படம்.

முத்து
இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த காலங்களில் பாடல்கள் வெளியாகி கொளும்பு சர்வதேச ஒலிபரப்பு ரேடியோவில் கேட்டதுண்டு(அப்ப நியூசுக்காக வீட்டில் பேட்டரி ரேடியோ போடப்படும் நேரத்தில் ஏரியாவே அந்த இடத்துக்கு ஷிஃப்ட் ஆகி அமைதியா உக்காந்திருக்கும்..)
படத்தை சிறுவயதில் பார்த்தபோது ரஜினியை தவிர எதுவுமே நினைவில் இல்லை...
 பின்னாளில் ரஜினி மீனாவுடன் மேடையில் பேசும் காட்சியை வகுப்பில் பேசி மற்றவர்களின் வாயை பிளக்கவைப்பதுண்டு... 

அண்ணாமலை
பாடல்கள் வெளியானதும் ஊருக்குள் அனைவர் வாயிலும் ஒலித்ததால் பிடித்துபோனது பின்னர் தான் யாழ்சேவை ரேடியோவில் கேட்டதுண்டு (அப்ப அந்த ரேடியோ டிக்ஷனரியில் புதுப்பாட்டு என்பது வெளியாகி 6மாதம் கடந்த படங்களிலிருந்து ஒலிப்பது) இந்த சூழ்சிலையே படம்பார்க்கும் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது பின்நாளில் மனதில் நின்ற படங்களில் ஒன்றாகியது.


அருணாச்சலம்
ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால் அன்று இரவு அந்த அயலுக்கே கொண்டாட்டம். ஏற்கனவே பார்க்காமல் பென்டிங்கில் இருக்கும் பூப்புனித நீராட்டுவிழா கொப்பியையும் அன்று தான் பார்ப்பார்கள். ஊரில் ரீவி டெக் வாடகைக்கு விடும் ஒருவரை பிடித்து ஒவ்வொருவரும் பங்கு போட்டு ஜெனரேட்டருக்கு மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து மாலையில் விழா ஆரம்பமாகும் முதலில் சொந்தகாரர் கலியாணவீட்டை பார்ப்பார்கள் பிறகு பெரியவர்கள் திருவிளையாடல் வசந்த மாளிகை (ஊருக்குள்ள எப்ப படம் போட்டாலும் இதயேதான்... ) பார்ப்பார்கள் ஏதாவது ஒரு விஜயகாந் படம் இளைஞர்கள் எற்பாட்டால் திரையிடப்படும். இப்படியான ஓர் நடுநிசியில் பார்த்த படம் அண்ணாமலை.
படத்தின் கதையைவிட ரஜினியும் அந்த படம் பார்த்த சூழலுமே அந்தப்படத்தை பற்றி பசுமையான நினைவுகளாயுள்ளது. (இப்ப 6 படம் உள்ள டிவிடி 50ரூபாய்.. மடிக்கணினியில் Blue rayயில் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி கிடைத்ததில்லை)


படையப்பா
இதுவும் மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் பார்த்த படம் தான் படம் பார்த்த போதுதான் பாடல்கள் அறிமுகமாயிற்று... படம் பார்த்து பல காலத்துக்குபின்னும் வெற்றிக்கொடி கட்டு பாடல் இசை மனதில் ஒலித்துகொண்டேயிருந்தது. ரஜினி புலியாக மாறுவது மற்றும் வேல் பறந்து வரும் க்ராபிக்ஸ்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு (இப்ப அதல்லாம் கைவந்த கலை என்பது வேறு...) நீலம்பரி வீட்டில் ஊஞ்சலை இழுத்து போட்டு உக்காருவது சுருட்டை சுற்றுவது பாம்புக்கு முத்தம் கொடுப்பது என சில காட்சிகளே அந்த வயதில் மனதில் நின்றன... அப்போது தான் ராஜா தியேட்டர் ஜீன்ஸ் படத்துடன் கோலாகலமாக இயங்க தொடங்கியிருந்தது (புலமைபரிவில் சிறப்பாக பாஸ் செய்ததால் என் முதல் தியேட்டர் பிரவேசமும் அதுவே...) படையப்பா தியேட்டரில் ஓடும் போது கட்டாயம் கூட்டிப்போகவேண்டும் என வீட்டில் வரம் கேட்டடு அனுமதித்தார்கள் ஆனால் இன்னும் படையப்பா அந்த தியேட்டரில் ஓடவேயில்லை...


பாபா
ஸ்பைடர் மேன் பாதிப்பு இருந்ததாலும் ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பை எகிறவைத்ததாலும் (சின்னிஜெயந்தின் “ஒரு தடவை சொன்னா“  படமும் ஒரு காரணம்..) படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடியது... படம் வெளியான புதிதில் வவுனியாவில் தங்கியிருந்த ஹோட்டலில் பார்த்த படம்(பள்ளியில் நான் தான் முதலில் பார்த்தேன்...). “பாபா கவுண்டிங் “ காட்சிகளும் நடைகண்டு அகங்காரம் பாடலும் விரும்பி ரசித்தேன்... 


சந்திரமுகி
16 வயதினிலே (எனக்கு தான்) படம் ரிலீஸாகும்நேரம் (சந்திரமுகி தான்) நமக்கு chicken pox வந்து 16 நாட்கள் எங்கேயும் போககூடாது என்று சொல்லிவிட்டார்கள். பொழுது போவதற்காக ஆனந்த விகடன்கள் என் படுக்கையை சுற்றி நிறைந்திருந்தது காலக்கொடுமையாக ரேடியோவில் பாடல்களும் அத்தனைபுத்தகங்களிலும் சந்திரமுகி பற்றிய நியூஸ்களும் வித்யாசாகர் போன்றவர்களின் பேட்டிகளுமாக என்ன கொடும சரவணா...!!! 
ஆர்வகோளாறில் இடையிலேயே சுகமாகிவிட்டதாக கூறி குலதெய்வம் கோயிலில் தோய்ந்து விட்டு அடுத்தநாள் நண்பர்களோடு தியேட்டருக்குள் புகுந்துவிட்டேன்....
சச்சின் விஜய் ரசிகர்கள் பாடசாலையில் நம்மோடு யுத்தம் செய்த வரலாறுகளுமுண்டு 
அப்புறம் தெலுங்கு டயலாக்ஸ் கூட மனப்பாடமாகும் வரை பார்த்து தீர்த்து விட்டோம்
900+ நாட்கள் ஒடிய படத்தின் சிறப்புகளை நான் இங்கு சொல்லதான் வேண்டுமா?


சிவாஜி
சங்கர் ரஜினி ரகுமான் சுஜாதா காமினேஷன் என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கும் போதே தியேட்டருக்கு போக வீட்டில் அனுமதி பெற்றுவிட்டேன். 


ரிலீஸாகும் நாள் காலை 3.00மணியோ 4.00யோ தெரியவில்லை கிளம்பி வழியில் 4..5.. இடத்தில “ஏ மல்லி கேஃபியோ ரைம் ஹோதய யண்ணே?“ என்ற கேள்விகளுக்கு விளக்கம் குடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே பெரிய கூட்டமே றோட்டில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தது விசாரித்ததில் “பலாலில ஷெல் விழுதெண்டு ஃப்ளைட் வரேல்லயாம் நளைக்கி தான் படம் வருமாம்...”


அப்புறம் வகுப்பிலும் சுவரெல்லாம் ரஜினி படம் வரைந்து physics போரடிக்கும் நேரத்தில் தூங்கும் அறையை OFFICE ROOM என பெயரிட்டு அதை அழிக்க பிரின்ஸிப்பல் வகுப்புக்கே பெய்ன்ட் அடித்தார்.


வெள்ளை ரஜினியும் மொட்டை BOSSம் கவர்ந்தார்கள். இந்தியில் மொழிபெயர்ப்பான (ரீகேடா)இப்பட பாடல்காட்சியை காமடியாய் கலாய்க்கும் (கோல்மால் ரிட்டர்ன்ஸ்) பாடல் கீழே நேரம் கிடைக்கறப்போ பாத்துக்குங்க.







குசேலன்
இதுவும் சோதனை மேல் சோதனை காலம் அதுவும் உயர்தர பரீட்டை சோதனைக்காலம்.
பரீட்டை தெடங்கின நாள்ளயே படமும் ரிலீஸ்...
பரீட்டைச காலம் யாருமே போகமாட்டாங்கள் ஆனா அன்னிக்கு பரீட்சை முடிந்ததும் மாலை கிட்டதட்ட மாறுவேடத்தில் தியேட்டருக்குள்ள நுளைஞ்சு பாக்கும் போது தான் புரிஞ்சுது அந்த பட க்ளைமாக்ஸ் சீன் பக்கத்தில ப்ரன்ஸ வச்சு கொண்டு பாக்காம விட்டது எவ்வளவு நல்லதெண்டு. நண்பர்கள் கூட இருக்கும் போது படம் பாத்து கண்ல தண்ணிவுட்டா நல்லாயிருக்காதுல்ல...


எந்திரன்
தொழிநுட்பத்தை பாத்து பிரம்மிச்ச படம்...
அதுக்கு போகும்போது ஒரு சிக்கலும் இல்லையோ எண்டு யோசிக்கிறாக்கள் இங்க போய் பாருங்கோ..
இதில தெரிஞ்சாக்கள் யாராவது நிக்கினமோ..?
இணையத்தில் (எனக்கும் தான்) முதன்முறையாக வெளியான எனது எந்திரன் விமர்சனம் இங்கே


சுல்த்தான் படத்திலிருந்த நம்பிக்கை போய் பலகாமாச்சு (நாங்க தான் முனன்முதல் ரஜினிக்கு 3டி அனிமேஷன் செயோணுமெண்டு தலைவிதியோ தெரியவில்லை..)
இவ்வளவு நேரமும் பொறுமயா படிச்சதுக்கு நன்றி 




ரஜினி 10 ஜ தொடர... ரஜினி பற்றி எழுதகூடிய தகுதி இருப்பவரான் ஜீவதர்ஷன்  அண்ணாஅவர்களை அழைக்கிறேன் இவர் ஒருதடவை எழுதினா நூறுபேர் எழுதின மாதிரி...
ஏன்னா இவர் நூறு தடவை எழுதினாலும் அந்த ஒருத்தர பற்றி தான் கூட எழுதுவார்


அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை அழைக்கிறேன்.


விமர்சன பதிவுகள் அருமையாக எழுதக்கூடிய மருதமூரான் அண்ணாவை ரஜினி பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.


புதிதாக எழுதத்தொடங்கியிருக்கும் பதிவர் திருத்தணிகேசன் அவர்களின் ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.



இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, December 12, 2010

பனைமரக்காடே பதிவர்கள் நாடே...!!! -100%சிரிப்புக்கு நாங்க காரண்டி.

யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க


“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...


“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...


“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.


“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.


பாதையின் குண்டுகுழிகளுக்கு தாக்குபிடிக்கமுடியாமல் வண்டி வெள்ளத்துக்குள் குடைசாய்ந்தது...!


“ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ஆடலாம் பாடலாம் ஓடலாம்..” என ரிங்டோனை வெளியிட்டது கோபியின் போன் 


“ஹலோ கூல்போய் என்ன... பதிவர்சந்திப்பு தொடங்கபோகுதோ என்னண்டா சுபாங்கன்ர மோட்டசைக்கிள்ள தான் நாலுபேரும் வந்து கொண்டிருந்தனாங்கள் வழீல ஒரு அக்ஸிட... 
பீப் பீப் பீப்...
 தண்ணீர் புகுந்ததால் தொலைபேசி அத்தோடு தன் உயிரை விட்டது.


“பாதை கிடையாதுன்னு நான்தான்  சொன்னேனில்லையா...“ என்றான் வதீஸ்.


“அடேய் ஆற்றயோ காணீக்குள்ள புகுந்திட்டம் போலிருக்கு தோட்டக்காறன் உழுதுவச்சிருக்கிறான் வா ஓடிப்போயிடுவோனம்...“


“நண்பர்களே இதுதான் காங்கேசன்துறைச்சாலை என வழங்கப்படும் கே.கே.எஸ் றோட்டு...“ இதால போகோணுமெண்டால் குரங்கு கொப்ப பிடிச்சுகொண்டிருக்கிறமாதிரி வண்டிய இறுக்கி பிடிச்சுகொண்டிருக்கோணும்...! அட கோபி கைய எடு நான் வாகனத்த தான் வண்டியெண்டனான்...“ என ஐயம் தெழிவித்தார் சுபாங்கன்


இதேநேரம் யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுகொண்டிருந்தன...!!!
மண்டப வாயிலில் ஜனத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்தவண்ணமிருந்தது.


“நிகழ்ச்சி நிரலின்படி தொடங்கவேண்டிய நேரமாச்சு எங்க ஜனா..“  


என்று ஆறுதலாய் ஆரம்பிக்கும் யாழ்ப்பாண பண்பாடு தெரியாமல் அவசரப்படுத்தினார் மருதமூரான்.


“ஆள் மேடைக்கு பின்னுக்கு கொண்டிபிஸ்னஸில பிஸியாயிருக்கிறார் இப்ப வாறதாம்...“ கூறிவிட்டு பின்புறமாக சென்றார் நிரூஜா.


“ஓ... அண்ணன் கண்டி'லயும் பெரிய பிஸ்னஸ் மாக்னட் போலிருக்கு...“  தோரணம் கட்டியவாறே முகட்டுக்குள்ளிருந்து வினா எழுப்பினார் மதிசுதா.




ஒருவழியாக மண்டப வாயிலிலுக்கு வந்து சேர்ந்த ஜனா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து..


“ஓ... தமிழின் வருங்கால தூண்களே! வருக வருக ஆம் இவ்விழாவை இனிதே ஆரம்பித்துவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் நான் அதிகம் பேச விரும்பவில்லை பதிவுலகில் ஒற்றுமையே பலம் என்ற கருத்தோடு எனது சிற்றுரையை நிறைவு செய்து அடுத்த நிகழ்வாக மண்டபத்துக்குள் சென்று ஆசனங்களில் அமர்ந்து கொள்வோ......“


கூறிமுடிக்கமுன்னர் பின்புறமாக வந்து நின்று இடைமறித்த பாலவாசகன் காதுக்குள் மெதுவாக....


“உஷ்... ஜனாண்ண இன்னும் Hall ஒழுங்குபண்ணி முடியேல்ல.. நேற்று உங்க பேச்சை நீட்டுங்க..“ 


சொல்லிவிட்டு கதிரைகளை அடுக்குவதற்காக ஓடிவிட்டார்....
சடுதியான சூழ்நிலையால் சிலையாகி நின்ற ஜனாவின் பின்புறமாக வந்த Cool Boy கிருத்திகன் அவரின் கைகளில் எதயோ திணித்து...


“மேடைக்கருகில் இது கிடைச்சுது இத வச்சு சமாளிக்கேலுமோ பாருங்கோ..“


கையில் ஓர் புத்தகம் அம்பிட்டிருப்பதை முன்னிட்டு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய அதை பிரித்து பார்த்தபடி ஜனா தொடர்ந்தார்.


“ம்ம்... வந்து.. .இந்த நேரத்தில் ஆண்டவனுக்கு நன்றி கூறும் முகமாக அவரது போதனைகள் கொஞ்சம் பார்ப்போம்...


ஜெனலிஸ் அத்தியாயம் 1 பாடல்1 இறைவன் படைப்பை ஆகாயத்திலும் பூமியிலும் தொடங்கியபோது  பூமி நடமாட்டம் எதுவுமேயில்லாத காலியிடமாக இருண்டு கிடந்தது.
இறைவன் மூச்சு கடலின்மேல் விழுந்தது இறைவன் சொன்னார் இங்கே வெளிச்சம் பரவட்டும்.
உடனே வெளிச்சம் பரவியது.




நெடுநேரத்துக்கு பிறகு...


இறைவன் மோஸஸிடம் சொன்னார் நீ நீசனாய் மலையுச்சியை சென்றடையும் போது உன்னை என் 10 கட்டளைகளையும் புரிந்துகொள்ளச்செய்வேன்...


“இந்த சந்திப்பு ஏற்பாடு உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும் இல்லையா மதிசுதா...? என்ன அப்போத தொடக்கம் ஏதோ அந்தரப்பட்டுகொண்டிருக்கிறியள் போலிருக்குது உதென்ன கையில...? குப்பை தொட்டி அந்தப்பக்கமிருக்கு...!“


 என மதிசுதாவை விசாரித்தார் வரோ.


 இல்ல கானா வரோ அங்கயிருந்துதான் கொண்டாறன் பாண் சுத்தி வந்த பழைய பேப்பர் போலிருக்கு அடுத்ததா ஜனாணக்கு உரையாற்ற குடுத்துதவலாமெண்டு வச்சிருக்கிறன்...அது சரி இந்த வரவேற்பு பனர் எங்க கட்டுறது?


இதேநேரம் ஜனா தொடர்கிறார்...


“ஜாப் அதைக்கேட்டுவிட்டு என்ன சொன்னானென்றால்.... கொர்ர்ர்.... கொர்ர்ர்...“


“முடிஞ்சுது அவங்க உள்ள வரலாம்...“ ஜனாவை உலு(எழு)ப்பி Cool Boy கிருத்திகன் மெல்லிய குரலில் கூற...


உற்சாகமாக அறிவித்தார் ஜனா 


“இனிதே இடைவேளைக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இப்போது அனைவருக்கும் சுடுசோறு வழங்கப்படும்...! அதனைதொடர்ந்து அடுத்த நிகழ்வு பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்.
நன்றீ...!!! 

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, December 7, 2010

வலைச்சரத்தில் ஸ்ரார்ட் மியூசிக்! ....!

தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! 


ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!  அபடீன்னு அலப்பரை 'பன்னி'ட்டிருக்கிற 'பண்ணி'க்குட்டி ராமசாமி  சார்.. பதிவுலகில் பிரபல பதிவராகவும் வருங்கால எழுத்தாளராகவும் உலகமகா மாமேதையாகவும் தமிழ் புத்திஜீவியாகவும் அனைவராலும் அறியப்பட்டவர்.



நல்ல பதிவுகளைக்கண்டுபிடிக்கும் வேலை கிட்டத்தட்ட கீழ்ரும் வீடியோக்கு ஒப்பானது



அதல்லாம் அனுபவிச்சாதான் புரியும்...!

அந்த புண்ணிய ஆத்மாகிட்டயிருந்து வந்த செய்தி பெரிய்ய ஆச்சரியத்த குடுத்திருக்கு...
அதாவது வலைச்சரத்தில் என்னையும் நகைச்சுவைப்பகுதியில் அறிமுகப்படுத்தி உயர்த்தியிருக்காரு அந்த உத்தமரு...! (மகராசனா இருக்கணும்..)


அந்த இணைப்பைக்காண இங்கே க்ளிக்குங்கோ...!

இலைமறை காயாக இருந்து வருகின்ற தரமான ஆக்கங்களை தந்து கொண்டிருக்கும் பல புதிய பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை வலைச்சரதையே சாரும்.


கண்டதையும் நிறைய படித்து ஒப்பிட்டு ஆராய்ந்து புதியவர்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஏற்பது சுலபமான காரியமல்ல...!

(சிலது விஜய் படம் மாதிரி இருக்கும்
சிலது கடிச்சுதிங்கற மாதிரி இருக்கும்...
சிலது ரத்தசரித்திரம் பாக்கறமாதிரி டெரரா இருக்கும்
சிலபேரோட ப்ளாக் அவங்க டைரிய பாக்கறமாதிரியே இருக்கும் சின்னவயசுல மூக்குக்குள்ள புளியாங்கொட்டய வச்சதுலருந்து இன்னிக்கு காலைல பண்ணினதுலருந்து வரைக்கும் போட்டுட்டு பிரபல பதிவராக ரைபண்ணிட்டிருப்பாங்க.)

கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால பல தரமான கற்பனைத்திறன்மிக்க படைப்புக்கள் 2..3.. ஓட்டுகளோட யாருக்கும் தெரியாம இருந்திட்டிருக்கு...! இதுங்களுக்குள்ள எல்லாம் நுளைஞ்சு இலைமறைகாய்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, December 6, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட் 2

தமிழ் பதிவர் சந்திப்பின் அறிமுகம் முதல் இடைவேளை வரை சுபாங்கன் அண்ணாவின் தரங்கத்தில்  பார்த்துவிட்டு வரவும்
யார் உசுப்பேத்தியும் இந்த பதிவை எழுதவில்லை என நம்பவும்.


இடைவேளையில் இன்னிசை
பாடல் போடுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் ஆளுக்கொரு பென்ரைவுடன் பாட்டுப்பெட்டியை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.
எந்திரன் பாடல் கோபியின் ப்ளாஷிலிருந்து அரங்கத்தை அதிரவைக்க ஆரம்பித்து இரு வரிகள் கடந்த நிலையில் “அவள் அப்படியொன்றும் அழகில்லை பாட்டை போடப்பன்..“ என்ற குரல் வர வேறு ப்ளாஷ் செருகப்பட்டது. குரல் வந்த திசையில் புல்லட்.
இதில தான் எங்கயோ சேவ் பண்ணின்னான் என அனுதினன் ஒவ்வொரு பாடலின் முதல்வரியையும் ஓடவிட இடைவேளையில் இன்னிசை இனிதே நிறைவடைந்தது.


கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
நிரூஜாவின் அறிவிப்பை தொடர்ந்து மைக்கைப்பிடித்த வரோதயன் அண்ணா பதிவுலக பதிவர்கள் பிரயோசனமாக சிரமதானம் செய்யவேண்டும் என்று கூற... கரகோஷம் வானைப்பிளந்தது.


ஜனா அண்ணா குறும்படம் எடுக்கலாம் என்று தொடங்கி தானும் கேபிள்சங்கர் சாரும் ஒரு ஷூட்டிங் இடைவேளையில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே எந்தக்கடையில் நல்ல ரீசேட் வாங்கலாம் என்பது பற்றி கதைத்த சம்பாஷனையை மீண்டும் ஒருமணிநேரமாக மிமிக்கிரி செய்து விளங்கப்படுத்தினார்.


இப்போது தான் அரங்கத்துக்குள் அரக்கப்பரக்க நுளைந்த ஒரு பு(மு)தியவர் தன்னை டோண்டு  என அறிமுகம் செய்து கொண்டு எல்லோர் முகத்தையும் உற்றுப்பார்த்து எதையோ சீரியஸாக தேடிக்கொண்டிருந்தார்.


அடுத்து கருத்துகளுக்கு நன்றி என உச்சஸ்தாயியில் உற்சாகமாகக்கூறிய மாலவன் அடுத்து மௌன அஞ்சலி செலுத்துவது போல் சிறிது நேரம் நின்றறார் சுதாகரித்துக்கொண்டு அஷ்வின் இருந்த பக்கமாக திரும்பி மெதுவான குரலில் “பேப்பர்... பேப்பர்..“  என்றார். 


புரிந்து கொண்ட சொபிசன் தூங்கிக்கொண்டிருந்த பவனிடம் நிகழ்ச்சி நிரலை கொடுத்துவிட அது மாலவன் கைகளுக்கு சென்றது 
கூடவே மாலவனின் காதுக்குள் பவன் “கெதியா முடிக்கட்டாம்“ என்று கிசுகிசுத்தார். பவர் கூடிய மைக் என்பதால் இந்த உரையாடல்கள் றொக்ஸி திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு கூட தெளிவாக கேட்டது. 




மாலவன் தொடர்ந்தார்- கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
 500க்கும் அதிகமான வலைப்பூக்கள் மற்றும் வலைமனைகளை யாழ்தேவி ஒருங்கிணைத்து வருகின்றது இதனோடு இணைந்து தொய்வு நிலையை போக்குவேம் -மருதமூரன் அண்ணா 


பதிவுகளில் சமூகப்பிரச்சனையை காட்ட வேண்டும் அதற்காக எல்லா பதிவுகளிலும் கற்பழிப்பு சம்பந்தமாக ஏதாவது இடம்பெற வேண்டும்- மதிசுதா 


அடுத்து கிருத்தின் ஏதோ சொல்ல வாயெடுக்க மைக்கை இழுத்தார் சுபாங்கன் சுபாங்கனின் கைகளிலிருந்த மைக்குக்கு முன்னால் வளைந்து முகத்தை நீட்டி 


கிருத்திகன் பதிவர்கள் எல்லோரு...


சுபாங்கன் தமிழ் பதிவர்கள் எல்..


கிருத்திகன் பதிவுலக பதிவர்...


சுபாங்கன் பதிவுலகில் சமீபகால..


இந்த இழுபறியில் ஸ்பீக்கர் “கூ.......“ என்ற சப்தத்துடன் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது.. கூடவே அழகாக புகையும் கசிந்தது.


தொடர்ந்த மாலவன்  
“ஆம் தமது கருத்தை ஒற்றுமையாக எடுத்துரைத்த இரு பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... அடுத்து 
பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.


பதிவர்கள் தமக்கிடையே கருத்துகளை பரிமாறிக்கொண்டிருந்த வேளை


இடைவேளைக்கு வெளியே சென்ற லேஷனண்ணா அப்போது தான் மீண்டும் வற்திருந்தார்.
மழையில் அவர் முகம் கடுமையாக நனைந்திருந்தது துடைக்க ஏதாவது வேணுமே என அவர் எண்ணிய மறுவினாடி ஒரு கை அவருக்கு ஒரு பேப்பரை கொடுத்துதவியது. 


நிம்மதியாக முகம்துடைத்தவாறே நிமிர்ந்து பார்க்க மதிசுதா சிரித்தபடி நின்றிருந்தார் அண்ணே பாண் சுற்றிவந்த பழைய பேப்பரும் எனது பையில் பத்திரமாக இருக்... கூறி முடிக்கு முன்னரே முகத்தில் நவரசங்களை வெளிப்படுத்தியவாறு முகம் கழுவும் தொட்டியை நோக்கி ஓடினார் லோஷனண்ணா.


வதீஸை தனியாக அழைத்த டோண்டு “தம்பி நிரூஜான்னு ஒரு பொண்ணு உங்கஊர்ல எழுதிட்டிருக்கே அத பாக்கதானாக்கும் அசலூர்லருந்து ப்ஃளட்ட புடிச்சு வந்திருக்கேன் அது இன்னும் வரலியா..?“


சார் நிரூஜா உங்க ப்ரண்டா..?


ஆமா தம்பி நா இன்னிக்கு இங்க வந்தா அடுத்த மாசம் என்னோட 69 வது பர்த்டேக்கு தமிழ் நாட்டுக்கு வர்றதா சொல்லியிருக்கால்ல குறும்புக்காரி... 


அப்டியா சார் ரொம்ப நல்லது நீங்க அவர போயி கண்டிப்பா பாக்கணும் என வைத்தியர் பாலவானனை காட்டினார் வதீஸ்.


தங்களின் பெயர்க்காரணம் கேட்ட ஆதிரை அவர்களுக்கு மாலவன்.பா அளித்த விளக்கம் கீழே
ஆரம்பத்துல ரங்கராஜன்'னு ஒருத்தரு சுஜாதாங்கிற பெயரில ஏதோ எழுதிட்டிருந்தாரு.. 


இப்போ நான் நிரூஜாங்கிற பேர்ல முதலிடத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறேன் ஏன்னா... என தொடர்ந்தவரை சுபாங்கனும் ஜனா அண்ணாவும் ஒரு அறைக்குள் தள்ளிக்கொண்டு போய் கதவை சாத்தினார்கள். கதவில் Office Room என எழுதப்பட்டிருந்தது. 


நன்றி



பதிவர் சந்திப்பு

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails