Saturday, December 3, 2016

சைக்கிளில் வந்த வெருளிப்பெட்டையும் ஆமிக்காறனும் - உங்களுக்கு தெரிந்த யாழ்ப்பாணத்து பெண் இவள்!


சைக்கிள் நம் வாழ்க்கையோடு எப்படி இரண்டற அல்லது மூன்றர கலந்துள்ளது என்பதற்கு சில கலைச்சொற்களின் டிக்‌ஷனரியை இங்கு தருகிறேன்.

ரெண்டு பேரும் சைக்கிள் - இரு நண்பர்கள் அல்லது நண்பிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று பொருள்படும்.

க்ரீஸ் போய்ட்டுது - இரு பெரியவர்கள் தங்கள் ஆண்மைக்குறைவு பற்றி கருத்து பகிர்கிறார்கள்.

வால்ட்யூப்பால காத்து போகுது - ஒரு மாணவி தான் மாதவிடாய் காரணமாக வகுப்புக்கு அல்லது கோவிலுக்கு வர முடியாது என்பதை தன் நண்பிக்கு எடுத்தியம்புகிறாள்.

அவன் கம்பி - அவர் மைக்கல் ஜாக்சனின் ரசிகர் அல்லது ஓரின சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வல்லுனர்.

ஓயில் மாத்தி கனகாலமாச்சு - தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.

பெல் மூடி - வழுக்கை தலை

பூட்டு உடைச்சாச்சு - ஒரு பெண் முதன்முறையாக இனப்பெருக்க முயற்சியில் ஈடுபடுத்த பட்டிருக்கிறாள்.

பெடல் - அல்லக்கை, அல்லது ஜால்ரா போடுபவன்.

வால்க்கட்டை - உயரம் குறைந்தவன்.

பக்கிள் - நொண்டியபடி நடப்பவர்.

'வீட்டில நிக்கிறீங்களோ அல்லது சைக்கிள்ள வெளீல வந்திட்டாங்களோ'

இப்படி ஒருவர் மற்றவரை போனில் விசாரித்தால் அவர்கள் அரசியல் பேசுகிறார்கள் என்று அறிக.

மீண்டும் இது போல பல அரிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு ஃபளஷ்பேக்!

அப்போது தான் நான் சைக்கிள் ஓட பழகியருந்த காலம், இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டுருந்தேன்.

சொப்பர் சைக்கிள் என்ற சிறிய வகை துவிச்சக்கரவண்டிகள் அப்போது புழக்கத்திலருந்தது.

அது நீல கலரில் இருக்கும் இருக்கைக்கு பின்புறம் முதுகு புறம் சாய்ந்து இருக்கக்கூடியவாறு குஷன் காணப்படும்.

பின் கரியல் கிடையாது, சிறிய முன் பார் இருக்கும், சராசரி மனிதனின் முழங்காலிக்கு கீழ் தான் அதன் உயரம் இருக்கும்.

எனக்கு வாயச்ச சொப்பர் சைக்கிள் வெளிநாடு சென்ற உறவினனுக்காக வாங்கி அவன் கனடா சென்றதும் விறகு அடுக்கி வைக்கும் தட்டியில் கிடப்பிலிருந்து என் அண்ணா ஓடி அவன் வளர்ந்ததும் மீண்டும் பரணுக்கு போய் என்னிடம் வந்திருந்தது.

சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு ஆண்களுக்கும் சைக்கிள் பழக்க என மாமாவோ, ஆசை மச்சான் என அழைக்கப்படும் ஒருவனோ, சின்னண்ணா என கூப்பிடும் ஒருவனோ இருப்பான்,

'கிருத்திகன் வளரட்டும் பிறகு சைக்கிள் பழகலாம்' என அம்மா சொல்லிவிட்டதாலும் எனக்கு சைக்கிள் பழக்க யாரும் முன்வராத்தாலும் சைக்கிளை அது வைத்திருந்த இடத்திலேயே ஏறி இருந்து பெடலை பின்புறமாக உழக்க ஆரம்பித்ததை கண்ட அப்பா அந்த சொப்பர் சைக்கிளை சைக்கிள் கடைக்காரரிடம் எடுத்து சென்றார்.

அதற்கு ஒட்டி காற்று அடித்து, உதிரி பாகங்களை பிரித்து, சில்லுக்கு பக்கிள் பார்த்து, மண்ணெண்ணையில் பாகங்களை கழுவி, போல்ஸ் மாத்தி, உடைந்தகம்பிகளை ரீப்ப்பளேஸ் செய்து, கிரீஸ் வைத்து, பிரேக் கட்டை புதுசு போட்டு, ஒருவாரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தது சொப்பர் சைக்கிள்.

படிக்கும்போதே மூச்சுவாங்கும் ஒருவாரம் நீடிக்கக்கூடிய இந்த செயன்முறையை யாழ்ப்பாணத்தில் ஒரேவார்த்தையில் 'கழுவிப்பூட்டுறது' என்று சொல்லி முடிச்சுட்டு அடுத்த வேலையை பாக்க போய்விடுவார்கள்.

சைக்கிள் கடைக்கு சைக்கிளை கழுவிப்பூட்ட குடுக்கும் போது மாணவர்கள் பாடசாலை தவணை விடுமுறை நாட்களிலும், உத்தியோகத்தர்கள் லீவுகாலங்களிலும் சைக்கிளை அனுப்பிவைப்பர்,

ஏனெனில் சைக்கிள் கடையில் ஏற்கனவே கழுவிப்பூட்ட என பத்து சைக்கிள் வரிசையில் நிற்கும் இன்னும் ஐந்து சைக்கிள் பாகங்களை கழட்டி போட்டபடி பல்லிழித்துக்கொண்டிலுக்கும்.

பாகங்களை கழட்டிவிட்டு என்னென்ன தேவை என சைக்கிள் கடைக்காரர் ஒரு பேப்பரில் எழுதித்தர அதை நாம் வாங்கி கொடுத்ததும் சைக்கிள் பூட்டப்படும்.

இப்படி வந்து சேர்ந்த சொப்பர் சைக்கிளை ஓடத்தெரியாததால் உருட்டியபடியே ஒழுங்கையில் திரிவேன்.

இதுவே லீவுநாட்களில் மச்சான், மச்சாள் ஊருக்கு வந்தால் நான் சீட்டில் ஹாண்டிலை பிடித்தபடி இருக்க அவர்கள் இருவர் என்னை வைத்து தள்ளியபடி எங்கள் வீட்டிலிருந்து ஒழுங்கையில் சிறிது தூரம் வைரவர் கோவில்வரை செல்வர்,

பின்னர் அங்கிருந்து அவர்களில் ஒருவரை இருத்தி தள்ளியபடி நாங்கள் இருவர் வருவோம்.

என் அண்ணன் & கோ தங்களை பெரியாக்களாக கற்பனை செய்து பெரிய லுமாலா சைக்கிள் ஓடியபடி அங்கு சுற்றித்திரிவதால் பழக்க யாருமில்லாமல் இப்படியே எங்கள் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

சைக்கிள் ஓடவேண்டும் என்ற பேராசை இருந்தாலும் கால் எட்டாத காரணத்தால் போகுமிடமெல்லாம் உருட்டியபடியே திரிந்தேன்.

நாங்கள் இருந்தது கோண்டாவில் மேற்கு, கோவில்களுக்கு பஞ்சம் இல்லாத ஊர்.

ஒருநாள் தூக்கத்தில் நான் சைக்கிள் ஓட்டி செல்வதுபோல கனவுவந்தது, அன்று காலை வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிட்டிருந்தனர்.

சைக்கிளை உருட்டியபடி ஒழுங்கைக்கு வந்து கல்ஒன்றின் மீது ஏறி சைக்கிளில் அமர்ந்து கல்லை காலால் உண்ணி அங்குமிங்கும் திரும்பியபடி புறப்பட்ட ஹாண்டிலை நேராக்கி பெடலை விளக்க ஆரம்பமானது என் முதல் பயணம்.

நேராக நல்லாத்தான் போகுது சந்தியில் பாதை வளைவுக்கேற்ப திருப்பவேண்டிய இடத்தில் சடுதியாக திருப்ப..!

சடார்!

முதல் விபத்து.

எதுவுமே ஆகவில்லை யாரும் வருவதற்குள் சைக்கிளை நிமிர்த்தி திருப்பி உருட்டி வந்து அதே கல்லுக்கு மேல் ஏறி மீண்டும் பயணம், இம்முறை அதிக தூரம் நோ விபத்து, 

என்ன ஒன்று நிறுத்தும் போது தான் மரத்திலோ, மதிலிலோ இடித்துவிட்டு சைக்கிள் ஒருபுறம் சரிய நான் அதற்கு முன் மறுபுறம் குதிக்கவேண்டியிருந்தது.

இத்தனைக்கும் அது எனக்காக கழுவிப்பூட்டும்போது மக்ஸிம்ம் சீட் பதித்து செட் பண்ணப்பட்ட சைக்கிள்.

நான் சைக்கிள் ஓடுவேன் என்பது சில நாட்களின் பின்னர் அயலவர்கள் சொல்லியே வீட்டில் தெரியவந்தது,

நான் எதிர்பார்த்தபடி பேச்சு எதுவும் விழவில்லை. 

சைக்கிள் ஓடுவதற்காகவே மாலை நேரங்களில் பாண்வாங்க நான் போகிறேன் என அடம்பிடித்தேன் சிலநாட்களிலேயே அருகிலிருக்கும் கடைக்கு போய்வர அனுமதித்தார்கள்.

பாடசாலை செல்வது அப்பாவோடு அல்லது அண்ணாவோடு சைக்கிளில் முன் பாரில் இருந்தபடி ஆகும்.

கோண்டாவிலிலிருந்து யாழ் இந்து ஆரம்ப பாடசாலை செல்லும் பலாலி வீதி பாதையில் டிப்போ காம்ப் இராணுவ சோதனை சாவடியும், கேகேஎஸ் வீதியில் இணுவில், தாவடி தட்டாதெரு காம்ப்உம் இருக்கும்.

அதில் சோதனையிடப்பட்ட பின்னரே அனைவரும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள் நுளையமுடியும். இவை ஒருவழிப்பாதைகள் திரும்பி வருவதற்கு கலட்டி காம்ப் சோதனை சாவடியை கடக்க வேண்டும்.

ஏனய பாதைகள் அனைத்தும் முள்வேலியால் மூடி மிதிவெடிகள் புதைத்து புதர்நிறைந்து காணப்படும்.

அவற்றுக்கருகில் எப்போதோ ஒருகாலை இழந்த மாடுகள் புல்மேய்ந்தபடி இருக்கும்.

தட்டாதெரு சோதனை சாவடியில் நான்கு முள்வேலி ஒற்றையடி பாதைகள் காணப்படும் நடுவில் நான்கு சில்லு வாகனங்கள் போக பெரிய பாதை இருக்கும்.

முதலாவது பாதை பாடசாலை மாணவருக்கானது, இரண்டாவது அரசாங்க வேலை செய்யும் ஆண்களுக்கனது, மூன்றவது தனியார் வேலை செய்வோர் மற்றும் ஏனய ஆண்களுக்கனது.

மறுபக்கம் மாணவிகளுக்கன பாதையும், ஏனய பெண்களுக்கான பாதையும் இருக்கும்.

இதனூடக பயணித்து உடற்சோதனை முடித்து வெளியேறி நம் அன்றாட கருமங்களை கவனிக்க வேண்டும்.

இதில் மாணவர்களுக்கான பாதை விரைவாகவும், தனியார் வேலை மற்றும் ஏனயோருக்கன பாதை மிக மந்தமாகவும் சோதனை செய்யப்படும்.

தட்டாதெரு காம்பின் சோதனைக்காக காத்திருக்கும் வாகனங்களின் தொடர் தற்போது திருமணமண்டபம் அமைந்திருக்கும் இடத்தை தாண்டி வரிசையில் காத்திருக்கும்,

பஸ்ஸில் வரும் பயணிகள் அந்தந்த பாதைகளில் இறங்கி நடக்க பஸ் வாகனங்களின் வரிசையில் வந்து சோதனை முடித்து ஒருமணிநேரம் கழித்து ஏற்றி செல்லும்.

கே.கே.எஸ் வீதியில் காத்திருந்து பஸ்ஸில் ஏறுபவர்களில் இ.போ.ச பஸ்ஸில் பயணிப்பவர்கள் விரைவாகவும், மினி பஸ்ஸில் பயணிப்பவர்கள் கடுமையாகவும் சோதனையிடப்படுவதோடு மினிபஸ் சீட், ஸ்பீக்கர் முதற்கொண்டு பிரித்துமேயப்படும்.

இதில் சீரீப்பியில் வருபவர்கள் பொதுமக்கள் எனவும் மினிபஸ்ஸில் வருபவர்கள் குண்டு கொண்டு வருபவர்கள் என யாரோ ஒரு இராணுவ அதிகாரி ஏனய சிப்பாய்களுக்கு சூழுரைத்து கட்டளையிட்டிருக்கக்கூடும்.

வாகனங்களின் கீழ் சில்லில் கண்ணாடி பொருத்திய வண்டில் அனுப்பப்பட்டு சோதனையிடப்படும்.

இதனால் அண்ணாவோடு சைக்கிளில் பாடசாலை வரும் என்னை நாச்சிமார் கோவிலடியில் காத்திருக்கும் கூட்டத்திலொருவர் மறித்து தங்கள் சைக்கிளில் ஏற்றி பாடசாலை மாணவர்களுக்கான பாதையால் வந்து ஒருமணி நேரத்தை மிச்சப்படுத்துவார்கள்.

காம்ப் தாண்டியதும் குகானந்தபவன் கடையில் ரொஃபி வாங்கி தந்து பாடசாலையில் இறக்கி விடுவதோடு மறுநாளுக்கும் புக் செய்துவிட்டு செல்வர்.

பெண்களை சோதனைசெய்ய 'ஆமிப்பெட்டையள்' எனப்படும் மகளிர் இராணுவம் கடமையில் இருக்கும்.

தட்டாதெரு காம்பில் இருக்கும் அரசமரத்தடியில் இராணுவத்தினர் சிறிய புத்தர் கோவில் வைத்து வணங்கியதோடு அருகில் அவர்கள் வளர்க்கும் குரங்கு ஒன்றும் கட்டப்பட்டிருக்கும்.

அதற்கு முன்னர் புலிகளின் யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி கிட்டு யாழ்ப்பாணத்தில் தன்னுடன் குரங்கு ஒன்று வளர்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் உண்மையிலேயே பாவப்பட்ட ஜீவன்கள் தட்டாதெரு காம்பில் சோதனை செய்யும் பணியிலிருக்கும் ஆமிக்காரன் தான்.

ஏனெனில் அத்தனை ஐட்டங்களையும் உடலில் அணிந்து சப்பாத்து, சட்டித்தொப்பி, ஜட்டி, பெனியன், ரீசேட், சேட், ஜீன்ஸ் அணிந்து பாரமான துப்பாக்கியையும் ஏந்தியபடி, க்ரினைட் குண்டு, துவக்கு சன்ன மகசீன் செய்ன் கொழுவி, வெய்யிலில் வியர்வை வழிய நின்றபடியே பணிபுரிவதால் அல்ல!

தினமும் ஆயிரக்கணக்கான ஆண்களின் அந்தரங்க உறுப்புகளை தடவிப்பார்த்து 'இரண்டு குண்டும் பத்திரமாக இருக்கா' என சோதனையிடுவதாலாகும்.

இங்கு சைக்கிளின் ஹெட்லைட் கூட கழட்டி பார்த்துவிட்டு தான் அனுப்புவர்.

சந்தைக்கு போகும் ஆச்சியின் கூடையிலிருக்கும் மரக்கறிகள் இரும்பு கம்பியால் குத்தி குத்தி பார்க்கப்படும்.

அந்த காய்கறிகள் அடுத்த சிலமணிநேரத்தில் விற்பனையாகி யார்வீட்டிலாவது சமைத்து உண்டுகொண்டிருக்கும் அதே வேளை மறுபுறம் அந்த இராணுவ சிப்பாயின் கையிலிருக்கும் இரும்புக்கம்பி அங்கு சோதனைக்காக நின்றிருக்கும் குப்பைவண்டியை கிளறிக்கொண்டிருக்கும்.

ஒருதடவை எங்கள் பள்ளியில் கோழிச்சாயம் கொண்டுவரச்சொல்லியிருந்தனர்.

அதை நீரில் கரைத்து துண்டாக வெட்டிய வெண்டக்காய், வாழைத்தண்டு, எவர்க்ரீன் இலை, பூக்கள் என்பவற்றை தோய்த்து சித்திரக்கொப்பியில் கலர் கலராக அச்சு பதிக்க வேண்டும்.

பள்ளியில் அச்சு பதித்து முடிந்ததும் கோழிச்சாயம் நிரம்பிய நீரை எறிய சொன்னார்கள், 

பக்கத்து வீட்ல ரெண்டு கோழிக்குஞ்சு நிக்குது தானே அதுக்கு இத அடிச்சு கலரமாத்திப்பாப்பம் என்ற சிந்தனை என் சிறுமூளையில் உதிக்க அதை பொலித்தீன் பையில் இறுக கட்டி புத்தக பையில் வைத்திருந்தேன், 

போதாக்குறைக்கு என்னை விட இன்னும் மூன்று நிறங்கள் அதிகமாக கொண்டுவந்த க்ளாஸ்மேட் ஒருத்தியும் என்திட்டத்தை கூர்ந்து கேட்டுவிட்டு தன்னுடையதையும் தந்திருந்தாள்.

அச்சு பதிக்கும் போது எனது விரலில் துளித்துளியாக சிறிது சாயம்பட்டிருந்தது.

பள்ளி விட்டு திரும்பிவந்தபோது 'கலட்டி காம்ப் ஆமிக்காறன்' சோதனையிடுவதற்காக பையினுள் எட்டி பார்த்தபடி கைய விட்டது மட்டும் தான் தெரியும்.

எவ்வளவு தேச்சு கழுவியும் எனது விரலில் பட்ட நிறச்சாயம் போகவே ஒருவாரத்துக்கு மேல் ஆனது.

அந்த சமயங்களில் சைக்கிள் ஹெட்லைட்டுக்கு மஞ்சள் துணி கட்டி,

சைக்கிள் பாருக்கு கதிரை பின்னும் வயரை சுற்றி,

சைக்கிள் கம்பிகளில் கலர் கலராக பிளாஸ்டிக் பூக்களை கட்டி,

சீட்'க்கு டெய்லர் கடையில் கவர்தைத்து,

இரும்பு கம்பியை நீக்கிவிட்டு சில்வர் கம்பி போட்டு,

மக்காட் நிறைய ரிஃபிளக்டர்கள் பூட்டி

சைக்கிளில் திரிவோர் கொளரவமாக கருதப்பட்டனர்.

விலையுயர்ந்த குடம் மாற்றி கியர் சைக்கிளில் 'டிக்கி டிக்கி'என சத்தம் போட்டபடி தெருவால் போவோரை வீதிக்கு வந்து பெருமையாக பார்த்தது சனம்.

எங்கள் வீட்டுக்கருகில் இருந்த அண்ணனின் நண்பர் சுரேன் என்பவர் சைக்கிளுக்கு எதையாவது புதுமையாக செய்து ஓடித்திரிவார்.

அதில் ஒன்று பிரேக் கட்டையில் வயரை செட் செய்து டைனமோவை ஓடவிட்டு மற்ற வயரை லைட்டிக்கு கனக்‌ஷன் கொடுத்தால் சைக்கிள் பிரேக் அடிக்கும் நேரத்தில் லைட் எரியும். 

இதில் இரும்பு சைக்கிள் ஒரு மின்கடத்தியாக செயல்படும்.

ரிஃபிளக்டர்களினுள் எல்ஈடி பல்ப் வைத்து வயரிங் செய்தால் இரவுகளில் வேற லெவல்ல இருக்கும்,

பனைஓலையை சைக்கிள் போக்கில் கட்டி சில்லு கம்பியில் படுமாறு செட் செய்தால் கியர் குடம் பூட்டாமலே ஓடும்போது 'டிக்கி டிக்கி' என சத்தம்வரும்.

பின் மக்காட்டுக்கும் கீழே ஒரு கம்பியை வளைத்து பூட்டி அதில் விளையாட்டு காரின் சில்லை போருத்தி சைக்கிள் சில்லோடு முட்டுமாறு செட்செய்தால் சைக்கிள் ஓடும்போது இந்த சில்லும் கடிகாரத்தின் பற்சில்லு போல மறுபுறம் சுற்றும்.

அதில் ஏதாவது பொம்மையை ஒட்டிவிட்டால் சைக்கிள் ஓடிம்போது பொம்மை சுற்றுவது பின்னால் வருபவருக்கு தெரியும். 

இந்த நடவடிக்கையின் பயனானது நமக்கு பின்னால் வீதியில் வருபவர் என்டர்டெய்ன் செய்யப்படுவார்.

சைக்கிளின் சேறு தாங்கியில் ப்ளேட்டால் டிசைன் வெட்டுவார்கள்.

சீட்டை தாங்கியுள்ள பாரில் பழைய மோட்டார் சைக்கிள் செய்னை கீடெக் வளையத்தில் கனக்ட் செய்து உள்புறமாக இளைஞர்கள் தொங்கவிட்டிருப்பார்கள்,

'ஆரும் சண்டித்தனம் விட்டா உடன எடுத்து விளாசலாம்'

இந்த நடவடிக்கையில் சைக்கிள் உள்ளூர் அடிபாடுகளின்போது ஆயுதகளஞ்சியமாக பயன்படும்.

சீட்டிலிருந்து பெடலுக்கு போகும் பாரில் கறுப்பு நிற வளைந்த கைபிடி போட்ட குடையை செருகி வைத்திருப்பார்கள்.

சைக்கிள் பாருக்கு பட்டண் வைத்த கவர் அணிவித்திலுப்பார்கள்.

புது சைக்கிள் வாங்கும் போது வரும் பெல்லை கழட்டிவிட்டு இரண்டு மூடி கொண்ட 'க்ளிங் க்ளிங்' பெல்லை மாட்டுவார்கள்.

இதன் மூடியை மட்டும் களவெடுக்கவெனவே கோயில்கள், விளையாட்டிடங்களில் ஒரு கூட்டம் இருக்கும்.

பெண்களின் 'பெல்' சத்தம் 'ட்ரிங் ட்ரிங்' எனவும் ஆண்களின் பெல்சத்தம் 'ணங்கு ணங்கு' என்றும் கேட்கும்.

ஸ்பிரிங் போல இருக்கும் பிளாஸ்டிக் கீடெக் தான் ஒவ்வொரு நிறங்களில் பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள்.

பக்தி மான்கள் கடவுள் படம் போட்ட கீட்டெக், 

அப்பாவியான சிலர் நடிகர்களின் முகம் போட்ட கீடெக், 

மன்மத குஞ்சுகள் இதய உருவிலன கீட்டெக், 

கிரியேட்டிவ்வான சிலர் உடைந்த வால்ப்பிளேட்டில் சிறிய கத்தி செய்து சாணை பிடித்து நுண்ணிய மரப்பிடி போட்டு வைத்திருப்பார்கள்.

எனது கீட்டெக்கில் சிறிய பொம்மைகள், டிக்கி டிக்கி தவளை, 
சிறிய கத்தி போன்றவை காலத்துக்கு காலம் இருந்தது.

அப்போதெல்லாம் மற்றவர்களின் கீட்டெக்கை ஆராய்ந்து பார்க்கவும் அது பற்றி பேசிக்கொள்ளவும் எமக்கு நேரம் இருந்தது.

என் அப்பாவின் சைக்கிளில் நாம் சிறுவயதில் இருந்தபோது பாரில் பலகையாலான சீட் பொருத்தப்பட்டு அதில் உக்காரவைத்து செல்வார்.

குடும்பமாக சைக்கிளில் போகும்போது ஹான்டிலில் நானும், முன் பாரில் அண்ணாவும், சீட்டில் அப்பாவும் கரியலில் அம்மாவும் போனதாக ஞாபகம்.

நாலுபேர் ஏறி இருந்தாலும் நன்றாகவே சைக்கிள் ஓடுவார். என்ன ஒன்று யாரேனும் குறுக்கே வரும் சந்தர்ப்பத்தில் பிரேக் பிடித்தால் தான், பிரேக்ஐ விடும்போது ஹான்டிலில் இருக்கும் எனது டிக்கி பதம் பார்க்கப்படும்.

தினமும் காலை சைக்கிள் ஹாண்டிலில் செம்பரத்தம் (செவ் இரத்த) பூ வைக்கும் பழக்கம் அவருக்கு உண்டு, எங்கள் சைக்கிளிலும் வைத்து விடுவார், எமக்கு அது ஒரு பொருட்டாக தெரியாவிட்டாலும் பாடசாலை, ட்யூஷனில் அதைப்பற்றி கேட்பார்கள்.

விவசாயிகளின் சைக்கிளில் பெரிய கரியல் பொருத்தப்பட்டு அதில் நைலோன் கயிறு சுற்றப்பட்டிருக்கும்.

விறகு வியாபாரிகளின் கரியலில் மேல் நோக்கி நான்கு தடி கட்டப்பட்டிருக்கும்.

மீன்வியாபாரிகளின் கரியலில் மரப்பெட்டி கட்டப்பட்டிருக்கும். ஹாண்டிலில் ஹோண் கட்டியிருக்கும் நைலோன் பை தொங்கும்.

இளம் தாய்மாரின் லேடிஸ் சைக்கிளின் சீட்டின் பின் குழந்தைகளை உட்கார வைக்கக்கூடிய வயரால் பின்னிய பாஸ்கட் இருக்கும்.

இரண்டு கிலோமீட்டருக்கொரு இடத்தில் 'காற்று அடித்து விட 2/=' என கறுப்பு பெய்ண்டால் எழுதியிருப்பார்கள்.

யாழ்ப்பாணத்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வாழ தேவையான சாமான்களும் சைக்கிளிலேயே பயணித்தது.

இந்த காலத்தில் பாவித்து முடிந்த சைக்கிளின் சில்லையும் போக்கையும் தலைகீழாக ஒரு பலகையில் பொருத்தி டைனமோவை பொருத்தி ஒருவர் காலால் அல்லது கையால் சுழற்ற அந்த மின்சாரத்தில் நான்கைந்துபேர் கூடியிருந்து ரேடியோ கேட்பார்கள், ப்ளக் & வைட் டிவி பார்ப்பார்கள்.

பின்னர் 98ல் மின்சாரம் முதலில் ரவுணுக்கும் பின்னர் ஊர் பக்கமும் வந்தது.

எனக்கு சொப்பர் சைக்கிளில் டபிள் ஏத்த பழக்கியவரும் மேலே சொன்ன சுரேன் என்பவர் தான்.

அண்ணாவோடு சைக்கிளில் ஸ்கூல் போவதால் பாரிலிருந்து ஒத்தாசையாக பெடல் போடவேண்டி இருக்கும்.

சொப்பர் சைக்கிள் காலம் முடிய லேடிஸ் சைக்கிளயும் சீட்டில் இருக்காமல் நின்றபடி ஓடித்திரிந்தேன்,

ஆனால் ஏழாம் ஆண்டில் ஏற்கனவே அண்ணா ஓடிய இன்னோரு சைக்கிள் எனக்காக கழுவிப்பூட்டப்பட்டது.

அதன் உயரம் சராசரி மனிதனின் இடுப்பளவு வரும் நீல நிறம். அது சிறுவர்களுக்கான துவச்சக்கரவண்டி.

நிரு ட்டியூஷனில் வேகமாக ஓடிவந்து புழுதி பறக்க ஹாண்டிலை திருப்பி ப்ரேக் அடிப்பது, 

கல்லில் முட்டி முன்சில்லை தூக்குவது, 

கையை விட்டுட்டு ஓடுறது என பல சாகசங்களை நிகழ்தியது அந்த சைக்கிள். இது எட்டாமாண்டுவரை என்னோடிருந்தது.

இங்கு நான் எழுதும் சில சொற்கள் யாழ்ப்பாணத்தில் சிறுவயதை கழிக்காத பலருக்கு புரியாது என நினைக்கிறேன் மன்னிக்கவும்.

வேறு மாவட்டங்களில் வளர்ந்தவர்கள் தற்போது படப்பிடிப்புகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட தெரியாமல் திரைக்கதையை மாற்றச்சொல்லி கெஞ்சுவதை கண்டிருக்கிறேன்.

அப்போது லுமாலா என்ற ப்ராண்ட் சைக்கிள் மட்டுமே 96% பாவனையிலிருக்கும், எப்போதாவது ஹீரோ என்ற ப்ராண்ட் சைக்கிள் தென்படும்.

றலிச் சைக்கிள் வைத்திருப்போர் பண்ணும் அலப்பறையில் செவிப்பறை கிழியும்.

'கிடத்திவச்சு ஆமிண்ட செயின்புளக் ஏறிப்போனா கூட றலிச்சைக்கிள் பக்கிளே அடிக்காம எழும்பி ஓடும்' என்பார்கள்.

என் அண்ணன் பாடசாலை காலத்தில் மட்டும் ஆறு சைக்கிள்களை களவு கொடுத்திருக்கிறான் என்பது அம்மாவின் டேட்டாபேஸ்.

அப்போது களவு போனால் சைக்கிளுக்கும் இஞ்சின் நம்பர் செசி நம்பர் போல் ஒரு சீரியல் நம்பர் இருக்கும் அதை பொலிஸ் முறைப்பாட்டில் கொடுத்துவிட்டால் போதும்.

அவர்கள் எழுதி வைத்துக்கொள்வார்கள்.

ஒன்பதாமாண்டில் பாதை திறந்து மவுண்டன் சைக்கிள், ஜப்பான் சைக்கிள் என்பவை யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்திருந்தன.

சஞ்சீவன் என்ற என் நண்பன் மவுண்டன் பைக் வாங்க நானும் அதை வாங்கி தருமாறு வீட்டில் கேட்டிருந்தேன்.

சைக்கிள் விசயத்தில் எங்கள் குடும்ப மெக்கானிக் வரதன் சொல்வதே வேதவாக்கு. 

புது சைக்கிள் வாங்குவோர் மெக்கானிக்கை கடைக்கு கூட்டிப்போய் காட்டி அவர் தலையாட்டினால் மட்டுமே வாங்குவார்கள்.

'மவுண்டன் பைக் பெருசா பாவிக்காது, ஜப்பான் சைக்கிள் கொஞ்சம் பாவிக்கும்' என அவர் சொல்ல அடுத்த ஆண்டு புது சைக்கிள் வாங்கித்தருவதாக வீட்டில் உறுதியளிக்கப்பட்டது.

பாடசாலை காலத்தில் யாழ்ப்பாணத்தில் வளர்பவர்கள் புது சைக்கிள் வாங்கவேண்டுமானால் ஆசைப்பட்டாலோ, காசிருந்தாலோ முடியாது.

அதற்காக ஸ்கொலர்ஷிப் பாஸ் செய்ய வேண்டும்,

அல்லது வகுப்பில் முதலாம் பிள்ளையாக வரவேண்டும்,

அல்லது 'தம்பிய ஏத்திட்டு ஸ்கூல் போய்வர நெஞ்சு நோகுது, அல்சர் வரப்போகுது, இத அவனிட்ட குடுத்திட்டு எனக்கு புதுசு வாங்கித்தாங்கோ' என்று கேட்க வேண்டும்,

(சைக்கிள்ள போறதுக்கும் அல்சருக்கும் நெஞ்சுக்கும் சம்பந்தமேயில்ல எண்டது சொல்றவருக்கும் தெரியாது, அத ஓமெண்டு கேக்கிறவருக்கும் தெரியாது)

அல்லது 'இயக்கத்துக்கு போவன்' என்று வெருட்ட வேண்டும்.

எட்டாமாண்டில் திட்டமிட்டபடி ஒன்பதாமாண்டில் எனக்கு ஜப்பான் சைக்கிள் வாங்கி தந்தார்கள்.

அது கறுப்பு நிறம், ஆறு கியர் கொண்டது, ஒருவர் மட்டுமே பயணிக்கலாம்.

ட்யூஷனிலும் பாடசாலையிலும் இது புது மொடல் சைக்கிளாக இருந்ததால் நண்பர்கள் எப்போதும் இதை வாங்கி ஓட பிரியப்படுவார்கள்.

ஊர்சுற்றும் நேரங்களில் யாரேனும் ஒருவன் என் சைக்கிளை வாங்கிக்கொள்வான், அதில் ஒருவரே பயணிக்க முடியுமென்பதால் இன்னொருவனுடன் நான் உக்கார்ந்து போவேன்.

வரும்போது என்னை ஏற்றிச்சென்றவன் என் சைக்கிளில் ஓடி வர முதலில் சைக்கிளை வாங்கியவன் இப்போது நண்பனின் சைக்கிளில் என்னை ஏற்றி வருவான். (இந்த சிஸ்டம் புரியும்னு நம்புறேன்)

இப்போதும் நான் சும்மா உக்கார்ந்து தான் வருவேன்.

இப்படி சைக்கிளிலேயே கசூரினா பீச், சாட்டி பீச் என ஸ்கூலை கட் அடித்துவிட்டு ஐந்தாறு பேர் சேர்ந்து முப்பது கிலோமீட்டர் வரை கூட பயணிப்போம்.

ஜப்பான் சைக்கிள் ஏ/எல் வரை என் பாதை பயணங்களில் இருந்தது பின்னர் மச்சான் அதை வாங்கிக்கொள்ள அண்ணா ஓடிய லுமாலா ஜென்ஸ் சைக்கிளை நான் எடுத்துக்பொண்டேன்.

இந்த சைக்கிளில் முன் ஹாண்டிலில் அண்ணன் கரியல் போன்ற ஒன்றை வாங்கி பொருத்தியிருந்தான்.

அதிலேயே கொப்பி, கொம்பாஸ், குடை வைத்திருப்போம்.

சப்போஸ் போக் உடைந்தால் பல்லு உடையாமல் இருக்க என அதில் எக்ஸ்ரா ஷொக்ஒஃப்ஷோபர் பொருத்தப்பட்டிருந்தது.

சைக்கிளை பொறுத்தவரை விபத்து என்பது கோரமானதாக இருக்காது யாராவது விழுந்தால் மற்றவர்களை விட விழுந்தவனே விழுந்து விழுந்து சிரிப்பான், மிஞ்சிப்போனால் முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கும் அவ்வளவு தான்.

எங்களோடு பத்தாமாண்டில் ராஜா ட்யூஷனில் படித்த லோகேஷ் என்பவன் முன்பிரேக் அடிப்பதே ஆண்மைக்கு அழகு என நினைத்துக்கொண்டிருப்பவன்.

அவனுக்கு பெண்கள் தன்னை பார்த்து சிரிக்கவேண்டும் என்ற அடிமனது ஆவல் ஏற்படவே 

ஒரு தடவை கூட படித்த பெண்களுக்கு சம்பியன் லேன் வீதியில் சைக்கிளில் சாகசம் காட்டி கரக்ட் பண்ண போய் வினோஜா என்பவளின் சைக்கிளுக்கருகில் வேகமாக போய் முன்பிரேக் அடிக்க,

முன்சில்லு கழன்டு தனிய போய் ஒரு வீட்டின் வேலிக்குள்ளால் புகுந்துவிட...

இவன் கையோட கழண்டு வந்த சைக்கிள் ஹாட்டிலை இறுக பிடித்தபடி வீதியில் தவள...

பின்சில்லுடன் கூடிய பார் மட்டும் இவன் கட்டளைக்கு பணிந்து பிரேக் அடித்த இடத்திலேயே நின்றிருந்தது.

ட்யூஷன் முடிந்து சைக்கிள் நிற்கும் இடத்திற்கு வந்தால் கண்டிப்பான வாத்திமாரின் சைக்கிள் டயர் குளப்படி மாணவனின் ஆக்'கால் பஞ்சராக்கப்பட்டிருக்கும்.

அழகான பெண்களின் சைக்கிள் முன் பாஸ்கட் சக மாணவனின் காதல் கடிதத்தால் அஞ்சல் பெட்டியாகியிருக்கும்.

பெண்களின் பாவாடை சைக்கிள் சில்லுக்குள் சுற்றிக்கொண்டால் துரித நடவடிக்கை மேற்கொண்டு உதவிட சம்பவ இடத்திற்கு அடுத்த வீட்டு அங்கிளும்,

பெண்களில் சைக்கிள் செயன் கழன்றால் பூட்டிவிட வீதியிலே ஒரு உடன்பிறவா அண்ணனும்,

பெண்களுக்கு எப்போதுமே காற்று அடித்துவிட யாரேனும் ஒரு இழிச்ச வாயனும் இருப்பார்கள்.

சந்தியில் அல்லது விபத்தை தடுக்க சடுதியாக இரண்டு பிரேக்கையும் பிடித்தால் 'கீ...' என்ற சத்தத்துடன் அமர்முடுகி சைக்கிள் நிற்கும்.

லேடிஸ் சைக்கிளிலிருந்தும் 'கீ....' என்ற சத்தம் வரும் ஆனால் பெண்கள் பிரேக் பயன்படுத்துவதில்லை.

அந்த சத்தம் அவர்கள் வாயிலிருந்து வரும்.

மாணவர்கள் வீதியில் போகும் போது அவர்களது வலது கை அருகில் வருபவனின் சைக்கிளின் ஹான்டிலிலேயே இருக்கும்.

மாணவிகள் சேர்ந்து எங்காவது அருகில் போகும்போது சைக்கிளை உருட்டியபடியே ஜூஸ் குடித்தபடி செல்வர்.

காற்று வீசும் காலங்களில் பெண்களின் சைக்கிள் பயணத்தின் போது எதிரில் வரும் நபருக்கு சில அரிய காட்சிகளை காணும் அதிஷ்ட வாய்ப்புகள் கிடைப்பதுண்டு, 

பெண்களும் அதை பெருசா எடுத்துக்கொள்ளாமல் 'ஜஸ்ட் லைக் தட்' என வெட்கப்பட்டு சிரித்துவிட்டு போய்விடுவர்.

குண்டும் குழியுமான ஒழுங்கையில் குலுங்கியபடி வந்து கொண்டிருந்த லேடிஸ் சைக்கிளை நிமிர்ந்து பார்த்த.... வேண்டாம் நீங்கள் வாசிப்பதை நிறுத்தி விட்டு இளஞ்சிவப்பு நிற ரீசேட் போட்ட டீனேஜ்  பெண்ணை நினைக்க ஆரம்பித்து விட்டதால் அடுத்த பந்திக்கு போகலாம். 

ஏன்னா அந்த பொண்ணு இப்ப ஸ்கூலால வரப்போற தன்ர பிள்ளைக்காக சமைச்சு கொண்டிருக்கக்கூடும்.

கவனம் இப்போது நீங்கள் அசடு வழிந்தபடி உங்களை நினைத்து சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் விசாரிக்க போகிறார்கள்.

அதோட சைக்கிளை 'சாக்கிள் சாக்கிள்' என்று சொல்லும் ஒரு நண்பன் உங்களோடு படித்தான். ஆனால் அவன் பெயர் இப்போது ஞாபகத்திலில்லை.

மரநிழல் சூழ்ந்த வளைவான ஒழுங்கைகளில் ஒரு ஜென்ஸ் சைக்கிளும் லேடிஸ் சைக்கிளும் அருகருகே நின்றுகொண்டிருக்குமானால் அதுவே அன்றய அதிக பட்ச காதல்.

இப்படி நின்று பேசிக்கொண்டிருப்பவர்கள் அந்த ஏரியா காதலர்களாக இருக்கமட்டார்கள், அடுத்த ஊரிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வழிப்போக்கர் போல வந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு(!) போவார்கள்.

இதை பார்த்து கூ அடிக்கவென இரண்டு சைக்கிள் குறுக்க மறுக்க போய்வரும்.

'ஆர்ர பெட்டயெண்டு பாப்பம்' என அடுத்த வீட்டு அன்ரி ஆடு ஒன்றை கொறை இழுவை இழுத்துக்கொண்டு அது வழியாக வருவா. (தான் ஆடு தான் மேய்க்கிறாவாம்)

ஆடு பாவம் 'ஏனுந்த மனுசி சிவனே எண்டு படுத்திருந்த என்ன கழுத்துல கயிறு இறுக்க இறுக்க புல்லே இல்லாத பக்கமா எங்க கொண்டு போகுது?' என நாக்கு தள்ள முழுசிய படி இழுபடும்.

கலர் (ஜப்பான்) லேடிஸ் சைக்கிள்கள் இன்னொரு ஜென்ஸ் சைக்கிள் அருகே நின்று கொண்டிருக்காது.

அதனருகே 100 சிசி மோட்டார் சைக்கிளில் ஒரு ஸ்டைலான இளைஞன் நின்றுகொண்டிருப்பான்.

அடுத்த மாதம் 150 சிசி மோட்டார் சைக்கிளில் வேறொரு இளைஞன் நின்றுகொண்டிருப்பான்.

அந்த பெண் சில வருடங்களில் வெளிநாட்டுக்கு திருமணமாகி போனபின் முதலிரவில் ஏன் இரத்தம் வரவில்லை என மாப்பிளைக்கு சந்தேகம் வந்தால் அந்த பழியை ஏற்பதும் அந்த பாவப்பட்ட கலர் லேடிஸ் சைக்கிள் தான்.

எங்களோடு படித்த பஞ்சு என்கிற நிரோசன் ஆமி ஐசி'க்கு போட்டோ எடுக்கும் போதே இன்ஸ்ராக்ராமில் பெண்கள் செல்ஃபி எடுக்கும் போது முகத்தை கோணலாக வைத்துக்கொள்வது போல தற்செயலாக கோணலாக வைத்திருந்துவிட்டான்.

அப்போ பிலிம்ரோல் கழுவிய பிறகு மட்டுமே எடுத்த போட்டோ எப்படி வந்திருக்கிறது என பார்க்க முடியும்.
ஃப்ளாஷ் லைட்டில் கண் மூடியிருந்தால் மட்டுமே ரீட்டேக் எடுப்பார்கள்.

பதினொரு வயதில் (அறியாத வயசு) எடுத்த ஆமி ஐசியை பதினெட்டு வயதில் (அறிஞ்ச வயசு) சைக்கிளை மறித்து ஆமி செக்பண்ணும்  போது..

ஹோயத யண்ணே?

வீட்ட சேர் (சிரிச்சுக்கொண்டே சொல்லோணும்)

எங்க வாறது?

ட்யூசன் சேர் (பயந்த மாரி காட்டினா சந்தேகப்பட்டு காம்புக்குள்ள கொண்டுபோய் விசாரிப்பாங்கள்)

எங்க படிக்கிறது?

யாழ் இந்து கல்லூரி சேர். (Jaffna Hindu College எண்டு இங்கிலீசில சொன்னா அவன் ஜட்டியோட இருத்தி வச்சு நோண்டி நோண்டி கேள்வி கேப்பான். இண்டைக்கி விடமாட்டான், தமிழ்ழ சொன்னா விளங்காம விட்டுடுவான்)

ஐசி எடுக்கிறது.

இந்தாங்க சேர் 

இவளவு நேரமும் சாதாரணமாக இருந்த முகம் இப்போ ஐசிய பாத்திட்டு ஆமி நிமிர்ந்து இவன் முகத்தை பார்க்கும் போது போட்டோவிலிருப்பது போல கோணலாக வைத்திருப்பான்.

அருகில் நின்றிருக்கும் எங்களுக்கு இதை பார்த்ததும் சிரிப்பு வந்தாலும் 'சிரிச்சா போச்சு' என்பதால் அடக்கிகொண்டு ஆளயாள் பார்த்தபடி நின்றிருப்போம்.

ஆனால் பாவம் சைக்கிள் பயண காலங்களில் யாழ்ப்பாணத்தின் பிரஷர், கொலஸ்ரோல், மருத்துவ பகுதிகள் மட்டும் தேடுவாரற்று வெறிச்சோடியே இருந்தது.

'சைக்கிள் ஓடுவது எப்படி?' என்பதை புத்தகத்தை படித்தோ, யூடியூப்பில் பார்த்தோ பழகமுடியாது என்பது போலவே இந்த கட்டுரையையும் அனுபவபட்டவர்களுக்கு மட்டுமே புரியும்.

இந்த பதிவை படிக்கும் போது எங்காவது சில இடங்களில் உங்கள் நினைவுகளும் மீட்டப்பட்டிருந்தால் சந்தேகமே வேண்டாம் உங்கள் இளமைக்காலம் அழகாகவே இருந்துள்ளது. 

இந்த கதைக்கு நீங்கள் தான் ஹீரோ! இந்த பத்தியை ஃபேஸ்புக்கில் கெத்தாக பகிரலாம்.

அல்லது இதைப்படிக்கும் போது 'ஆர்ர செத்தவீடோ ஒண்டும் விளங்கேல்ல' என்று தோன்றினால் ஸாரி நெக்ஸ்டு ஜென்மத்துல கூட நீங்க ட்ரை பண்ண முடியாது, அந்த காலம் இனி திரும்ப வராது.

ஆகவே சாகறதுக்குள்ள யாராவது 'ரைம் மெஷின்' கண்டுபிடிச்சா ஒரு சுற்று போய் பாத்துடுங்கோ!

என் சிறுவயதில் நம் நட்பு. 
என் மகிழ்வை, கோபத்தை எல்லாவற்றையும் உங்கள் மீது தான் காண்பித்திருக்கிறேன்.

அத்தனையும் தாங்கிக்கொண்டு என்னுடன் பயணித்திருக்கிறாய். 

நீ வந்த நாள் முதல் என் வாழ்வில் வளர்ச்சியை மட்டுமே சந்தித்திருக்கிறேன். 

இன்னும் எத்தனை சிகரங்களை நான் தொட்டாலும் உன்னுடன் பயணித்த நாட்கள் மட்டுமே என் மனதில் அழிக்க முடியாத நினைவுகளாய் நிற்கும். 

Love you so much என் துவிச்சக்கர வண்டிகளே! 😍😍😍. 🚲 எங்கிருந்தாலும் வாழ்க!!!!!!!!!!!!

நெகிழ்ச்சியுடன்
நண்பன் கிருத்திகன்.


இங்க Comment பண்ணுங்கப்பா...!

Friday, October 28, 2016

அவள் ஏன் கொஞ்சம் குடிக்கிறாள்? - யாழ்ப்பாணத்து முக்கிய நபரின் பின் கதை!

'முக்கிய விடையம்' பற்றி பேசுவதற்கு முன் ஒரு மூன்று வருடத்திற்கு முந்தய சின்ன ஃப்ளஷ்'back'

அப்போது தொழில் நிமிர்த்தமாக குளப்பிட்டி சந்தி பகுதியில் ஓர் வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த காலம்!

எனது வீடு அருகிலிருந்ததால் நான் காலை கடன், குழியல் என்பவற்றுக்காக வீட்டுக்கு சென்று வருவதால் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தண்ணிவசதி செய்திருக்கவில்லை.

வேலை முடிந்த மாலை வேளைகளில் அரட்டையடிப்போம் நமது அரட்டை குழுவில் இருந்த செந்தூரன் என்ற நண்பனால் அவனது நண்பன் 'சிவா' அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.



சிவா வவுனியாவை சேர்ந்தவன் வேலை நிமிர்த்தமாக யாழ்ப்பாணம் வந்து கொக்குவிலிலுள்ள அவனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பவன்.
உறவினர் வீட்டில் பொழுது போகாததாலும் வேறு நண்பர்கள் இங்கு இல்லாத்தாலும் பெரும்பாலும் அவனுக்கு வேலை இல்லாத நாட்களில் காலையிலேயே நமது வேலைத்தளத்திற்கு வந்துவிடுவான்.

சிவா பார்ப்பதற்கு ஆறடி உயரமாகவும் பருமனாகவும் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நான்கு நாட்கள் மழிக்காத தாடியுடனும் மேவி தலை சீவியும் இருப்பான், வாய் வெற்றிலை காவி படிந்து சிவந்திருக்கும்.

இப்படி இலக்கியத்தனமாக வர்ணிச்சு உங்களை வெறுப்பேத்தாமல் சுருக்கமா எங்கட தமிழ்ழ சொன்னா 'பாக்க மாடு மாரி இருப்பான்'

ஒரு நாள்...

காலை ஒன்பது மணியளவில் உறவினர் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள நமது இடத்திற்கு நடந்து  வந்திருக்கிறான்.

அதுக்கு முதல்நாளிரவு அவன் சாப்பிடுற 'அரியண்ட விலாஸ்'ல என்ன டின்னர்னு தெரியல ஆனா அது ஏதோ சிக்கலை குடுக்க சிவாவுக்கு உபாதை ஆரம்பித்திருக்கிறது!

உண்மையில் அந்த உணவு கடைக்கு வேற ஏதோ பெயர், ஆனால் கடைமுதலாளி சேட் போடாமல் சாரத்துடன் வேர்க்க வேர்க்க நின்றபடி கையால் சாம்பல் அள்ளி அடுப்பை எரித்து உடலை சொறிந்து அதேகையால் காய்கறி வெட்டி சமைத்து அதே கையால் உணவு பதிமறுவதால் நாம் அந்த கடைக்கு 'அலியண்ட விலாஸ்' என பெயரிட்டுள்ளோம். 

ஆடியபாதம் வீதியில் ரயில் கடவைக்கு முன்னால் ஒரு மில்லுக்கும் போட்டோகொப்பி கடைக்கும் நடுவிலிருக்கிறது. 

உங்களுக்கு துரோகிகள் யாருமிருந்தால் அங்கு கூட்டி சென்று விருந்து வையுங்கள்.

பொதுவாக கண் இருக்கிற யாரும் அங்கு சாப்பிடுவதில்லை சிவா சிகரட் பிடிக்ககூடிய இடம் கடையின் பின்னாலிருப்பதால் அங்கு போவான்.

அங்கு முதல்நாளிரவு சாப்பிட்ட சிவா காலை உபாதையுடன் நடந்து வருகிறான்.

மனுசனெண்டா உது சகஜம் தானே முக்காவாசி தூரம் நடந்து வந்திட்டமே இனி திரும்பி நடக்கிறத விட குளப்பிட்டி வீட்ட போறதுக்குள்ள சரியாயிடும் எண்டு நினைச்சு வந்திட்டான்.

அங்கு நமது சக பணியாளர் ஒருவர் தரையை 'மொப்' செய்து துடைத்தவாறு நின்றவர் இவனை கண்டதும்,

'டேய் சிவா! நான் கீழ இறங்கி வந்தா கால்ல மண் பட்டுடும் இந்த மொப்பர் வாளிய கொண்டுபோய் பக்கத்து வீட்டு முன் பைப்பில தண்ணி எடுத்து வா'

'இப்ப என்னால உதல்லாம் செய்யேலாது கொஞ்சத்தால போறன் சும்மா இர்றா' 

பிசியானவன் போல முகத்தை வைத்துக்கொண்டு தன் உபாதையை காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்த செய்தி தாளை புரட்டியபடி நாற்காலியில் அமர போனான்.

'அப்ப நீ இஞ்ச உன்ர பொழுது போக்குக்கு தான் வாறனியே ஒழிய எங்களுக்கேதும் உதவி கேட்டா செய்ய மாட்டாய் என்ன? நேற்றும் என்ர பைக்க வாங்கிகொண்டு இணுவிலுக்க ஆரோ பெட்டய பாக்க போன்னி! இனி பைக் கேட்டு பார்'

என்னடா இது சத்திய சோதனை என்றெண்ணிய சிவா எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மொப்பர் வாளியை வாங்கிக்கொண்டு கம்பீரமாக சிங்க நடை நடந்தான்.

அடுத்தவீட்டு பைப்பை திறந்து மொப்பர் வாளியை வைத்தவனின் ஆழ்மனது சிந்தனைகள் குபு குபுவென கொட்டியது.

உவங்களுக்கு என்ர பிரச்சனைய சொன்னா நக்கலடிப்பாங்கள், 

அதுவா சரியாயிடுமெண்டு நினைச்சாலும் உபாதை ஆர்முடுகி செல்லுதே ஒழிய குறையிற மாரி தெரியேல்ல,

பக்கத்தி வீட்டு அன்ரிய கேட்டுட்டு அவைன்ர வீட்ட போகலாமெண்டா அங்க ஒரு வடிவான பெட்டை இருக்குது, அன்ரிண்ட மேள். அது தற்சமயம் கண்டா இனிமேல் என்னை பாக்கேக்க என்ன நினைக்கும்? அண்டைக்கு தான் கொஞ்சம் சிரிக்கிற மாரியே பாக்க தொடங்கியிருக்கிறாள்.

மொப்பர் வாளி தண்ணிய கொண்டு குளப்பிட்டி வீட்டுக்கு பின்னால ஏதும் பத்தைக்க, அல்லது பாலத்துக்க ஒதுங்குவமெண்டா முன்னுக்கு ஒருத்தன் வாளிய தந்திட்டு பாத்துக்கொண்டு காவல் நிக்கிறான்.

பொட்டம்மான் ரேஞ்சுக்கு திட்டம் போட்டாலும் சட்டென எதுவும் செய்வது சாத்தியமில்லையென எண்ணி மொப்பர் வாளியை தூக்கி கொண்டு மிகமெதுவாக திரும்பி நடக்கிறான்.

இப்போது அவன் உடல் உபாதையால் வடிவேலு டான்ஸ் ஆடும்போது இருக்கும் பின்புறம் போல சற்று வளைந்து காணப்படுகிறது.

வாளியை கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் மீண்டும் கே.கே.எஸ் வீதிக்கே வந்தவன் பஸ் ஒன்று போவதை கண்டு தன்னையறியாமல் அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தை நோக்கி மிக மெதுவாக நகர்கிறான்.

ஐடியா! யாழ்ப்பாணத்தில அவனுக்கு தெரிஞ்ச ப்ப்பிளக் ரொய்லட் ரவுணுக்க பஸ் ஸ்ராண்டுக்க இருக்குது. 

ஒரு பஸ்ஸில ஏறி சீட்டில இருந்தாலே பாதி ரணம் சரியாயிடும் பஸ்ஸில அங்க போனா எல்லாம் ஓகே!

மெய்ன் ரோட் எண்டதால பஸ்ஸுகளும் அடிக்கடி வாறது தானே!

அதிரடி முடிவெடுத்து பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தவனுக்கு வெய்யில் படவே உபாதை உச்ச கட்டத்தை அடைந்தது.

குளப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு கூரையே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் வியர்த்து, முகம் இறுகி, கண் சோகமாய், நா வறண்டு, கால் நடுங்கி கொண்டு நின்றவனுக்கு அண்டைக்கெண்டு பாத்து ஒரு பஸ்ஸும் வாற மாதிரி தெரியேல்ல!

அந்த நேரம் பார்த்து தொலைபேசி அழைக்க போனில் அவன் நண்பன் செந்தூரன்.
கட் செய்தவனுக்கு மீண்டும் மீண்டும் செந்தூரன் அழைக்கவே போன் பேசினால் சிந்தனை சிதறடிக்கப்பட்டு உபாதை குறையுமென எண்ணி ஆன்சர் செய்கிறான்.

'டேய் சிவா போன கட்பண்ணுறாய் என்ன #%^*$>€! எங்க நிக்கிறாய்?'

'குளப்பிட்டி வீட்ட வந்தனான்டா அலுவலா நிக்கிறன் பிறகு திருப்பி எடுக்கிறன் உனக்கு'

'போ €%^*#¥! என்னோட வந்து அவங்களோட செட்டாகீட்டு இப்ப என்ன கழட்ட பாக்கிறாய் என்ன! இதான் உன்ர நட்பு! வருவாய் தானே ஏதும் காசு தேவயெண்டா அப்ப பாப்பம்'

'போடா #%^*$€! இப்ப உன்னோட கதைக்கேலாது ஃபோன வை! மனுசர் இருக்கிற விசருக்க %€^$*#'

செந்தமிழ் தேன் மொழியால் செந்தூரன் மீது செறிவான ஷெல் தாக்குதல் மேற்கொண்டபடி ஃபோனை கட் செய்கிறான்.

பஸ் வர்ற பாடா தெரியேல்ல பேசாம யார் வீட்டு மதிலாவது பாஞ்சு ஆர்ரயும் ரொய்லட்டுக்குள்ள பூருவமா? 

கள்ளனெண்டு ஆளபுடிச்சடிச்சாலும் பறவால்ல ஆனா நடு றோட்டில ஜீன்ஸிலயே போய் அவமானப்பட்டுடப்பிடாது!

மதிலேற சிவா ஜம்பண்ணும் போது 'அதுவும்' வெளிய ஜம்பண்ணிட்டா என்ன செய்யுறது?

மதில் பாய முடிவெடுத்த தருணம் ஒரு மினி பஸ் வரவே திட்டத்தை கைவிட்டு பஸ்சிலேறுவதாக தீர்மானிக்கிறான்.

இந்த இடத்தில் கே.கே.எஸ் வீதி மினி பஸ்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

வெள்ளையில் பச்சை அல்லது சிவப்பு வண்ண கோடு உரிந்து மண்நிற தகரம் தெரிய ROSA என எழுதப்பட்டு உள்ளே கிழிந்த ஸ்பீக்கரில் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடலை ஒலிக்கவிட்டபடி வரும்.

வாசலில் சாம்பல் நிற மார்ட்டீன் சேட் போட்டு கையை சுருட்டி மடித்து கஸியோ மணிக்கூடு கட்டிய கறுப்பு மனிதர் ஒருவர் ஒற்றைக்காலில் தொங்கியபடி கை நடுவிரலில் தாள்காசை செங்குத்தாக மடித்து செருகிய படி மற்ற கையால் பஸ்ஸினுள்ளே எதயோ பிடித்து தொங்கியபடி 'வாற ஹோல்ட் இறக்கம்' என்று கூற உங்களருகில் மினி பஸ் வந்து நிற்கும்.

அருகில் வந்ததும் தான் மினிபஸ் கொண்டக்டரின் பக்கம் பயங்கரமாக சாய்ந்து நிற்பது உங்களுக்கு தெரியவரும்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த எல்லோருக்குமே ஃபக்ட்ரி'ல செய்யேக்கயே மினிபஸ்ஸை சாச்சு தான் டிசைன் பண்ணுவாங்களோ எண்ட சந்தேகமுண்டு!

யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிப்பவர்கள் சொந்த வாகனத்தில் ரூரிஸ்ட்டாக சுற்றி பார்க்காமல் ஒரு முறையாவது மினிபஸ்சில் ட்ரவலர் ஆக பயணித்தீர்களானால், யாழ்ப்பாணத்தின் சராசரி மனிதர்களை உள்ளே காணமுடியும்.

இப்படி ஒரு மினிபஸ் தான் சிவா நின்றிருந்த குளப்பிட்டி பஸ்ஹோல்டை அடைகிறது.

பஸ்ஸ்ராண்டில் நின்னிருந்த ஏனய சிலர் வந்த பஸ்ஸின் ஜனத்தொகையை பார்த்துவிட்டு அடுத்த பஸ்ஸுக்காக பின்வாங்கினர்.

இவர்கள் ஆழ்மனதில் யாரோ 'மினிபஸ் வந்தா பின்னுக்கு சீற்ரீப்பி வரும்' என பலமாக நம்ப வைத்துள்ளார்கள்.

 கொண்டக்டர் சிவாவை பார்த்து

'உள்ள இடமிருக்கு ஏறுங்க' என்கிறார்.

அவர் அப்படி சொல்லும் போது தனது தொங்கி கொண்டிருக்கும் கால் அப்படியே இருக்க ஃபுட்போட்டில் இருக்கும் காலை சற்று நகர்த்தி பின்னால் வைப்பார் அதில் நமது வலது காலை வைத்ததும் மினிபஸ் புகை கக்கியபடி புறப்படும் அதையடுத்து நாம் கதவுக்கு மேலே கையை விட்டு துலாவும் போது அகப்படும் இரும்பு குழாயை உடனே பற்றிகொள்ள வேண்டும்.

இல்லையேல் நடுவீதியில் சடுதியாக 'பொத்'தென்று உட்கார வேண்டிய நிலையேற்படும் இதன் 'பின் வளைவுகள்' மோசமாகும்.

அப்படித்தான் நமது ஹீரோ சிவாவும் ஏறினான்.
சீட்ல இருக்கிற கனவு தான் பலிக்கேல்ல ஆனா பஸ் புறப்பட்டால் இந்த நிலமைக்கு முகத்தில் காத்து பட சுகமா இருக்கும் என நினைத்தவனுக்கு முகத்தில் வந்து மோதியதென்னவோ சக பயணிகளின் வியர்வை நாற்றம் தான்.

இந்த அதிஉச்ச உபாதையில் உள்ளே போனாலும் சராசரி ஆண்களால் மினிபஸ்ஸில் நிமிர்ந்து நிற்கமுடியாது என்பதால் புட்போட் பயணம் தொடர்கிறது.

அந்த நிலமையிலும் அவனை நிம்மதியாக அங்கே நிற்கவிட்டதா நம் சமுதாயம்?
ஒவ்வொரு இறக்கத்திலும் ஒவ்வொருவர் இறங்கி ஏறும் போதெல்லாம் சிவாவும் இறங்கி வழி விட வேண்டி வருகிறது.

ஒவ்வொரு இறக்கத்திலும் நிதானமாக இறங்க வேண்டியவர்கள் இறங்கிய பிறகே 'எங்க ஏறின்னீங்கள்' என விசாரித்து கல்குலேட் பண்ணி காசை வாங்குவார் கொண்டெக்டர்.

அதில் வரும் மீதி சில்லறைகளை பிறகு கொண்டக்டரும் ட்ரைவரும் ஓணருக்கு தெரியாமல் பிரிச்சு எடுப்பாங்கள் என ஓர் கதை உலாவுவதுண்டு.

அது கூட பரவாயில்லை இந்த ட்ரைவர் வேறு ஆமைக்கு பிறந்தவன் போல மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறான்.

ட்ரைவருக்கு இழுத்துவச்சு நாலு சாத்து்சாத்தோணுமெண்டு சிவா மனசுல சட்டுனு தோன்றினாலும்...

இறங்கினாப்பிறகு காசுகுடுத்த அதில பத்து செக்கன் போயிடும் என நினைத்தவன் பொக்கட்டுக்குள் இருந்த அம்பது ரூபாவை கொண்டக்டர் கையில் திணிக்கிறான்.

ஆடியாடி ரவுணை வந்தடைந்த சிற்றுந்து தன் இருப்பிடத்தை அடைகிறது அதிலிருந்து பக்த கோடிகள் 'மிச்ச காசு மிச்சக்காசு' என கோசமிட்டவாறு நடத்துனரை புடைசூழ சிவா சாதிக்கும் நேரம் நெருங்கிவிட்ட சந்தோசத்தில் நடக்க ஆரம்பிக்கிறான்.

'நில்லுங்க அண்ணை'

அவன் கொலரை இரும்புப்பிடி பிடித்தது ஒரு முரட்டு கை.

கொண்டக்கடர் இவன் தோழை பிடித்து நிறுத்தியருந்தார்.

'அண்ண நான் வரேக்கயே காசு தந்திட்டன், குளப்பிட்டில ஏறின்னான்' பாவமாக முகத்தை வைத்த படி சொல்கிறான் சிவா! கால் நடுங்கி வயிறு நொந்து மூளைக்குள் ஏதோ வலி பரவுகிறது.

'மிச்சக்காசு வாங்காம போறியள்'

'அத பிறகு வாங்... நீங்களே வச்சிரு... வேலைக்கு நேரம் போட்டு... முதலாளி பேசப்போறார்...'
நிஜமாகவே இப்போது அழுதபடி சொல்கிறான்.

அவரிடமிருந்து விடுவித்து கொண்டவன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல விரைகிறான் பேருந்து தரிப்பிட பொது கழிப்பறை நோக்கி.

சுத்தவர மக்கள் நடப்பது, ஆட்டோ உரசிச்செல்வது, ஒலிபெருக்கியில் இழுத்திழுத்து பேசும் நிக்சனின் கம்பீரமான விளம்பர அறிவிப்பு குரல், பழ வியாபாரிகளின் கையைபிடித்து பழத்தை திணித்து காசை வாங்கும் யாவார தந்திரங்கள் எதுவுமே அவன் சிந்தனையிலில்லை! அவன் கண்ணில் தெரிவது தான் நெருங்கிக்கொண்டிருக்கும் கழிப்பறை கதவு மட்டுமே!

இதையே துரோணாச்சாரியார் அர்ஜுணனுக்கு குருகுலக்கல்வியின் வில்வித்தை சிலபஸ்ஸில் 'ஒருமுக மனக்குவிப்பு' என்கிறார்.

ஆஹா நெருங்கீட்டான்! 

உள்ள திரும்பினா கதவு தான், கழிப்பறை காசு பத்துருவாக்காக நூறுரூபாவை கல்லாப்பெட்டியிலிருக்கும் பொறுப்பதிகாரியின்(!) கையில் திணிக்க அவர் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போலானது.

ஆனால் அடுத்த கணமே இவன் முகம் காஞ்ச எக்ஸோறா பூ போலானது.

காரணம் கதவடியில் இரண்டு பேர் ஏற்கனவே வெய்ட்டிங்கில் நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே இருப்பவன் தாமதப்படுத்துகிறான் போல!

இவனால் நிற்க முடியவில்லை, 
உள்ளேயிருப்பவன் இருந்திட்டு வந்தாலும் இவங்கள் ரெண்டுபேரையும் ஓரங்கட்ட என்ன செய்யலாம்!?

கொண்டெக்டருக்கு குடுத்த மாரி, கழிப்பறை காவலாளிக்கு குடுத்த மாரி பணத்தாலயே அடிச்சு விலைக்கு வேண்டுவமா?

அதற்கு இவர்கள் மசியாத நேர்மை கொசுக்களாக இருந்தால்..!?

துப்பாக்கி எடுத்து தீர்த்துக்கட்டிவிடலாம் என்றால் இவனிட்ட துவக்கும் இல்லை! இருந்திருந்தாலும் சுடத்தெரியாது.

கதவை தள்ளிக்கொண்டு உள்ள பூருவமா?

முடியாது கதவு உள்பக்கம் தாழ்ப்பாழ் போட்டிருக்குமே!

இங்கேயே ஜீன்ஸுடன் குந்திவிடுவோமா!

டிக்..! டிக்..! 
வினாடி முள் கூட நகர மறுக்கிறது.

கதவருகே காத்திருக்கும் மற்ற இருவரும் தமக்குள் கருத்து பகிர்கிறார்கள்.

'என்ன சீ எண்ட சீவியம்! யாழ்ப்பாணத்தில புத்த கோயில் கட்டுற அரசாங்கம் இதில இன்னும் ரெண்டு கக்கூச கூட கட்டியிருக்கலாமெல்லோ'

'நான் மன்னாரில இருந்து வந்திருக்கிறன் எப்ப யாழ்ப்பாணம் வந்தாலும் பஸ்ஸால இறங்கினவுடனயும் பஸ்ஸில ஏறமுன்னமும் கிரமமா இஞ்ச தான் வாறனான்' யாழ்ப்பாணத்து சுற்றுலா தலம் போல கட்டண கழிப்பறையை பற்றி மகிழ்ந்து புகழ்ந்தார்.

இவரது கூற்றால் மீண்டும் சிந்தனை வயப்பட்ட சிவா தன் கழிப்பறை அனுபவத்தை நினைத்து பார்க்கிறான்.

வீட்டை தவிர கட்டண கழிப்பறையாகட்டும் வேறு தங்கியிருக்கும் வாடகை அறை கழிப்பறை ஆகட்டும் ஒரு சிகரட்டுடன் தான் சென்று அமர்வான் கழிப்பறையின் பூக்கல்லில் இருக்கும் லைட்டரில் பற்றவைத்து சிகரட்டை உள்ளே இழுக்க ஆரம்பிக்க காலைகடன் ஆட்டோமெட்டிக்காக அற்புதமாக வெளியேறும்.

சிகரட் முடிய இவனும் வெளியேறுவான்.

கட்டணக்கழிப்பறையானால் உள்ளே சென்றதும் அந்த சொட்டு சொட்டாய் ஒருகும் தண்ணி பைப், அழுக்கு சுவர், பேசின் குழி, பாசி மற்றும் கல்சியம் படர்ந்த வாளி, கரியால் கிறுக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணங்கள் இவற்றை பார்த்தாலே எமதர்மராஜனுக்கே குமட்டும். 

உங்களுக்கு தேரம் சரியில்லையானால் உள்ளே தவளை, அட்டை, கரப்பொத்தான் அல்லது பல்லி, பெயர் தெரியாத மண்ணிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட பூச்சி என அந்த சீசனுக்கேற்ற பாத்ரூம்மேட்டையும் சந்திக்கலாம்.

சிவாவின் நண்பன் ஒருவனது அனுபவ பகிர்வின் படி அவன் ஜீன்ஸை சுருட்டி கையில் வைத்திருக்காமல் தோழில் இரு ஜீன்ஸ் கால்களும் முன்னால் தொங்குமாறு போட்டு வைத்து வலது ஜீன்ஸ் காலை தூக்கி இடது தோழின் முதுகுபுறமும் இடது காலை வலதுபுறமும் சுற்றியபடி அமர்வானாம்.

'அப்ப ஜட்டிய எங்க வப்பாய்?' எண்டு கேட்டால் உதுக்கெல்லாம் மண்டைய பாவிக்கோணும். 'தலையில கவிட்டு போட்டிருப்பன்' என்று பதில் வருமாம்.

சிவா வழக்கமாக பொது கழிப்பறை உள்ளே சென்று ஈர தரையில் செருப்பை கழற்றி அதன்மேல் ஏறி நின்று ஜீன்ஸை மடித்து முழங்கால் வரை விட்ட்பின் கழட்டி உள்ளாடையையும் கழட்டி சுற்றி கையில் வைத்தபடி மறுகையில் சிகரட்டை பிடித்தபடி அமர்வான்.

'சர்..! புர்..!! டுர்ர்ர்!!!'

என்னடா இது சிந்தனை நடுவே சர்..! புர்..!! டுர்ர்ர்!!! என ஓர் சத்தம் என நாம் எதிர்பார்த்தபடி சந்தேகத்துடன் தன் ஜீன்ஸின் பின்புறம் திரும்பி சோதித்தான் கழிப்பறை வாசலில் நின்றிருக்கும் சிவா.

இன்னமும் பீரங்கி வெடிக்கவில்லை என்பது உறுதியானதும் மற்றவர்களை நிமிர்ந்து பார்த்து தன் தேரத்தை வீண்டிக்க விரும்பாதவனாய் பழையபடி சிந்தனைக்கே செல்கிறான்.

உள்ளே சிகரட்டுடன் சென்று அலுவல் முடிந்ததும் கமக்கட்டுக்குள் சுற்றிய ஆடைகளை செருகிவைத்தபடி கழுவிவிட்டு மீண்டும் செருப்பிலேயே நின்றபடி உள்ளாடையை அணிந்துவிட்டு ஒரு காலை தூக்கி ஒரு ஜீன்ஸ் போடலாம். அது சுலபம்.

அடுத்த கட்டம் தான் படு ஆபத்தானது மறுகாலை ஜீன்ஸ் குழாயினுள் நுளைக்கும் போது பலன்ஸ் தடுமாறி கால் அந்த ஈரநிலத்தில் பட்டாலோ, கை சப்போட்டுக்காக சுவரை தொட்டாலோ, ஜீன்ஸ் நுணி தரையில் பட்டாலோ போச்!

அலர்ஜி ராஷஸ் அப்பிடி இப்பிடின்னு பதினோருவகையான ஸ்கின் ப்ரப்பளங்கள் வந்திரும்.

ஏன் தண்ணீர் குழாயையோ வாழியையோ கையால் தொடுவது கூட கொடிய பாதகமான ஆபத்தான செயல்பாடு தான் என்பது ஆழ்மனது நம்பிக்கை.

அந்த சுகந்த வாசத்தில் நாம் வந்த வேலையை பார்ப்பதற்கு சிகரட் மணம் அவசியம் தான் என்பது சிவாவின் கருத்து.

ஏன் சில மூதேவியள் வெறீல உள்ள போய் சாக்கு கட்டில்ல கிடக்கிற நினைப்பில குப்புற விழுந்து கிடக்கிறதுகளும் இருக்கு!

சிவாவின் சிந்தனை மீண்டும் காத்திருக்கும் கழிப்பறை வாசலில் வந்து நின்றபோது கதவு திறந்தே இருந்தது!

அட இந்த இடைவெளியில் காத்திருந்த அனைத்து பயனர்களும் கடமையை முடித்து வெற்றிகரமாக தரையிறக்கி சென்றிருக்கிறார்கள்!

ஓ அதான் யோசித்து கொண்டிருக்கும் போது நடுவே 'சர்..! புர்..!! டுர்ர்ர்!!!' என சத்தம் வந்ததா!?

இப்போ நம் ஹீரோ தான் கிங்!
ஒன் மான் ஷோ!!
தனி ஒருவன்!!!
சோலோ பர்ஃபாமன்ஸ்!!!
தடை போட யாருமில்லை!

பந்தாவாக உள்ளே நுளைகிறான்.

கதவு சடாரென சாத்தபடுகிறது.

ஆனால் தாழ்ப்பாழ் போடமுடியவில்லை! இறுதி சோதனை!!

அதனால் என்ன குந்தியபடியே குனிஞ்சு தலையால முட்டுக்குடுத்துக்கொண்டே வந்த வேலையை முடிப்போம் என ப்ரஸன்ஸ் ஒஃப் மைண்ட்'ல் முடிவெடுக்கிறான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடைகள் விடைபெற்றுக்கொள்ள...!

இந்த தடவை பலன்ஸ் பார்த்து அங்குமிங்கும் முட்டு படமல் உட்கார அவகாசம் கிடைக்கவில்லை! வருவது வரட்டும்! போவது முதலில் போகட்டும்!!

ம்...! ஆஷ்...! ஸ்ப்பா..!!!

இதற்கு தானே ஆசைப்பட்டாய் சிவா!

பெருமூச்சு.

நிலவில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ரோங்கை விட அதிக பெருமிதம் சிவாவின் முகத்தில்.

இப்போது தான் கண்ணுக்கு உலகம் தெரிய ஆரம்பிக்கிறது சிவாவுக்கு.

காசு பணம் சேத்து என்னத்த..! மனுசருக்கு நிம்மதி வேணும்ப்பா!! என நினைத்தவனுக்கு அந்த பாசி படர்ந்த ஒழுகும் தண்ணீர் குழாயை கையால் தொட சங்கோஜமாயிருந்தது.

சேட் பொக்கட்டுக்குள் கைவிட்டால் ஒரு 20 ரூபா தாள் கிடைத்தது, அதை பைபின் திருகிமேல் மடித்து போட்டு கைபடாமல் மென்வலுவை பிரயோகித்து பைப்பை திருகினால் சரியாக நாலு சொட்டு ஒழுகிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தண்ணீர்க்குழாய்.

குழாயில் தண்ணீர் வரவில்லை!

இதே நேரம் மறுபுறம்

வேலை இருந்ததால் நானும் குளப்பிட்டி வீட்டுக்கு வந்து சேந்ந்திருந்தேன்.

சிவா ஃபோனில் திட்டியதால் அவனுடன் சண்டை பிடிக்க செந்தூரனும் அங்கு கோபத்துடன் தேடி வந்துவிட்டான்.

இவன் சொல்லாம கொள்ளாம எங்க போனவன் எண்டு மொப்பர் வாளிய வேண்டினவனும் முளிக்க...

இங்கு கழிப்பறையில் சிவா தண்ணீர் குழாயுடன் போராடிக்கொண்டிருக்கிறான்.

திண்மம் திரவம் வாயு அனைத்தும் நீரின்றி காய்ந்து போக...

சோதனை மேல் சோதனை!!!

நெஞ்சில் நேர்மை துடிக்க கண்ணில் மின்னல் வெடிக்க நேரம் வரும் ஜெயிக்க என தீயாய் எழுந்தவன் இடுப்பளவு பகுதியை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டி கத்துகிறான்.

'அண்ண தண்ணி வரூதில்ல! டேய் ஆர் வெளீல? முன்னுக்குருக்கிறவரிட்ட தண்ணி வரூதில்லயாம் எண்டு சொல்லிவிடுங்க'

முன்னுக்கிருக்கிறவருக்கு இவன் வரும் போதே காசால அடிச்சி ஆள விலைக்கு வேண்டீட்டானெல்லோ, அவன் இவன்ட கட்டளை கிடைச்சதும் எங்கோ சட்டென எழுந்து நிதானமாக நடந்து சென்றான்.

அவ்வளவுதான் பத்தே நிமிடத்தில் பீய்ச்சியடித்தது குழாயில் தண்ணீர்.

வெற்றிகரமாக களமாடிய மாவீரன் இப்போது கர்வமாக நடந்து கழிப்பறையைவிட்டு வெளியேறுகிறான்.

மீண்டும் பஸ்ஸில் குளப்பிட்டி புறப்படுகிறான்.

முப்பத்திரெண்டு பல்லும் வெளிய தெரிய ஆனந்தமாக வந்து சேர்கிறான் சிவா.

வந்து அமர்ந்தவனை சட்டையில் பிடித்த செந்தூரன்.

'டேய் சிவாப்%#^*$! நான் உனக்கு வேலை வாங்கி தந்தனான், நான் உனக்கு கடன் தாறனான், நான்தான் உனக்கு யாழ்ப்பாணத்திலயே முதல் நட்பு ஆனா நீ என்ன போன்ல பேசிப்போட்டாய் என்ன?'

அதுக்கு சிவா சொன்ன பதில் தான் மேலே நீங்கள் படித்தவை!

இதுக்கு செந்துரன் சொன்ன பதில்
'எட காட்டுவாசி முன்னால குளப்பிட்டி சந்தைக்குள்ள புதுசா ரொய்லட் கட்டி வச்சிருக்கிறாங்கள்.
நீ ஏன் பஸ் எடுத்து போய் இருந்திட்டு வந்தனி?'

அந்த நேரம் சிவான்ட முகத்த பாத்திருக்கோணுமே!

இப்போதும் எப்போதாவது யாழ்ப்பாணம் வந்தால் அல்லது போன் செய்து 'கிருத்திகன் நீங்கள் குறும்படம் எடுக்கிறனீங்கள் தானே இந்த கதைய எடுங்கோவன் நான் ப்ரடியூஸ் பண்ணுறன்' என்பான்.

என்னடா இப்பிடி ஒரு கண்றாவியான கதைய படிச்சிட்டமே எண்டு நீங்க ஃபீல் பண்ணினா நீங்க நினைச்சது சரிதான். ஏன்னா நமது தமிழ் சமூகத்தின் உண்மையான மனநிலை இது தான்.

இதனாலேயோ என்னவோ தமிழர்கள் பூமியின் முதல் இனமாயிருந்தாலும் பல்லாயிரம் வருட பழமையான கட்டடக்கலை மரபை கொண்டிருந்தாலும் தமிழர் பிரதேசங்களில் கோயில், கடைகள், விளையாட்டிடங்கள் எங்குமே கழப்பறை வசதிகள் ஏற்படுத்துவதோ அதை சரியாக பராமரிப்பதோ கிடையாது.

தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உலகே மூக்கின் மேல் விரலை வைக்குமளவுக்கு தஞ்சை பெருங்கோவிலை கட்டியிருந்தாலும் நமது வெஸ்டன் டாய்லெட், ஈஸ்டன் டாய்லெட் அனைத்து கட்டுமானங்களும் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தியதாலேயே 'மூக்கின் மேல் விரல் வைக்கும்' இந்த பத்தியை நீங்கள் படிக்க வேண்டி வந்திருக்கிறது.

என்ன தான் நாங்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் காடுகளில் தான் பேண்ட பரம்பரை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தானோ என்னவோ ஆரம்ப காலத்து புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பார்த்த முதல் வேலை கழிப்பறை சுத்தம் செய்வதாக இருந்தது.

அந்த பணத்தில் தான் இங்கு  திருவிழாகளில் உறவுகளின் கழுத்திலும் கையிலும் தங்கம் மின்னியது.

அதிலும் இங்கு குழியில் குந்தியிருக்கும் முறையில் பிறந்தது முதல் 'இருந்து' விட்டு தாயின்ர தாலிக்கொடிய அடகு வச்சு அந்த காசில பாஸ் போட்டுக்காக முதன் முதல் கொழும்பு போன ஒருத்தன் அப்போது தான் அங்கே முதன் முதல் கொமட்டை கண்டவன் அதில் எப்பிடி 'இருப்பது' என தெரியாமல் அதன் கோப்பையின் இருபுறமும் காலை வைத்து குந்தியிருக்கப்போய் அரைவாசி காரியம் ஆனபின் பீங்கான் உடைந்து கால் உள்ளே போய்... உவ்வேக்!

பிறகு பாஸ் போட் சரிவந்து வெளிநாடு போய் அடுத்த வரியம் தாய்க்காறிக்கி போன் பண்ணினானாம்.

'அம்மோய் உங்க வாற எண்டா கொமட் ஒண்டு கட்டினாதான் ஒரு மாசம் நிக்க ஏலும், இல்லாட்டி சரிவராது.
இங்க அதில இருந்திருந்து பழகீட்டுது. காசனுப்புறன் கட்டுங்கோ'

ஆனா கடைசி மட்டும் அப்பவும் தான் வெளிநாட்டில கக்கூஸ் கழுவுற வேலை தான் செய்யுறன் எண்டத தாய் மனுசிக்கு கூட சொல்லேல்ல!

இப்ப அவன் ஒரு வெளிநாட்டு மாப்பிளை.

ஊருக்கயே வடிவான வாத்தீண்ட ஒரு பெட்டய இந்தியாவில கூப்புட்டு கட்டி வெளிநாட்டுக்கும் எடுத்துட்டான்.

போன வருசம் கோயில் திருவிழாக்கு வந்தவன் பொழுது போகாம கோண்டாவில் உப்புமடம் சந்தீல இருக்கிற தேத்தண்ணி கடைக்கு போன இடத்தில கடைக்காறன் ஸ்ரைலா உயரமா தேத்தண்ணி ஆத்தி ஊத்துறத பாத்திட்டு சொன்னானாம்...

'அங்க கனடாவில எல்லாம் உப்புடி உயத்தி ஊத்தினா தேத்தண்டி குளிருக்கு கட்டியாயீடும்!'

கடுப்பான கடைக்காரப்பெடியன் கேட்டானாம்...

'அப்ப மூத்திரத்த என்ன முறிச்சு முறிச்சோ எறியிறனியள்?'

ஆண்கள் பரவாயில்லை இப்போதும் சிறுநீர் கழிக்க சர்வசாதாரணமாக வீதியோரம் ஒதுங்கலாம் பெண்கள்!?

சுற்றுலா செல்லும்போதோ, வேலை தளங்களிலோ, உறவினர் விருந்துகளிலோ தமிழ் பெண்கள் ஏன் அதிகம் நீர் அருந்துவதில்லை என நாம் எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?

'அவள் ஏன் தண்ணி குடிக்கிறாளில்ல? ஏன் எப்பவும் கொஞ்சமாக தண்ணி குடிக்கிறாள்' என கேணைத்தனமாக அக்கறையுடன் கேட்கும் ஆண்களுக்கு பதில் கிடைக்காத்தன் காரணமும் இதுவே!

கழிப்பறையில் 'இருந்த' போதே உலகையே புரட்டிப்போட்ட 'ஐடியாக்கள்' பல உதித்ததாக அறிஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் பலர் கூறியுள்ளனர்.

இன்றய இளைஞர் யுவதிகளில் கழிப்பறையில் இருந்தபடி சட் செய்வோர், கண்டி க்ராஷ் விளையாடுவோர், பேஸ்புக் பார்ப்போர் அனேகர்.

இப்ப உங்கள் மனதில் ஒரு வினா எழுந்திருக்கும். இந்த மாதிரி ரொப்பிக்ல எழுத இவன தூண்டினது எதுவா இருக்கும்?

இரவு பஸ்ஸில கொழும்பு போய்கொண்டிருக்கிறோம், முருகண்டியில் தண்ணிபோத்தல் வாங்கி குடிச்சுட்டு நடுவழியில் அடம்பிடித்து பஸ்ஸ நிறுத்தி மரத்துக்கருகில் ஒதுங்கிய பெரியவரின் செய்கையை பார்த்து இவை ஞாபகத்துக்கு வர நண்பர்களுக்குள் பேசிக்கொண்டதை 'ரப்'ல் ரைப் செயகிறேன்.

நன்றி.
- கிருத்திகன்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails