Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, October 29, 2011

அவசரமாய் ஒரு குறும்படம் - அவசரம்

நான் பணியாற்றிய மூன்றாவது குறும்படம்.


ஒரு இளம் காதல் ஜோடியின் காதலையும் அடுத்து நண்பர்களின் உதவியோடு நடக்கும் அவசரக்கல்யாணத்தையும் அடுத்து நடக்கும் சில சம்பவளையுமே சொல்ல வந்திருக்கிறது இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் நானும் சம்மந்தப்பட்டிருப்பதால் குறை நிறைகளை விமர்சனம் செய்வது நடுநிலையாக இருக்காது என்பதால்.. சிலஇனிய படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கின்றேன்.
ஒரு காதல் காட்சியில் கதாநாயகி ஆக்டிவ்வாக பர்போம் செய்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த போலிசார் பல மணி நேர விசாரணைகளுக்கு பின்பே இது குறும்படப்பிடிப்பு என அடையாளங்கண்டார்கள்.( அது ஒரு வெளிநாட்டு சணல் வெளியிட்ட ஆவணத்தால் சகோதர மொழியினர் சர்வதேசத்திடம் புகழ்மாலை வாங்கி சூடிக்கொண்ட நேரம் என்பது குறிப்பிடத்தக்கது)
எம்மை வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் வெளியீட்டுக்கு வந்திருந்தவர்கள் எம்மோடு புகப்படங்கள் எடுத்துக்கொண்டது மேலும் என்னை வலுப்படுத்த தூண்டுகிறது...! தற்போது யாழ்ப்பாணம் Town Site கடைகளுக்கு போனாலும் நீங்க அவசரம் Short Movieல நடிச்சீங்க தானே..! என கேட்டு பலவருடம் பழகியவர்கள் போல் புன்னகைக்கிறார்கள். இவர்கள் பாசத்துக்கு நான் தகுதியானவனா என எண்ணும் போது அடுத்து சமூகத்துக்காய் குறும்படத்தில் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கின்றது...!
தம்பீ அதை அப்புடி பண்ணியிருக்கலாம் இதை இப்புடி பண்ணியிருக்கலாம் போன்ற மூத்தவர்களின் உரிமை கலந்த விமர்சனங்களை எனது இப்போது இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் படமான 'யாழ்ப்பாணம்' Short Filmல் நிறைவு செய்ய முயன்றிருக்கிறேன்.
போட்டோ ஆல்பம்
(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது க்ளிக்செய்க)
திரையில் எம்மை பார்த்து படம் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த கரகோஷம் க்ளைமாக்சுக்குமுதலில் வரும் “ பொண்ணை தூக்கறோம் மச்சி நாளைக்கு உனக்கு கலியாணம்டா...!“ என்ற எனது வசனத்தின் போது எழுந்த விசில்கள் எமக்கான இனிய அங்கீகாரம்.

ப்ரோமோ போஸ்ட்டர்


அறிமுகவிழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர்

Music கலையகத்தில் அவசரம் குழுவினர்

இலங்கையின் ஏனய சினிமா துறை சார்ந்தவர்களோடு எம் குறும்பட டீம்

பல்கழைக்கழகத்தில் அவசரம் திரையிடப்ப்டபோது...!

படம் வெளியீடு முதல் ஷோ..!

திரைப்பட இயக்குனர் கேசவராஜாவுடன் குறும்பட இயக்குனர் மற்றும் நடிகர்


இது படப்பிடிப்பின் லொகேஷன் தெரிவுசெய்யும் போது நான் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்...!

இது அவசரம் குறும்பட ட்ரெய்லர் 1




இது அவசரம் குறும்பட ட்ரெய்லர் 2



நன்றி நண்பர்களே! தங்கள் கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, December 16, 2010

SUPER STAR ரஜினி -என்னை பாதித்த 10 படங்கள்



மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...
ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.
வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.
Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.

தில்லுமுல்லு
யாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரியரால் எனக்கு தரப்பட்ட திருநாம் இது.. 
ரஜினி என்ற ஹீரே தனியே ஸரைல் மூலமாகவோ ஆக்ஷன் படங்களாலோ வெற்றிக்கொடி நாட்டியவர் அல்ல என்பதை நிரூபித்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்ரர்வியூ காட்சியில் வரும் I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow. நகைச்சுவை வசனம் என்னை மிகவும் கவர்ந்தது ஏன்னா இதே சீனை சமகாலத்துல அமிதாப்ஜியும் பண்ணியிருகாகாரு.. ஆனா எப்டியிருக்குன்னு ஒப்பிட்டு பாத்துக்குங்க.


பாட்ஷா
நினைவு தெரிந்த நாட்களில் நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்) நெறய்யபேரு “நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி“ன்னு சொல்லிட்டு திரிவாங்க ஏன்டா இவங்க நூறு தடவை இந்த ஒண்டயே திருப்பி திருப்பி சொல்றாங்கன்னு நெனச்சதுண்டு ஆனா படம் பாத்ததில இருந்து இப்ப வரைக்கும் நான் யாருக்காச்சும் வாக்கு குடுக்கும் போது இந்த வாக்கியமும் கண்டிப்பாக இடம் பெறுகிறது....  
மாணிக்கமாக முதலில் ரஜினி நிறையவே ஒதுங்கிப்போவார் பின்னர் தன் ஃப்ளாஷ்பேக்கில் தன் கடந்த கால அடிதடி வாழ்கையை பற்றியும் அது காலத்தின் தேவையாலேற்பட்டது எனவும் கூறி தூள்கிளப்பிய படம்.
ஸ்ரைலுக்காகவும் வசனங்களுக்காகவும் நான் பல தடவை பார்த்த படம்.

முத்து
இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த காலங்களில் பாடல்கள் வெளியாகி கொளும்பு சர்வதேச ஒலிபரப்பு ரேடியோவில் கேட்டதுண்டு(அப்ப நியூசுக்காக வீட்டில் பேட்டரி ரேடியோ போடப்படும் நேரத்தில் ஏரியாவே அந்த இடத்துக்கு ஷிஃப்ட் ஆகி அமைதியா உக்காந்திருக்கும்..)
படத்தை சிறுவயதில் பார்த்தபோது ரஜினியை தவிர எதுவுமே நினைவில் இல்லை...
 பின்னாளில் ரஜினி மீனாவுடன் மேடையில் பேசும் காட்சியை வகுப்பில் பேசி மற்றவர்களின் வாயை பிளக்கவைப்பதுண்டு... 

அண்ணாமலை
பாடல்கள் வெளியானதும் ஊருக்குள் அனைவர் வாயிலும் ஒலித்ததால் பிடித்துபோனது பின்னர் தான் யாழ்சேவை ரேடியோவில் கேட்டதுண்டு (அப்ப அந்த ரேடியோ டிக்ஷனரியில் புதுப்பாட்டு என்பது வெளியாகி 6மாதம் கடந்த படங்களிலிருந்து ஒலிப்பது) இந்த சூழ்சிலையே படம்பார்க்கும் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது பின்நாளில் மனதில் நின்ற படங்களில் ஒன்றாகியது.


அருணாச்சலம்
ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால் அன்று இரவு அந்த அயலுக்கே கொண்டாட்டம். ஏற்கனவே பார்க்காமல் பென்டிங்கில் இருக்கும் பூப்புனித நீராட்டுவிழா கொப்பியையும் அன்று தான் பார்ப்பார்கள். ஊரில் ரீவி டெக் வாடகைக்கு விடும் ஒருவரை பிடித்து ஒவ்வொருவரும் பங்கு போட்டு ஜெனரேட்டருக்கு மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து மாலையில் விழா ஆரம்பமாகும் முதலில் சொந்தகாரர் கலியாணவீட்டை பார்ப்பார்கள் பிறகு பெரியவர்கள் திருவிளையாடல் வசந்த மாளிகை (ஊருக்குள்ள எப்ப படம் போட்டாலும் இதயேதான்... ) பார்ப்பார்கள் ஏதாவது ஒரு விஜயகாந் படம் இளைஞர்கள் எற்பாட்டால் திரையிடப்படும். இப்படியான ஓர் நடுநிசியில் பார்த்த படம் அண்ணாமலை.
படத்தின் கதையைவிட ரஜினியும் அந்த படம் பார்த்த சூழலுமே அந்தப்படத்தை பற்றி பசுமையான நினைவுகளாயுள்ளது. (இப்ப 6 படம் உள்ள டிவிடி 50ரூபாய்.. மடிக்கணினியில் Blue rayயில் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி கிடைத்ததில்லை)


படையப்பா
இதுவும் மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் பார்த்த படம் தான் படம் பார்த்த போதுதான் பாடல்கள் அறிமுகமாயிற்று... படம் பார்த்து பல காலத்துக்குபின்னும் வெற்றிக்கொடி கட்டு பாடல் இசை மனதில் ஒலித்துகொண்டேயிருந்தது. ரஜினி புலியாக மாறுவது மற்றும் வேல் பறந்து வரும் க்ராபிக்ஸ்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு (இப்ப அதல்லாம் கைவந்த கலை என்பது வேறு...) நீலம்பரி வீட்டில் ஊஞ்சலை இழுத்து போட்டு உக்காருவது சுருட்டை சுற்றுவது பாம்புக்கு முத்தம் கொடுப்பது என சில காட்சிகளே அந்த வயதில் மனதில் நின்றன... அப்போது தான் ராஜா தியேட்டர் ஜீன்ஸ் படத்துடன் கோலாகலமாக இயங்க தொடங்கியிருந்தது (புலமைபரிவில் சிறப்பாக பாஸ் செய்ததால் என் முதல் தியேட்டர் பிரவேசமும் அதுவே...) படையப்பா தியேட்டரில் ஓடும் போது கட்டாயம் கூட்டிப்போகவேண்டும் என வீட்டில் வரம் கேட்டடு அனுமதித்தார்கள் ஆனால் இன்னும் படையப்பா அந்த தியேட்டரில் ஓடவேயில்லை...


பாபா
ஸ்பைடர் மேன் பாதிப்பு இருந்ததாலும் ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பை எகிறவைத்ததாலும் (சின்னிஜெயந்தின் “ஒரு தடவை சொன்னா“  படமும் ஒரு காரணம்..) படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடியது... படம் வெளியான புதிதில் வவுனியாவில் தங்கியிருந்த ஹோட்டலில் பார்த்த படம்(பள்ளியில் நான் தான் முதலில் பார்த்தேன்...). “பாபா கவுண்டிங் “ காட்சிகளும் நடைகண்டு அகங்காரம் பாடலும் விரும்பி ரசித்தேன்... 


சந்திரமுகி
16 வயதினிலே (எனக்கு தான்) படம் ரிலீஸாகும்நேரம் (சந்திரமுகி தான்) நமக்கு chicken pox வந்து 16 நாட்கள் எங்கேயும் போககூடாது என்று சொல்லிவிட்டார்கள். பொழுது போவதற்காக ஆனந்த விகடன்கள் என் படுக்கையை சுற்றி நிறைந்திருந்தது காலக்கொடுமையாக ரேடியோவில் பாடல்களும் அத்தனைபுத்தகங்களிலும் சந்திரமுகி பற்றிய நியூஸ்களும் வித்யாசாகர் போன்றவர்களின் பேட்டிகளுமாக என்ன கொடும சரவணா...!!! 
ஆர்வகோளாறில் இடையிலேயே சுகமாகிவிட்டதாக கூறி குலதெய்வம் கோயிலில் தோய்ந்து விட்டு அடுத்தநாள் நண்பர்களோடு தியேட்டருக்குள் புகுந்துவிட்டேன்....
சச்சின் விஜய் ரசிகர்கள் பாடசாலையில் நம்மோடு யுத்தம் செய்த வரலாறுகளுமுண்டு 
அப்புறம் தெலுங்கு டயலாக்ஸ் கூட மனப்பாடமாகும் வரை பார்த்து தீர்த்து விட்டோம்
900+ நாட்கள் ஒடிய படத்தின் சிறப்புகளை நான் இங்கு சொல்லதான் வேண்டுமா?


சிவாஜி
சங்கர் ரஜினி ரகுமான் சுஜாதா காமினேஷன் என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கும் போதே தியேட்டருக்கு போக வீட்டில் அனுமதி பெற்றுவிட்டேன். 


ரிலீஸாகும் நாள் காலை 3.00மணியோ 4.00யோ தெரியவில்லை கிளம்பி வழியில் 4..5.. இடத்தில “ஏ மல்லி கேஃபியோ ரைம் ஹோதய யண்ணே?“ என்ற கேள்விகளுக்கு விளக்கம் குடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே பெரிய கூட்டமே றோட்டில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தது விசாரித்ததில் “பலாலில ஷெல் விழுதெண்டு ஃப்ளைட் வரேல்லயாம் நளைக்கி தான் படம் வருமாம்...”


அப்புறம் வகுப்பிலும் சுவரெல்லாம் ரஜினி படம் வரைந்து physics போரடிக்கும் நேரத்தில் தூங்கும் அறையை OFFICE ROOM என பெயரிட்டு அதை அழிக்க பிரின்ஸிப்பல் வகுப்புக்கே பெய்ன்ட் அடித்தார்.


வெள்ளை ரஜினியும் மொட்டை BOSSம் கவர்ந்தார்கள். இந்தியில் மொழிபெயர்ப்பான (ரீகேடா)இப்பட பாடல்காட்சியை காமடியாய் கலாய்க்கும் (கோல்மால் ரிட்டர்ன்ஸ்) பாடல் கீழே நேரம் கிடைக்கறப்போ பாத்துக்குங்க.







குசேலன்
இதுவும் சோதனை மேல் சோதனை காலம் அதுவும் உயர்தர பரீட்டை சோதனைக்காலம்.
பரீட்டை தெடங்கின நாள்ளயே படமும் ரிலீஸ்...
பரீட்டைச காலம் யாருமே போகமாட்டாங்கள் ஆனா அன்னிக்கு பரீட்சை முடிந்ததும் மாலை கிட்டதட்ட மாறுவேடத்தில் தியேட்டருக்குள்ள நுளைஞ்சு பாக்கும் போது தான் புரிஞ்சுது அந்த பட க்ளைமாக்ஸ் சீன் பக்கத்தில ப்ரன்ஸ வச்சு கொண்டு பாக்காம விட்டது எவ்வளவு நல்லதெண்டு. நண்பர்கள் கூட இருக்கும் போது படம் பாத்து கண்ல தண்ணிவுட்டா நல்லாயிருக்காதுல்ல...


எந்திரன்
தொழிநுட்பத்தை பாத்து பிரம்மிச்ச படம்...
அதுக்கு போகும்போது ஒரு சிக்கலும் இல்லையோ எண்டு யோசிக்கிறாக்கள் இங்க போய் பாருங்கோ..
இதில தெரிஞ்சாக்கள் யாராவது நிக்கினமோ..?
இணையத்தில் (எனக்கும் தான்) முதன்முறையாக வெளியான எனது எந்திரன் விமர்சனம் இங்கே


சுல்த்தான் படத்திலிருந்த நம்பிக்கை போய் பலகாமாச்சு (நாங்க தான் முனன்முதல் ரஜினிக்கு 3டி அனிமேஷன் செயோணுமெண்டு தலைவிதியோ தெரியவில்லை..)
இவ்வளவு நேரமும் பொறுமயா படிச்சதுக்கு நன்றி 




ரஜினி 10 ஜ தொடர... ரஜினி பற்றி எழுதகூடிய தகுதி இருப்பவரான் ஜீவதர்ஷன்  அண்ணாஅவர்களை அழைக்கிறேன் இவர் ஒருதடவை எழுதினா நூறுபேர் எழுதின மாதிரி...
ஏன்னா இவர் நூறு தடவை எழுதினாலும் அந்த ஒருத்தர பற்றி தான் கூட எழுதுவார்


அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை அழைக்கிறேன்.


விமர்சன பதிவுகள் அருமையாக எழுதக்கூடிய மருதமூரான் அண்ணாவை ரஜினி பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.


புதிதாக எழுதத்தொடங்கியிருக்கும் பதிவர் திருத்தணிகேசன் அவர்களின் ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.



இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, July 3, 2010

அபிமான நடிகைகளின் மேக்கப் இல்லாத படங்கள்.

வெள்ளித்திரையில் பார்த்து ஜொள்ளிய இந்தி நடிகைகளின் மேக்கப் இல்லாத நிஜ முகங்களின் தொகுப்பு.
மனதை திடப்படுத்திக்கொண்டு தொடரவும்.


மேக்கப் இல்லாத ராணி முகர்ஜி 
Rani Mukherjee

மேக்கப் இல்லாத வித்யா பாலன் 
Vidya Balan

மேக்கப் இல்லாத சுஷ்மிதா சென் ஊர்மிளா
Sushmita Sen and Urmila 

மேக்கப் இல்லாத தனுஸ்ரீ 
Tanushree Dutta 

மேக்கப் இல்லாத சுஷ்மிதா ஷென்
Sushmita Sen 

மேக்கப் இல்லாத ப்ரியங்கா கோப்ரா
Priyanka Chopra
 

மேக்கப் இல்லாத ப்ரீதி ஜிந்தா
Preity Zinta

மேக்கப் இல்லாத லாரா தத்தா
Lara Dutta 

மேக்கப் இல்லாத கத்ரினா கைஃப்
Katrina Kaif 

மேக்கப் இல்லாத கரீனா கபூர் கரிஷ்மா கபூர்
Kareena Kapoor and Karishma Kapoor


மேக்கப் இல்லாத கஜோல்
Kajol

மேக்கப் இல்லாத இஷா கபூர்
Isha Kopikar

மேக்கப் இல்லாத ஈஷ்த்தியேல்
Esha Deol 


மேக்கப் இல்லாத தீபிகா படுகோனே
Deepika Padukone 

மேக்கப் இல்லாத பிபாஷா பாசு
Bipasha Basu 

மேக்கப் இல்லாத அமிதா அரோரா கான்
Amrita Arora Khan 

மேக்கப் இல்லாத அமிஷ் படேல்
Amisha Patel 


மேக்கப் இல்லாத ஐஸ்வர்யா ராய் பச்சன்
Aishwarya Rai Bachchan 




ஓட்டுப்போடும் தார்மீக கடமையை ஆற்றிவிட்டு செல்லவும்






இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, June 26, 2010

சுறா பெரு வெற்றி - சன் குடும்பத்தினருக்கு

சராசரி விஜய் ரசிகர்களையும் எரிச்சலூட்டி வேட்டைக்காரன் தேவலாம் என்று சொல்ல வைத்த இளைய தளபதி விஜயின் 50வது அரும் படைப்பு சுறா.


விஜயின் தந்தை கதைத்தேர்வுசெய்தாராம். ஆச்சரியப்படுமளவுக்கு ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கியிருந்தார்கள். என்னோடு தியேட்டருக்கு வந்திருந்த நண்பன் விஜயின் தீவிர ரசிகன். அவனே மொக்கை படம்னுட்டு தூங்கிட்டான்.
சில இடங்களில் வடிவேலுவே சவசவத்து போகிறார்.
விஜயின் பட்டி தொட்டி ரசிகர்களே கிழிச்சு காயவிடடிருக்கும்போது நாம புதுசா குறைசொல்ல ஒண்ணும் இல்லைங்கிறதால அத விட்டுடுவேம்.
படம் ஆரம்பச்சவுடனே சன் பிக்சர்ஸ் பெயரை பாத்தவுடனே தியேர்டரே விசில்ல அதிர்ந்துது. (அதுதான் கடைசி விசில்னு அப்ப புரியல..) கலாநிதி மாறனுடைய பெயரும் விஜய் 50வது படம் என்று டைட்டிலுக்கு நிகரா தூள் கௌப்பிச்சுது.

சுப்பர்ஸ்டாரே வர தயங்கினாலும் விஜயின் அரசியல் பிரவேசம் உறுதியாயிருப்பது அனைவரும் அறிந்ததே.
காங்கிரசாருடன் விஜய் நடத்திய பேச்சு வார்த்தையும் தெரிந்ததே.

விளம்பரம் தேட கற்பு பற்றி பாரிய பரபரப்பு அறிக்கைகளை விடுத்து தமிழ் நாட்டு பெண்களின் மானத்தை கப்பலேற்றிய நடிகைகளையே சேர்த்து கொள்ளும் நல்ல உள்ளம் காங்கிரசாருக்கு உண்டு.
காங்கிரசும் தி.மு.க வும் கூட்டணியாயிருந்தபோதும் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த ஒரு நடிகர் காங்கிரசுக்கு செல்வது கலைஞர் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை காங்கிரசின் மேல் திருப்பும்.

குடும்பமாக பல வருடம் அரசியல் செய்பவர்கள் சரியான காலத்தில் இதனை புரிந்து கொண்டு சுறாவை தயாரித்திருக்கிறார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என அம்மா கட்சி தொடர்ந்து புகார் தெரிவித்து கொண்டிருப்பது போன்று சொந்த செலவில் படமெடுத்து மேதகு டாக்டர் விஜயின் நன் மதிப்பை(!) குறைத்து தியேட்டர் உரிமையாளர்களினது வெறுப்பை மட்டுமல்ல சராசரி விஜய் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டதாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் ஆப்பரேசன் சுறா சக்சஸ்.   

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails