Monday, September 1, 2014

காளை மாட்டில் பணம் கறப்பது எப்படி? Based On A True Story

இடம்- அவுஸ்ரேலியா, நிறம்- கறுப்பு, மதம்- இல்லை, இனம்- பிரேசியன், பிறந்த திகதி- தெரியாது ஆனா சுகப்பிரசவம் தான்.

அவுஸ்ரேலியாவில் ஓர் அழகான குழந்தை பிறக்கிறது. டாக்டர் கண்ணாடியை கழற்றியபடியே பிரசவம் பார்த்தவர்களிடம் கூறுகிறார் 'சிங்கக்குட்டி பொறந்திருக்கான்...!' என்றபடி தன் டெலிவரி சார்ஜ் ரசீதை கௌ பாயிடம் நீட்டுகிறார்.

நாள்முழுவதும் ஓரே மேனியுடனும், பொழுதெல்லாம் ஓரே வண்ணத்துடனும் தன்சகோதரங்களுடன் பால்குடித்துவரும் காலப்பகுதியிலே தாயிடமிருந்து மகனைபிரித்து ஓர்பெரீய்ய கப்பலில் ஏற்றி அவுஸ்ரேலியாவைவிட்டு நாடுகடத்துகிறார்கள். 

ஷிப்பிங் சார்ஜ் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க கொபாய்யின் வங்கிகணக்கில் மகனை விற்ற காசு வரவு வைக்கப்படுகிறது.

நடுக்கடலிலும் சாப்பாட்டுககு குறையில்லை. சுத்தவர இனசனத்துடன் ஜாலியாக சென்றுகொண்டிருக்கும் கப்பல் இலங்கையை அடைகிறது. இலங்கையிலும் எந்தகுறையுமின்றி கழிகிறது இளமைக்காலம். 

இப்போது அவர் ஒரு கட்டிளம் காளை. ஆனால் கண்ணில் எந்த கன்னியையும் இதுவரை கண்டதில்லை. காதல் அரும்பும் வயதில் தன்னையொத்த காளைகளுடனே நாட்கள் கழிகிறது.

கொழும்பிலிருந்து கண்டைனர் லாரியில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்படுகிறார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள விவசாயதிணைக்களத்தில் தங்கவைக்க படுகிறார். இங்காவது பசுமாடுகளை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

 சில அதிகாரிகளின் அரியமுயற்சியில் (அதாவது உயிரணுக்கள் இவரது அனுமதியில்லாமல் ருத்பேஸ்ட் பிதுக்குவது போல பிதுக்கி எடுக்கப்படுகின்றது) இவர் வயதுக்கு வந்துவிட்டமை உறுதிப்படுத்தப்படுகிறது.

அன்றிலிருந்து காலையும் மாலையும் இருவர் காளைமாட்டிலும் பால் கறக்கும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த நபர்களோடே குடும்பம் நடத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிறார் மிஸ்டர் காளை.

இந்த நபர்களை பற்றி சொல்வதானால், அரசாங்கவேலை என ஐம்பதுலட்சம் சீதணம் அன்ட் வீடு வாங்கி அந்த காசில் பைக் வாங்கி காலையில் எழுந்து குளிச்சு, சாப்பிட்டு அயன் பண்ண சேட்டு, சப்பாத்து சகிதம் விவசாயதிணைககளத்துக்கு வந்து மாட்டுக்கு கைகளால் விந்து எடுப்பது இவர்கள் கடமை. இதற்கு மாதம் இருப்த்தைந்தாயிரம் சம்பளம் அன்ட் ஓய்வூதியம்.

நமீதாவின் தொடையையை விட பெரிய டெஸ்ட்டியூப் போன்ற றப்பர் குழாயுடன் சம்பவ இடத்தை தம் கைகளால் இருவரும் முயற்சித்து கூடவே மாடும் ஒத்துளைத்து பெறப்படும் விந்தணுகள் இரசாயணம் இடப்பட்டு குளிர்சாதனபெட்டியில் இலங்கையின் பல பாகங்களுக்கும் விற்கப்படும்.

'மச்சான்! தின்னவேலீல பெரிய மாடு நிககாம் வா பாப்பம்' என பலர் இவரை பார்த்து போகவந்தாலும் வெளியாட்கள் நிற்கிறார்களே என கொஞ்சங்கூட வெக்கமேயில்லாமல் தன் உயிரணுவை வாரிவழங்கும் வள்ளல் இவர்.

காலப்போக்கில் இதற்கு மேல் கறந்தால் இனி காற்று தான வரும் என்ற நிலமை உருவாக விவசாயதிணைக்களம் இவரை விற்க முடிவுசெய்தது. முஸ்லீம் பாய் ஒருவர் இரண்டு லட்சம் கொடுத்து வாங்கிபோனார். 

இதனால் இந்த மாடு முஸ்லீம் மதத்துக்கு மாறியது. ஏன்னா இந்து மாடாக இருந்தால் சைட்டிஷ்க்கு யூஸ் பண்ண முடியாதே!

வாங்கியவர் கமுக்கமாக காரியத்தை முடிக்காமல் பாரிய திட்டம் தீட்டினார். அங்கு தான் ஆரம்பித்தது அவருக்கு ஏழரை. 

இந்த மாட்டை கொக்குவில் பிரவுண்ரோட் சேர்ச்க்கு அருகில் அனைவரும் பார்க்க நடுவெய்யிலுக்குள் கட்டி உழவு இயந்திரத்தில் நாலு லோடு புல்லும் பறித்து அருகில் தகர மண்ணெண்ணெய் பீப்பாயின் வட்ட மூடி ஒன்றில் சோக் கட்டியால் இந்த உயர்ரக மாடு வருகிற ஐந்தாம் திகதி இறைச்சியடிக்கப்பட இருப்பதால் உங்கள் பங்குகளுக்கு இப்போதே முந்துங்கள் என எழுதி கூடவே தன் தொலைபேசி எண்ணையும் அடிச்சுவிட்டார்.

தமிழ்வாசிக்க தெரியாத மாடு இந்த சூதுவாது தெரியாமல் தான்பாட்டுக்கு புல்லு திண்டுகொண்டிருக்கிறது. முஸ்லீம் பாய்க்கு ஆடர்கள் குவிந்தது, கூடவே கோட் ஆடரும் வந்தது. 

என்னாச்சுன்னா யாழ் பல்களைகழக உடற்பயிற்சி பேராசிரியர் ஒருவர் இந்த மாட்டையும் போட்டயும் மாறிமாறி பாத்திட்டு கோட்டுக்கு இழுத்துவிட்டார். இப்போது மாடு நீதிமன்ற காவலில்...

வழக்கம் போல வழக்கை வருடகணக்காக இழுக்க கோர்ட் நினைத்தாலும் மாட்டை பராமரிப்பது பாரிய செலவாக இருந்தது ஏனெனில் இந்த ரக மாடுகள் சாதாரண மாடுகளை விட ஆறேழு மடங்கு தின்னும்.

இந்த வழக்கு பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஃப்ளாஷ் நியூஸ் ஆனது. உதயன் பத்திரிகை அடுத்த வழக்கு திகதி எப்போது என்பதையும் வழக்கு பார்க்க ஆர்வலர்கள் வருமாறும் அழைத்தது. இப்போ இந்த மாடு ஒரு பாப்புலர் ஸ்டார் ஆகிவிட்டிருந்தது யாழ்ப்பாணத்தில்.

அடடே! சமூக ஆர்வலரின் முயற்சியில் மாடு பொழச்சிக்க போவுதுனு இருந்த நேரத்தில் முஸ்லிம் பாய் தான் இரண்டரை லட்சத்துக்கு மாட்டை இறைச்சிக்கு வாங்கியதாகவும் தனக்கு எதிராக வழக்கு வைத்தவர் அந்த பணத்தை தனக்கு தந்துவிட்டு மாட்டை வீட்டுக்கு கூட்டிசெல்லட்டும் என கூற சமூக ஆர்வலர் வெலவெலத்து போனார். 

இவர் செந்தமாக உடற்பயிற்சிநிலையம் வைத்திருப்பவர் தன் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி திண்டா உடம்பு வைக்கும் என ஆலோசனை வழங்குபவர் அவரே இந்த மாட்டை பார்த்து இரங்கி காரியத்தில் இறங்கி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அடுத்து என்னசெய்வது என சிந்தித்த இவர் அருகிலிருந்த ஒரு அச்சகதுக்கு போய் ஐநூறு ரூபாக்கு பில்புத்தகம் ஒன்று பிரின்ட் செய்தார். 

யாழ்ப்பாண வர்த்தக சங்கத்திடம் அதை கொடுக்க வர்த்தக சங்கம் சார்பில் தலா ஐநூறு ரூபா படி அந்த பற்றுசிட்டு விற்று அந்த பணத்தில் யாழ் வர்த்தகர்கள் இந்த மாட்டை வாங்கினார்கள்.

பொதுவாகவே யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர்கள் வீடுகளில் பசுமாடுகள் பராமரிக்கும் வழக்கம் உடையவர்கள். சில மாடு வைத்திருப்பவர்களும் தமது மாடுகளுக்கு வர்த்தகர்களின் வீடுகளை இனங்கண்டு சென்றுவருமாறு பழக்கியுள்ளனர்.

தினமும் மாலையில் குறித்த நேரத்தில் தாமாகவே அந்த பசுமாடுகள் வீதியால் வாக்கிங் வந்து அவர்களது படலையில் நின்று 'ம்மே...!' என சவுண்டு விடும் வீட்டுகாரரும் தவிடு, கஞ்சி, இலைகுழை என தினம் ஒரு ஐட்டமாக கொடுப்பது வழக்கம்.(பின்னே அம்மாம்பெரிய்ய மாடு பிச்சகாரன் மாரி வாசல் வந்து நின்னா யாருக்கு தான் மனசு கேக்காது).

இந்த சம்பவத்துக்கு பிறகு எப்போது மாடு வாங்கினாலும் அந்த முஸ்லிம் பாய் ரெண்டு பெட்ஷீட்டை சுத்தி தான் கூட்டிச்செல்வார் என நினைக்கிறேன்.

இந்த வர்த்தகர்கள் வாங்கிய நம் கதாநாயகனை பராமரிப்பதற்கு தனிக்குழு அமைப்பது சிரமம் என்பதால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் இவர் இந்து மதத்துக்கு மாறுகிறார்.

அங்கு பிள்ளை வரம் வேண்டும் பக்தர்கள் இவருக்கு நாலு மூட்டை புண்ணாக்கு வாங்கி கொடுக்கலாம் என்ற செய்தி பரவவிடப்பட மக்கள் திரளாக அங்கு சென்றனர்.(ஆல்ரெடி அவர் பசுகளுக்கு பிள்ளை வரம்கொடுக்க தான் வெளிநாட்டுலருந்து யாழ்ப்பாணம் வந்தவர்). மாட்டுக்கு பக்கத்திலேயே ஒருபுறம் பில்போடும் கவுண்டர் வடக்கு பக்கம் புண்ணாக்கு களஞ்சியம் தெற்கு பக்கம் இன்னொரு புண்ணாககு களஞ்சியம்.

ஒருவர் போய் புண்ணாக்கு வாங்கிகொடுக்க பணம் கொடுக்கும் சமயம் அவரது கண்பார்வையில் நாலு மூட்டை புண்ணாக்கு அவரை கடந்து இருவரால் களஞ்சியத்துக்கு எடுத்து செல்லப்படும். அவருக்கு ஒரு பற்றுசீட்டு வழங்கப்படும்.

பிறகு அடுத்த நாள் பணம் கொடுப்பவர்களுக்கு அங்கிருந்து இந்த களஞ்சியத்துக்கு புண்ணாக்கு மூட்டை எடுத்து வருவது காண்பிக்கபடும்.

இவர் தின்ன தினமும் பத்து மூட்டை புண்ணாக்கு தேவை என காட்டிக்கொண்டாலும் இவர் தின்பது நான்கு மூட்டை ஊறவைத்த புண்ணாக்கு மட்டுமே!

பட் ஹீ இஸ் பேசிக்கலி வெரி வெரி லேஸி மான். பாக்க மலைமாரி இருந்தாலும் சிலை மாரிதான் நிப்பாரு சின்ன மூமென்ட் காண்றது கூட கஷ்டம்.

அங்கே இவருக்கென தனி பந்தல் போடப்பட்டது. சாணம் போட்ட அடுத்த செக்கன்டடே அதை துப்புரவுசெய்ய ஆட்கள் அமர்த்தப்பட்டார்கள்.
வரும் மக்கள் சுற்றுலா பயணிகள் இவருக்கு வாய்ப்பன், வடை, பாண் என கொடுக்க கோயிலில் பொங்கும் பக்தர்கள் பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், மோதகம் என ஊட்டிவிட ஆரம்பித்தனர். இதைவிட இவருடன் செல்ஃபி எடுக்கும் நபர்களால் இன்ஸ்டக்ராம், பேஸ்புக், ட்விட்டர் என பிரபலமானார்.

இல்லறம் இனிதே(!) முடித்து தற்போது கீரிமலையில் துறவியாக வாழ்கிறார்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails